Skip to main content

குமரித்துறைவி


ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரும் நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயலை விபரிக்கும் இச்சொற்களில் மனம் பல கணங்கள் நிலைத்து நின்றது.
"இத்தகைய நிகழ்வுகளில் செய்யுந்தோறும் செயல் பெருகுகிறது. திருத்துந்தோறும் பிழை பெருகுகிறது. ஒருகட்டத்தில் செய்யாச் செயல்களும் செய்த பிழைகளும் மட்டுமே தெரியவர, அடிவயிற்றில் அனலென அச்சமும் ஆங்காரமும் மட்டுமே எஞ்சுகிறது. செயலே ஒவ்வொரு கணமும் என்றிருக்க ஏதும் செய்யாமல் இருப்பதுபோல் உள்ளம் பிரமை கொள்கிறது. விசை மிகுந்து மிகுந்து ஒரு கட்டத்தில் உளம் நொய்ந்து கண்ணீர் விடுகிறோம். நம்பிக்கையிழந்து விழுகிறோம். அந்த இருண்ட ஆழத்தில் இருந்து எழுந்து மறுகணமே எழுந்து மேலும் வெறிகொள்கிறோம். மாளா ஊசல். ஓய்வில்லா அலைக்கொந்தளிப்பு. தாளமுடியாத உணர்வாடல். ஆனால் அது நாமிருக்கும் பேரின்பநிலை என அறிய அதைக் கடந்துவந்து திரும்பி நோக்கவேண்டியிருக்கிறது."
நிகழ்வுகளில் தன்முனைப்பையும் முட்டையில் மயிர் பிடுங்குபவர்களையும் இவ்வரிகள் விமர்சிக்கின்றன. Nit picking and inability to see the holistic picture.
"நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே அவர்கள் தங்கள் சொந்த விஷயம் பற்றி மட்டுமே நினைக்கிறார்களா? இல்லை. அவர்களுக்கு இத்தனை பெரிய விழாவை மனதால் அள்ள முடியவில்லை. இந்த பெருக்கில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். வேறேதும் கண்ணுக்குப் படவில்லை."

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.