Skip to main content

நேர்காணல் - Focus Tamil



நேற்றைய ‘அறிவோம் பகிர்வோம்’ நிகழ்ச்சியில் ‘விளமீன்’ சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

நாற்பத்தைந்து நிமிடங்கள் அச்சிறுகதையை வாசித்துவிட்டு பின்னர் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அக்கதையைப் பற்றியும் கதைக் களம் சார்ந்த சமூக விசயங்களையும் Shanthiயும் Kaladeviயும் அலசினார்கள். நானும் என் பங்குக்கு சில அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன்.

'எழுதப்பட்ட பின்னர் கதைகள் நம்மிடமிருந்து பிரிந்துபோய்விடுகின்றன' என்று 'சந்திரா என்றொருத்தி இருந்தாள்' சிறுகதையில் சொல்லப்பட்டிருக்கும். நேற்றைய நிகழ்வில்கூட என்னால் ஒரு வாசகராகத்தான் அக்கதையைப்பற்றி பேசமுடிந்தது. அதென்ன ‘பதின்மக் காதலின் இரண்டாம் நாள்’ என்று சாந்தி அக்கா கேட்டார். அப்படியொரு வாக்கியம் எழுதும் கணம் எப்படி என்னுள் வந்து உதித்தது என்று கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இக்கணங்கள் கொடுக்கும் உவகையே தொடர்ந்து எழுதவும் வைக்கிறது.
Shanthi Sivakumar, Kaladevi Balashanmugan இருவருக்கும் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த Focus Thamil அமைப்புக்கும் நன்றி.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.