Skip to main content

குமரித்துறைவி


ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரும் நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயலை விபரிக்கும் இச்சொற்களில் மனம் பல கணங்கள் நிலைத்து நின்றது.
"இத்தகைய நிகழ்வுகளில் செய்யுந்தோறும் செயல் பெருகுகிறது. திருத்துந்தோறும் பிழை பெருகுகிறது. ஒருகட்டத்தில் செய்யாச் செயல்களும் செய்த பிழைகளும் மட்டுமே தெரியவர, அடிவயிற்றில் அனலென அச்சமும் ஆங்காரமும் மட்டுமே எஞ்சுகிறது. செயலே ஒவ்வொரு கணமும் என்றிருக்க ஏதும் செய்யாமல் இருப்பதுபோல் உள்ளம் பிரமை கொள்கிறது. விசை மிகுந்து மிகுந்து ஒரு கட்டத்தில் உளம் நொய்ந்து கண்ணீர் விடுகிறோம். நம்பிக்கையிழந்து விழுகிறோம். அந்த இருண்ட ஆழத்தில் இருந்து எழுந்து மறுகணமே எழுந்து மேலும் வெறிகொள்கிறோம். மாளா ஊசல். ஓய்வில்லா அலைக்கொந்தளிப்பு. தாளமுடியாத உணர்வாடல். ஆனால் அது நாமிருக்கும் பேரின்பநிலை என அறிய அதைக் கடந்துவந்து திரும்பி நோக்கவேண்டியிருக்கிறது."
நிகழ்வுகளில் தன்முனைப்பையும் முட்டையில் மயிர் பிடுங்குபவர்களையும் இவ்வரிகள் விமர்சிக்கின்றன. Nit picking and inability to see the holistic picture.
"நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே அவர்கள் தங்கள் சொந்த விஷயம் பற்றி மட்டுமே நினைக்கிறார்களா? இல்லை. அவர்களுக்கு இத்தனை பெரிய விழாவை மனதால் அள்ள முடியவில்லை. இந்த பெருக்கில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். வேறேதும் கண்ணுக்குப் படவில்லை."

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக