மலை அளவு கருமேகம் அலை அலையா வரு நேரம் கருவறுத்த கறுப்பு தாலி எழவெடுத்த கருங்காலி கட்டியவனை தேடி ஓடி கருவறையில் வாடி வதங்கும் கருமாந்திர தமிழ்சாதி. மலர் படர தேர் கொடுக்கும் பாரி வேந்தன் சமர் இல்லை என்றபின் டொலர் கொடுத்தானில்லை! தேர் வேண்டாம் மரம் போதும் படர்வோம் என்றால் மரம்கொத்தி பறவைகள் வருமாம் என்று தார் ரோட்டில் பேர் எடுக்கும் ஜாரிசாந்தன்! இனியில்லை வழியொன்று வலியெல்லாம் கழியென்று கொடியொன்று வேர்விட்டு மரமாகுது மரம் வெட்டி விறகெடுத்து விலைபெசுது. Photo : Ketha