Skip to main content

குமரித்துறைவி


ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரும் நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயலை விபரிக்கும் இச்சொற்களில் மனம் பல கணங்கள் நிலைத்து நின்றது.
"இத்தகைய நிகழ்வுகளில் செய்யுந்தோறும் செயல் பெருகுகிறது. திருத்துந்தோறும் பிழை பெருகுகிறது. ஒருகட்டத்தில் செய்யாச் செயல்களும் செய்த பிழைகளும் மட்டுமே தெரியவர, அடிவயிற்றில் அனலென அச்சமும் ஆங்காரமும் மட்டுமே எஞ்சுகிறது. செயலே ஒவ்வொரு கணமும் என்றிருக்க ஏதும் செய்யாமல் இருப்பதுபோல் உள்ளம் பிரமை கொள்கிறது. விசை மிகுந்து மிகுந்து ஒரு கட்டத்தில் உளம் நொய்ந்து கண்ணீர் விடுகிறோம். நம்பிக்கையிழந்து விழுகிறோம். அந்த இருண்ட ஆழத்தில் இருந்து எழுந்து மறுகணமே எழுந்து மேலும் வெறிகொள்கிறோம். மாளா ஊசல். ஓய்வில்லா அலைக்கொந்தளிப்பு. தாளமுடியாத உணர்வாடல். ஆனால் அது நாமிருக்கும் பேரின்பநிலை என அறிய அதைக் கடந்துவந்து திரும்பி நோக்கவேண்டியிருக்கிறது."
நிகழ்வுகளில் தன்முனைப்பையும் முட்டையில் மயிர் பிடுங்குபவர்களையும் இவ்வரிகள் விமர்சிக்கின்றன. Nit picking and inability to see the holistic picture.
"நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே அவர்கள் தங்கள் சொந்த விஷயம் பற்றி மட்டுமே நினைக்கிறார்களா? இல்லை. அவர்களுக்கு இத்தனை பெரிய விழாவை மனதால் அள்ள முடியவில்லை. இந்த பெருக்கில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். வேறேதும் கண்ணுக்குப் படவில்லை."

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.