Skip to main content

Posts

Coffee - Audio Version

Kishore, a Sri Lankan migrant living in Melbourne hops into a train to Flinders street. In the same metro journey, he happens to meet a girl and slowly starts conversations with here. The story themed around his identity crisis, perceptions and the thought process during the time he works out how to talk to a stranger girl.

Coffee

"The next train to Flinders Street station via the city loop will be departing at five” The recorded voice was played when I pressed the information button at the station. There was still time. I went and sat on the near by bench inside the safety zone. There had been incidents of Indian students getting attacked and harassed in public places. They are tipped as soft-targets for crime and advised to stay within the safety zones at railway stations. Although I am from Sri Lanka, little difference it would make if I tell it to someone with a knife threatening to stab me.

கடற் கோட்டை - கிண்டிலில்

செங்கை ஆழியானின் நூல்களை அமேசன் கிண்டிலில் கொண்டுவரும் முயற்சியை நண்பர் தாருகாசினி ஆரம்பித்திருக்கிறார். முதல் நூலாக “கடற் கோட்டை” வெளிவந்திருக்கிறது. தாருகாசினி முறையாக செங்கை ஆழியான் குடும்பத்தோடு காப்புரிமை ஒப்பந்தத்தைச் செய்து இதனை ஆரம்பித்திருக்கிறார். கிண்டிலில் நூல்களை வாசிக்கும் பழக்கம் இன்னமும் நம்மத்தியில் பெரிதாக இல்லை. இந்த சந்தை மிகக் குறுகியது. இப்போதைக்கு உழைப்புக்குப் பலன் கிடைப்பது சந்தேகமே. ஆனால் கிண்டிலில் இருப்பது நீண்ட காலத்துக்குப் பயனளிக்கக்கூடியது. பலர் இப்போதெல்லாம் சப்ஸ்கிரிப்சன் முறையில் கிண்டில் நூல்களை வாசிக்கிறார்கள். அப்போது செங்கை ஆழியான் அறிமுகமற்ற பலரையும் சென்றடையும் சந்தர்ப்பங்கள் அதிகம். காலப்போக்கில் இது இடம்பெறும். தாருகாசினி ஒரு கர்மவீரர்போல சலிப்படையாது தான் எடுத்துக்கொண்ட தன்முயற்சியைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். வற்றா நதி, வாடைக்காற்று, குவேனி என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. அடுத்த நூலுக்கான என்னுடைய பரிந்துரை “24 மணி நேரம்”. “கடற் கோட்டை” கிண்டில் விலை இரண்டு டொலர்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பேச்சுப

ஆனந்தம் அண்ணை

மனிதர்களை எப்படி இலகுவில் கடந்துபோய்விடுகிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  ஆனந்தம் என்று ஒரு அண்ணை. அப்பாவின் உதவியாளர். நவாலியில் வசித்தவர். நெடுவல். நெடுவலுக்கேற்ப முகமும் நீளம். பற்களும் நீளம். அவற்றில் ஒன்றிரண்டைக் காணக்கிடைக்காது. மீதம் வெற்றிலைச்சாயம் படிந்திருக்கும்.  அண்ணை தன் ஒரு காலைக் கொஞ்சம் தாண்டித் தாண்டியே நடப்பார். ஏன் அப்படி என்று தெரியாது. போலியோவாக இருக்கலாம். அல்லது ... தெரியாது. அண்ணர் நன்றாகச் சிங்களம் கதைப்பார். சிங்களப்பாட்டு பாடுவார். 'சந்திராவே மேபாவே நாவா' என்று என்னைப் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும்போது பாடிக்கொண்டே சைக்கிள் மிதிப்பார்.

எம். ஜி. சுரேஷ்

எம். ஜி. சுரேஷ் காலமாகிவிட்டார். நண்பர் ஆனந்த் பாலாதான் முதன்முதலில் எம்.ஜி.சுரேஷை எனக்கு அறிமுகப்படுத்தியவர். ஆனந்த் எம்.ஜி.சுரேஷின் அதி தீவிர ரசிகர். எழுத்தாளர்களை ‘அவன், இவன்’ என்று உரிமைகொண்டாடும் வாசகர். “அவன் எம்.ஜி.சுரேஷ் இருக்கானே ஜேகே, தமிழ்ல ஒரு டான் பிரவுண் மாதிரி. செமயா இருக்கும். நீங்க வேணும்னா ஒரு தடவை வாசிச்சுப்பாருங்களேன்”