சில வாரங்களுக்கு முன்னர் லெ. முருகபூபதியின் நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு வரியில் கடந்துபோன அவருடைய பிரிட்டிஷ் கால ‘பொலீஸ் தாத்தா’ பாத்திரம் உடனேயே மனதுள் பதிந்தது. பின்னர் அந்த இழையைப் பிடித்து அவருடைய ஏனைய பல புத்தகங்களைத் தேடி தேடி வாசித்தபோது, கொஞ்சம் கொஞ்சமாக, பொழுது புலர்வதுபோல இக்கட்டுரை அதன் பாட்டுக்குத் தன்னைத்தானே எழுத ஆரம்பித்தது.
கட்டுரையை எழுத எழுத, மேலும் அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். நூலகம் இணையத்தில் அவருடைய சில நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அப்புறம் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவிடம் கேட்டபோது அவரிடம் ஒன்றிரண்டு இருப்பதாகச் சொன்னார். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நூறு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. அதனால் எங்கோ இசை நிகழ்ச்சிக்குப் போன இடத்தில் அவரைத் தேடிச்சென்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன். ஈற்றில் ஒரே ஒரு புத்தகம் தண்ணி காட்ட, முருகபூபதி அவர்களையே தொடர்புகொண்டு புத்தகத்தைப் பெறவேண்டியதாயிற்று.
கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்களைப் பரப்பி வைத்து இதனை முழுமையாக எழுதிய அனுபவம் அலாதியானது. எழுதுவது ஒரு சுவை எனில், அதற்காகத் தேடுவதும் அலைவதும் பிறிதொரு சுவை. ஐம்பதாண்டு காலம் எழுத்தூழியம் செய்யும் ஒரு முன்னோடியை வாசித்து உணர்ந்துகொள்ளுதல் என்பது பேரனுபவம். ஏழு பக்கக் கட்டுரையில் அதனை முழுமையாக உணர்த்தமுடியாது என்பதை அறிவேன். ஆயினும் சிறு சுவையையேனும் கட்டுரை கோடி காட்டியிருக்கிறது என்று நம்புகிறேன்.
கட்டுரையை எழுத எழுத, மேலும் அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். நூலகம் இணையத்தில் அவருடைய சில நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அப்புறம் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவிடம் கேட்டபோது அவரிடம் ஒன்றிரண்டு இருப்பதாகச் சொன்னார். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நூறு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. அதனால் எங்கோ இசை நிகழ்ச்சிக்குப் போன இடத்தில் அவரைத் தேடிச்சென்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன். ஈற்றில் ஒரே ஒரு புத்தகம் தண்ணி காட்ட, முருகபூபதி அவர்களையே தொடர்புகொண்டு புத்தகத்தைப் பெறவேண்டியதாயிற்று.
கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்களைப் பரப்பி வைத்து இதனை முழுமையாக எழுதிய அனுபவம் அலாதியானது. எழுதுவது ஒரு சுவை எனில், அதற்காகத் தேடுவதும் அலைவதும் பிறிதொரு சுவை. ஐம்பதாண்டு காலம் எழுத்தூழியம் செய்யும் ஒரு முன்னோடியை வாசித்து உணர்ந்துகொள்ளுதல் என்பது பேரனுபவம். ஏழு பக்கக் கட்டுரையில் அதனை முழுமையாக உணர்த்தமுடியாது என்பதை அறிவேன். ஆயினும் சிறு சுவையையேனும் கட்டுரை கோடி காட்டியிருக்கிறது என்று நம்புகிறேன்.
அகழ் இணைய இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment