சமீபத்தில் எழுத்தாளர் ஷர்மிளா செய்யித் தான் பங்கு பற்றிய ஒரு கூட்டத்தில் இலங்கையில் பாலியல் தொழிலினைச் சட்டபூர்வமாக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் மீதான வன்புணர்வுகள் குறைவடையும் என்று குறிப்பிட்டிருப்பார். பின்னர் அது பெரியளவிலான சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. பாலியல் தொழிலினை சட்டபூர்வமாக்குவதன் மூலம் வன்புணர்வுகள் குறைவடையுமென்பது எவ்வளவு தூரம் உண்மை? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எந்தப் பெண்களுமே பாலியல் தொழிலினை அவர்களாகவே தங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக ஏதோவொரு தூண்டுதலே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கின்றது? ஷர்மிளா செய்யித்தின் இந்தக் கூற்று சரியானது தானா? இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?