Skip to main content

விளமீன் சிறுகதை பற்றி வைதேகி

விளமீன் - ஜே.கே (புதியசொல், ஏப்ரல்- ஜூன் 17)

"வீ ஓல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்"

என்ற நிலையில் இருந்த அந்த விளமீன் கடைசியில் சரசுமாமியின் கைப்பக்குவத்தில் குழம்பாகி ஜென்ம சாபல்யம் அடைந்தது என்பது தான் கதையின் பிரதான குறியீடு.

கதை முழுவதுமே குறியீடாகத் தான் நகர்கின்றது. ஒவ்வொரு மீனையும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைத்து, சமைத்ததை ரசித்து ருசித்து அதுவும் தட்டில் எஞ்சியிருக்கும் கீரை கலந்த குழம்புச் சொதியை அப்படியே கோப்பையோடு உறிஞ்சிக்குடிக்கும் சரசு மாமிக்கு வாய்த்தது விளமீனுக்கும் திரளிக்கும் வித்தியாசம் தெரியாத அற்பாயுள் கணவன். ;)

ஆசையாசையாக தான் சமைத்த ஓராக்குழம்பை கிடங்குவெட்டித் தாட்டுப்போட்டு கத்தரிக்காய்க்குழம்பை வைத்துவிட்டு கணவன் முன்னால் சிரித்தபடி சரசு மாமி நின்ற அந்த ஒரு சம்பவம், தங்களுடைய அடிப்படை ஆசாபாசங்களையே குழிதோண்டி புதைத்து விட்டு கணவனுக்காகவும் சமூகத்துக்காகவும் ஒரு போலி வாழ்வை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக சரசுமாமி தெரிவார்.

பிரெஸ்டன் சந்தையில தற்செயலாக வந்து மாமியின் கண்ணில் அகப்பட்ட விளமீன் தொடக்கி வைக்கும் சரசுமாமியின் இரண்டாவது இன்னிங்ஸை. ;)

முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல், சரசுமாமி அடிச்சுவிளையாடத் தொடங்குவா இரண்டாவதை 😉😍.

மாமியின் ஸ்லோ அன்ட் ஸ்ரெடியான ப்ரோகிரஸை ஜே.கே அழகாக சொல்லியிருப்பார். மூன்று சரை சீனி போட்டு கப்புச்சீனோ குடிச்ச சரசுமாமி பிறகு சீனியே போடாமல் கப்புச்சீனோ குடிப்பதை அழகான காட்சியாக உருவகித்து ரசிக்க முடிகின்றது.

யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மாமி தன் பாட்டுக்கு தனக்குப்பிடிச்சதை சுதந்திரமாக செய்யத்தொடங்குவதை செயற்கைத்தனம் கொஞ்சமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.

மீன் சந்தையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு,

"சொறி...மெடம் இஸ் நோ மோர்"

"ஷி பாஸ்ட் எவே எ மன்ந் எகோ"

என்று ராசன் சொல்ல, என்னையுமறியாமல் வெடித்துச் சிரித்து,

"வா...வ் சரசுமாமி யு மேட் இட்" என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன்.

மனிசி இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிச்சிட்டுது. ;)

கதையில் தொக்கி நிற்கும் முடிவை வாசகமனது மளமளவென்று ஊகித்து சிருஷ்டிக்கும். நான் ஊகித்ததை எழுதினால், அது இனி கதை வாசிக்கப்போகின்றவர்களுக்கு நான் செய்யும் பாவம். இது என்னுடைய வாசிப்பின் புரிதல். வாசகசாத்தியங்கள் ஆளுக்காள் வேறுபடலாம். Let them decide.

ஏனெனில், ஒரு சிறுகதையின் வடிவம் என்பது எழுதுபவரின் எத்தனமும் வாசிப்பவரின் இயல்பும் இணைந்தே உருவாக்கப்படுகின்றது. So, it's unique.

க்ளிஷே, விரசம், தேவையற்ற அருட்டல்கள் எதுவுமில்லாமல் ஒரு sensitive ஆன கதைக்கருவை விளமீனை வைத்து மணக்க மணக்க குழம்பு வைத்த ஜேகேக்கு மிக்க நன்றி.

A JK story :)

Thanks Jeyakumaran Chandrasegaram

பி.கு: சரசுமாமிக்கும் அந்த சூடானிய "குழந்தைக்கும்" அன்பும் முத்தங்களும் 😍😘😘😘 

- வைதேகி பாலமுரளி

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக