Skip to main content

ஜே ஜே: சில குறிப்புகள்


“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்”

100-00-0000-053-3_b

அங்கே ஆரம்பித்தது “சனியன்”. இப்போது அல்பர் காம்யு யார் என்று அறியவேண்டும். அவரை ஏன் நாவலின் ஆரம்பத்திலேயே கொழுவினார்? அல்பர் காம்யு ஒரு பிரெஞ்சிய எழுத்தாளர். நோபல் பரிசுபெற்றவர் என்ற அளவுக்கு மேல் அவரை வாசித்தேன் என்று கெத்தாக எழுதுவதற்கு அட்லீஸ்ட் அவர் நாவலின் முன் அட்டைப்படமாவது நான் பார்த்திருக்கவேண்டும். ஆனால் இந்த நாவல் ஒரு எழுத்தாளரை பற்றி தான் என்பது அந்த வரிகளில் புரிந்துவிட, கொஞ்சம் கவனமாகவே ஜே ஜே சில குறிப்புகளை புரட்ட தொடங்கினேன்.

இதை நாவல் என்பதா, குறிப்புகள் என்பதா … என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத ஒரு வடிவம். பாலு ஒரு வளர்ந்து வரும்தமிழ் எழுத்தாளன். அவனுக்கு ஜேஜே என்ற மலையாள எழுத்தாளன் கம் சிந்தனைவாதி (இதை கேட்டால் ஜேஜே விழுந்து விழுந்து சிரிப்பான் இல்லை என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுவான்) ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஜேஜேயை இவன் தூர இருந்தே காதலிக்கிறான். எதை செய்யும்போதும் ஜேஜே எப்படி இதை அணுகியிருப்பான் என்று சிந்திக்கிறான். ஜேஜே பின்னால் திரிகிறான். ஜேஜே என்பவன் பற்றி ஒரு கோட்டை கட்டி அங்கே ஜேஜேயை சக்கரவர்த்தியாக நியமித்து, பகிடி என்னவென்றால் கோட்டைக்கு கொத்தனாரும் ஜேஜே தான். ஜேஜே அழகாக தச்சு வேலை செய்வான். அவன் அப்பாவிடம் இருந்து பழகிய பழக்கம். அதிலும் நேர்த்தி, தத்துவம் தேடி செதுக்குவான். ராணிக்கு சரிக்கட்டிய கட்டில் பிடியில் ராணியின் நிலை பற்றி செதுக்கியவன், அதை யாருக்கும் சொல்லவில்லை. உதைபந்தாட்டக்காரன். ஓவியன் … இந்த விவரங்களை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. எனிவே!

“நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு செய்யவேண்டும், இல்லையேல் இறந்துவிடவேண்டும், இரண்டுமே என்னால் முடிவதில்லை, அது தான் என் பிரச்சனை” என்கிறான் ஜேஜே. ஓமனக்குட்டியை காதலித்து கரம்பிடித்து இரண்டுபேரும் ரயிலில் தேனிலவுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். விஷயம் தெரியாத ஓமணக்குட்டி ஜேஜேயிடம் தான் எழுதிய கவிதைத்தொகுப்பை நீட்டுகிறாள். ஜேஜே வாசித்துவிட்டு சிரிக்கிறான். கவிதைத்தொகுப்பை பெட்டிக்குள் கவனமாக வை என்கிறான். அவள் அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. “என் கவிதை எப்பிடி இருக்கு, சொல்லு” என்று அவனை தொணதொணக்க,  “அந்த கவிதைகளை பேசாமல் யன்னல் வழியாக தூர எறிந்துவிடு” என்கிறான். சண்டை. அடுத்த ஸ்டேஷனிலேயே பிரிகிறார்கள்.

பாலுவும் ஜேஜேயும் இந்த நூலில் ஒரே ஒரு இடத்தில் தான் சந்திக்கிறார்கள். ஒரே ஒரு வார்த்தை. “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா?” என்று ஜேஜே கல்கியை ஒரு கடி கடிக்கிறாரன். இவ்வளவு தான். மற்றும்படி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் பாலு ஜேஜேவை தூர இருந்தே ரசிக்கிறான். ஜேஜே பற்றி அவனோடு நெருங்கி பழகியவர்களிடம் குறிப்பெடுக்கிறான். மும்பை கூட போகிறான். இறுதியில் ஜேஜே சில குறிப்புகள் என்று ஒரு தொடர் டயரி குறிப்புகளை எழுதுகிறான். இது தான் நாவல்.

Sundara_ramasamy7_400
ஒரு கட்டத்தில் பாலு தன் தந்தையிடம் இருந்தே ஜேஜே பற்றி கேட்டறிகிறான். மீண்டும் மீண்டும் ஒரே கதையை அவரும் விரும்பி விரும்பி சொல்லுவார். அப்போது தான் நம் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக புலர தொடங்கும். பாலு தான் அந்த ஜேஜே. இன்னும் கொஞ்சம் மேலே போனால், நாவலின் எழுத்தாளர் சுந்தர ராமசாமியே தான் அந்த ஜேஜே. ஒரு எழுத்தாளனின் சிந்தனை ஒட்டங்கள், தத்துவ விசாரங்கள், விண்டாவாதங்கள், craziness, ஒருவரையும் கணக்கெடுக்காத குணம், தன்னை ஒருவருமே கணக்கெடுக்கிறார்கள் இல்லையே என்ற ஏக்கம் எல்லாமே சேர்ந்த ஒரு நிழல் பிரதியாக தன்னையே வடித்து சுரா எழுதிய நாவல் தான் ஜேஜே சில குறிப்புகள்.

இந்த நாவல் கொஞ்சம் மிரட்டலான நடை. மலையாள நெடி அதிகம் உள்ள நாவல். அதுவும் என் போன்ற தமிழறிவு டைப்படிக்கும் வாசகர்களுக்கு வாசித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிடும். அதைவிட சொல்லும்விஷயம் இன்னமும் மண்டை காயவைக்கும். திரும்ப திரும்ப வாசித்தால் மாத்திரமே இந்த மக்கு மண்டைக்கு புரியக்கூடிய பக்கங்கள் தான் ஏராளம். எடுத்தவுடனேயே புரிந்த ஒரே ஒரு பகுதி முன்னுரை மாத்திரமே. நான் முதலில் எல்லோரும் அட்வைஸ் பண்ணுவது போல, தமிழ் படிக்கவேண்டும்.
ஜே ஜே சிலகுறிப்புகள், வாசித்தால் வாசிப்பவர்களை எழுத்தாளர் ஆக்கிவிடும் அபாயங்கள் நிறைந்த புத்தகம். சிந்தனாவாதிகளை தற்கொலை செய்ய தூண்டும். Bluffs கூட வாசிக்கலாம். அட்லீஸ்ட் நான்கு வாரங்களுக்கு facebook இல் புரியுதோ இல்லையே ஸ்டேடஸ் போட்டு கலக்குவதற்கு புத்தகம் நிறைய கிளிஷே வசனங்கள் குவிந்துகிடக்கின்றன. உதாரணத்துக்கு.
“மாட்டுக்கு சொறிந்து கொடு, அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒரு போதும் சொறிந்து கொடுக்காதே, சக மனிதனை ஏமாற்றாதே”
இந்த நாவலை ஒரு கிளாசிக் என்று ஜேஜே தவிர்ந்த மீதி எல்லோருமே சொல்வார்கள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக