பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது . அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன . கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .
தண்ணி கொதிக்கும் வரை நிறைய வேலை செய்யலாம் என்று பல பாத்திரங்களை கழுவி ஊத்தியிருக்கிறியள் போல.
ReplyDeleteயார் இந்த கிஷோகர் என்று கடுப்பாகினாலும் ஒரு குறுநாவலுக்கான மூலக்கருவாகும் அளவுக்கு ட்ரெண்ட்ல இருக்கிறாப்ல.
மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே நீங்கள் களத்தில் இறங்கி பலரை இழுத்துள்ளதால் நாம் எங்கு கால் வைத்தாலும் கிளைமோர் வெடிக்கும் என்ற பயத்தால் அதிகம் எழுத முடியவில்லை.
அப்புறம்... பேசாம தேத்தண்ணியை போட்டுகொண்டு கொ பு கா வை எழுதி முடியுங்கோ.
இதை எல்லாம் வாசிப்பதற்கா பிறந்திளைத்தேன் எம்பெருமான்.