Skip to main content

Ladies Coupe


ladies-coupe-anita-nair


அகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த  இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!


கணவனா மகனா என்று குழப்பத்தில் வாழும் ஜானகி. கணவன் இறந்த பின்னர் தனக்கு துணை மகன் தானே என்று மகனை கொண்டாட, மகன் அவளை மதித்தானில்லை. ஒரு கட்டத்தில் மகன் சங்காத்தமே வேண்டாம் என்று கணவனில் நண்பனை காணும் பெண்ணின் கதை.

மார்கரெட், புத்திசாலி, கெமிஸ்ட்ரியில் தங்கப்பதக்கம் பெற்றவள். காதலித்து திருமணம் செய்யும் கணவன் ப்ரின்சிபலாக இருக்கும் அதே பாடசாலையில் இவள் ஆசிரியை. கணவன் ஒரு ஷாவனிஸ்ட். மனைவியை மதிக்கத்தெரியாதவன். ஒரு வித நாசிஸ்ட் என்றும் சொல்லலாம். மார்கரெட் எப்படி அந்த கணவனை வழிக்கு கொண்டு வருகிறாள் என்பது இன்னொரு கதை.

பிரபாதேவி, பணக்காரி. கணவன் தங்க வியாபாரம். இவளுக்கு தனக்கென்று ஒரு ஆளுமை வேண்டுமென விருப்பம். ஆனால் எப்படி என்று தெரியாமல் இறுதியில் தானே சுயமாக நீச்சல் பழகுகிறாள். ஒருநாள், ஒரு கரையில் இருந்து இன்னொரு கரையை எட்டும்போது அந்த ecstasyயை எட்டுகிறாள்.

de

ஷீலா, பதினாலு வயது பெண்ணுக்கும் ராங்கிக்காரி பாட்டிக்கும் இடையில் உள்ள க்யூட் உறவு.

மரிக்கொழுந்து ஒரு ஏழைப்பெண். செட்டியார் வீட்டில் வேலைக்கு போய், அங்கே ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, பிறந்த குழந்தையை சீண்டாமல், ஒரு கட்டத்தில் லெஸ்பியனாகி, அதுவே பை செக்ஸுவலுக்கும் மாறி ... ஒரு இருண்ட கதை இது. தன் செயல்களுக்கு அவளே சுயபச்சாதாபம் அது இது என்று காரணங்களை தேடிக்கொள்ளுகிறாள்.

நாவலில் எனக்கு பிடித்த பாத்திரங்கள் அகிலாவும் மார்கரேட்டும் தான். கணவன் சுகதேகியாய், கட்டுடலுடன் இருப்பது தான் அவனின் சுபீரியாரிட்டி கொம்பிளக்ஸுக்கு காரணம் என்பதை அறிந்து, எண்ணெய், நெய், இறைச்சி என்று சுவையான சாப்பாட்டை மூன்று நேரமும் கொடுத்து, ஒரு கட்டத்தில் மூன்றடி நடந்தாலே அவனை மூச்சிரைக்க வைக்கிறாள். வாய் ருசியை தேட, உடல் தளர அவனுக்கு மனைவியின் தேவை அதிகரிக்க, அவள் காலடியே தஞ்சம் என்று கிடக்கிறான்.. scary!

அகிலாவோ, பஸ்சில் நெரிசலில், முகம் தெரியாதவன் இடுப்பை பிடிக்க, அதில் திரில் ஆகி, தினமும் அதே பஸ்சில் வேண்டுமென்றே கூட்ட நெரிசலில் சென்று அந்த முகம் தெரியாதவனின் கைகள் இடுப்பை சுற்ற அனுமதிக்கிறாள். இத்தனைக்கும் அவள் தப்பான பெண் என்றால், நோ வே… சின்ன சின்ன விஷயங்கள் .. அனிதா நாயர் வியக்க வைக்கும் இடங்கள் இவை.
2004120500190301பெண் எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோஹும்பா லாகிரி தான். ஆனால் அவர் பொதுவாக ஆண்களின் பார்வையில் தான் கதையை கொண்டுபோவார். தமிழில் சிவசங்கரி. அவர் எழுத்தில் ஒரு சோகம் இருக்கும். வீணான சுய பச்சாதாபங்கள், பெண் எப்போதுமே தோற்கும் விஷயங்கள் என சிவசங்கரி எழுத்துக்கள் சிலசமயம் சீரியல் ரேஞ்சில் இருக்கும். Except நூலேணி.

அனிதா நாயர் ஒருவித லாகிரி டைப் எழுத்தாளர். நிறைய உருவகங்கள் கதையில் இருக்கும். திருக்குறல் கூட ஒருமுறை சாடப்படும். பெண்களின் சில பெர்சனாலான பார்வைகள், ஆண்களை அவர்கள் அணுகும் விதம் …எனக்கு புதுசு. I am sure,  எங்கள் சமூகத்தில் எண்பது வயது தாத்தாவுக்கும் புதுசு. ஏனென்றால் அதை அறியும் ஆர்வம் எங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. Why should we care? என்ற எண்ணம் தான். “லேடிஸ் கூ” வாசிப்பது முக்கியம். வெறுமனே பெண்களை அறிந்துகொள்ள மட்டுமில்லாமல், ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க இந்த நாவல் ஒரு பால பாடம்! திருமணம் முடித்தவர்கள், பெண் மனது புரியும் என்று நினைக்கும் ஐன்ஸ்டீன்கள் .. போய் இதை ஒருமுறை வாசியுங்கள்! அட்லீஸ்ட் இன்னமும் புரிவதற்கு  நிறைய இருக்கென்றாவது புரியும்!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக