Skip to main content

Posts

மணியம் மாஸ்டர்

வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...

podcast: The Anthropologists நூல் உரையாடல்

துருக்கியைப் பூர்வீகமாகக்கொண்ட ‘ஐஷீகுள் சவாஸ்’ என்ற எழுத்தாளர் எழுதிய ’The Anthropologists’ என்ற நாவலைப்பற்றி இம்முறை உரையாடியிருக்கிறோம்.

நிகழ்ச்சி அறிவித்தல் - எழுத்துப் பயிற்சிப் பட்டறை

                                                     வணக்கம் நண்பர்களே, மெல்பேர்னில் வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி 'எழுத்துப் பயிற்சிப் பட்டறை' ஒன்றை ஒழுங்கமைத்துள்ளோம்.

தூக்கமா கண்மணி, பள்ளி எழு

இன்று காலை இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. சிறு வயதில் இப்பாட்டை அடிக்கடி நான் முணுமுணுப்பதுண்டு. ஊரின் ஒவ்வொரு சந்தி மூலைகளிலும் எஞ்சி நின்ற மின்சாரக் கம்பங்களில் ஒலி பெருக்கிகள் பூட்டப்பட்டு இயக்கப்பாடல்கள் இசைக்கப்பட்ட காலம் அது. ஒரு பக்கம் ‘கனலில் கருவாகி’, ‘பிள்ளையார் சுழி போட்டு’ என்று கோயில் கோபுரங்கள் பாடல்கள் இசைக்க, இன்னொரு பக்கம் ‘மக்களெல்லாம்’ என்று இசை கேட்க, சைக்கிளில் சுற்றித்திரிந்த சிறுவர்களுக்கு இவ்விரண்டு வகைப் பாடல்களும் மண்டைகளுக்குள் ஏறியது ஆச்சரியமில்லை.   எப்படி மதங்களினூடாகப் பல தலைமுறைகளில் கலை முகிழ்ந்தெழுந்ததோ அதுபோலவே போராட்ட காலத்தின் கலையும். மதங்களையும் அவற்றின் எதேச்சதிகாரங்களையும் நிராகரிக்கும்போது நாச்சியார் திருமொழியையும் சுந்தர காண்டத்தையும் நாம் புறந்தள்ளினோமானால் இழப்பு நமக்குத்தான். அதுபோலவே போராட்டங்கள்மீது நாலு பேருக்கு நாலு விதமான எண்ணம் சிந்தனைகள் இருக்கலாம். அதனாலேயே அக்காலத்துக் கலையை மறுதலித்துவிடக்கூடாது. அந்தக் காலத்தின் ஈழத்து இசையும் அவ்வகையானதுதான். மிக அற்புதமான இசைத்தொகுப்புகள் அக்காலப்பகுதியில் வந்திருக்கின்றன. அப்பாடல்களின் வ...

வாழும் வரலாறு மல்லிகை ஜீவா

லெ. முருகபூபதி எழுதிய ‘வாழும் வரலாறு மல்லிகை ஜீவா’ என்ற அற்புத நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். முருகபூபதியின் கட்டுரைகளில் எப்போதும் ஒருவித பத்திரிகையாளருக்கேயுரிய பற்றின்மை இருக்கும். சம்பவங்கள் குறித்தோ, மனிதர்கள் குறித்தோ அவர் எழுதும்போது அதில் எந்தவிதக் ‘commentary’யும் இருக்காது. ஆனால் அப்படி எழுதுவதே அவற்றின்மீதான பெரும் அபிப்பிராயத்தை வாசகர்மேலே ஏற்றிவிடும். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரின் திறன் அது. ஒரு உதாரணம் கொடுக்கிறேன். இந்தச் சம்பவம் அறுபதுகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். பத்தி இப்படிப்போகிறது.

கோழி வந்ததா, முட்டை வந்ததா?

இக்கேள்விக்கு முட்டை என்பதுதான் சரியான பதிலாக இருக்கமுடியும். உடனேயே அந்த முட்டையை ஒரு கோழிதானே போட்டிருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதுதான் இல்லை. கோழி அல்லாத இன்னொரு பறவை போட்ட முட்டையிலிருந்துதான் கோழி முதன்முதலில் உருவாகியது. கொஞ்சம் ஆழமாக இதனைப் புரிந்துகொள்வதற்கு உயிரிகளின் கூர்ப்பினைப் பின்னோக்கி வேகமாக ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டும்.

அர்ஜீத் சிங் எனும் கலைஞன்

என் பேரபிமானத்துக்குரிய இசைக் கலைஞர் அர்ஜீத் சிங், இனிமேல் தான் திரையிசைப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.