நேற்றைய ‘அறிவோம் பகிர்வோம்’ நிகழ்ச்சியில் ‘விளமீன்’ சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
நாற்பத்தைந்து நிமிடங்கள் அச்சிறுகதையை வாசித்துவிட்டு பின்னர் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அக்கதையைப் பற்றியும் கதைக் களம் சார்ந்த சமூக விசயங்களையும் Shanthiயும் Kaladeviயும் அலசினார்கள். நானும் என் பங்குக்கு சில அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன்.
'எழுதப்பட்ட பின்னர் கதைகள் நம்மிடமிருந்து பிரிந்துபோய்விடுகின்றன' என்று 'சந்திரா என்றொருத்தி இருந்தாள்' சிறுகதையில் சொல்லப்பட்டிருக்கும். நேற்றைய நிகழ்வில்கூட என்னால் ஒரு வாசகராகத்தான் அக்கதையைப்பற்றி பேசமுடிந்தது. அதென்ன ‘பதின்மக் காதலின் இரண்டாம் நாள்’ என்று சாந்தி அக்கா கேட்டார். அப்படியொரு வாக்கியம் எழுதும் கணம் எப்படி என்னுள் வந்து உதித்தது என்று கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இக்கணங்கள் கொடுக்கும் உவகையே தொடர்ந்து எழுதவும் வைக்கிறது.
Shanthi Sivakumar, Kaladevi Balashanmugan இருவருக்கும் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த Focus Thamil அமைப்புக்கும் நன்றி.