Skip to main content

Posts

கிடுகுவேலி விசாகன் - அஞ்சலி

இன்று காலை இன்னுமொரு மரணம் எதிரே வந்தது.  நண்பர் விசாகன் சமூக வலைத்தளங்களினூடு அறிமுகமான ஒரு நண்பர். நேரிலும் சந்தித்திருப்போமே தெரியாது. சந்தித்திருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்திருக்கமாட்டேன். விசாகன் என்றால் அவருடைய என்றைக்கும் மாறாத, சிரித்த முக, புரபைல் பிக்சரும் கிடுகுவேலியும் அவர் இடும் பதிவுகளும்தான் ஞாபகம் வரும். சின்னமணியின் வில்லிசையையும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியையும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டையும் கம்பன் விழாக்களையும் நானும் அவரும் வெவ்வேறு மண் கும்பிகளில் இருந்து ரசித்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கடைகளில் நாங்கள் அருகருகே நின்று கச்சானோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கியுமிருக்கலாம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் “நிலாக்காயும் நேரம்” பாடலை அவரவர் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறோம். நான் வடக்குவீதியில் பார்த்துரசித்த ஹால்ப்சாரியை அவர் தேரடியில் கண்ணுற்றிருக்கலாம். என் கொல்லைப்புறத்துக் காதலிகள் அவருக்கும் கொல்லைப்புறத்துக் காதலிகள். அருண்மொழிவர்மனுக்கும் காதலிகள். பாலாவுக்கும் காதலிகள். சயந்தனுக்கும் அதே. நிலாவை அவரவர் முற்றங்களிலிருந்தும் வியந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வொருவ

இக்கரைகளும் பச்சை 1 – பருப்புக்கறி வாங்கிய பெண்

மெல்பேர்னின் புறநகர்ப்பகுதியான எப்பிங்கில் இருக்கும் “தமிழ் பலசரக்குக் கடை” ஒன்றுக்கு “மட்டன் ரோல்ஸ்” வாங்கச் சென்றிருந்தேன். மட்டன் ரோல்ஸ் தாச்சியில் பொரிந்துகொண்டிருந்ததால் கடைக்காரர் என்னைச் சற்றுநேரம் காத்திருக்கும்படி கூறினார். பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றால் அந்தப்பத்து நிமிடங்களுக்குள் நான் கடையை இரண்டுதடவை சுற்றிபார்க்கவேண்டிவரும், ஆங்காங்கே சில பொருட்களை எடுக்கலாம், இரண்டு ரோல்சுக்கு வந்தவன் இருபது டொலர்களுக்கு சாமான்கள் வாங்குவான் என்று கடைக்காரர் எதிர்பார்த்திருக்கக்கூடும். நான் உள்ளே சுற்றாமல் வாசலிலேயே நின்று விடுப்புப்பார்க்க ஆரம்பித்தேன்.

இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி

நா. பார்த்தசாரதியின் இந்தச் சிறுகதை 1966ம் ஆண்டு கணையாழி இதழில் வெளிவந்தது. ஐம்பது வருடங்களில் தமிழில் இலக்கிய விமர்சன உலகில் உள்ள அரசியல் அப்படியே மாறாமல் இருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. எஸ்.பி.எஸ்களும், மர்ம பலராமன்களும் வேறு வேறு பெயர்களில் அலைந்துகொண்டேயுள்ளனர். இலக்கிய இராட்சசன், இலக்கியக் கொம்பன் போன்ற பத்திரிகைகளும் இன்னமும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. இரண்டாவது விமர்சகர்களுக்கு மரணமே கிடையாது. சிறுகதையைப் பகிராமல் இருக்கமுடியவில்லை.

சகுந்தலா கணநாதனின் உரையின் எழுத்து வடிவம்

என்னை “எப்போது தமிழிலே எழுதப்போகிறீர்கள்?” என்று இங்கு வந்திருக்கும் எஸ்.பி.எஸ் ரேணுகா துரைசிங்கம் ஒருமுறை கேட்டார். அப்போது ஜேகேயின் கொல்லைப்புறத்துக் காதலிகள் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி எழுதவேண்டும் என்றேன். அதன்பிறகு தொடர்ச்சியாக அவருடைய எழுத்துகள் மீது காதல் கொண்டேன்.  William Shakespeare, George Bernard Shaw இருவரும் சமூகக்குறைபாடுகளை கேலிப்பேச்சு, அதாவது satire மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர். உதாரணமாக , Touchstone என்று ஒரு முட்டாள் செக்ஸ்பியரின் நாடகத்தில் அப்பப்போ தோன்றி மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் உதவினார் .

கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பு அனுபவப் பகிர்வுகள்

கந்தசாமியும் கலக்சியும் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வின்போது இடம்பெற்ற உரைகளின் தொகுப்பு. சுபாசிகன் கேதா சகுந்தலா கணநாதன் ஜூட் பிரகாஷ் முருகபூபதி நிருஜன் - தமிழ்த்தாய் வாழ்த்து