Skip to main content

விளமீன் சிறுகதை பற்றி வைதேகி

விளமீன் - ஜே.கே (புதியசொல், ஏப்ரல்- ஜூன் 17)

"வீ ஓல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்"

என்ற நிலையில் இருந்த அந்த விளமீன் கடைசியில் சரசுமாமியின் கைப்பக்குவத்தில் குழம்பாகி ஜென்ம சாபல்யம் அடைந்தது என்பது தான் கதையின் பிரதான குறியீடு.

கதை முழுவதுமே குறியீடாகத் தான் நகர்கின்றது. ஒவ்வொரு மீனையும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைத்து, சமைத்ததை ரசித்து ருசித்து அதுவும் தட்டில் எஞ்சியிருக்கும் கீரை கலந்த குழம்புச் சொதியை அப்படியே கோப்பையோடு உறிஞ்சிக்குடிக்கும் சரசு மாமிக்கு வாய்த்தது விளமீனுக்கும் திரளிக்கும் வித்தியாசம் தெரியாத அற்பாயுள் கணவன். ;)

ஆசையாசையாக தான் சமைத்த ஓராக்குழம்பை கிடங்குவெட்டித் தாட்டுப்போட்டு கத்தரிக்காய்க்குழம்பை வைத்துவிட்டு கணவன் முன்னால் சிரித்தபடி சரசு மாமி நின்ற அந்த ஒரு சம்பவம், தங்களுடைய அடிப்படை ஆசாபாசங்களையே குழிதோண்டி புதைத்து விட்டு கணவனுக்காகவும் சமூகத்துக்காகவும் ஒரு போலி வாழ்வை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக சரசுமாமி தெரிவார்.

பிரெஸ்டன் சந்தையில தற்செயலாக வந்து மாமியின் கண்ணில் அகப்பட்ட விளமீன் தொடக்கி வைக்கும் சரசுமாமியின் இரண்டாவது இன்னிங்ஸை. ;)

முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல், சரசுமாமி அடிச்சுவிளையாடத் தொடங்குவா இரண்டாவதை 😉😍.

மாமியின் ஸ்லோ அன்ட் ஸ்ரெடியான ப்ரோகிரஸை ஜே.கே அழகாக சொல்லியிருப்பார். மூன்று சரை சீனி போட்டு கப்புச்சீனோ குடிச்ச சரசுமாமி பிறகு சீனியே போடாமல் கப்புச்சீனோ குடிப்பதை அழகான காட்சியாக உருவகித்து ரசிக்க முடிகின்றது.

யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மாமி தன் பாட்டுக்கு தனக்குப்பிடிச்சதை சுதந்திரமாக செய்யத்தொடங்குவதை செயற்கைத்தனம் கொஞ்சமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.

மீன் சந்தையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு,

"சொறி...மெடம் இஸ் நோ மோர்"

"ஷி பாஸ்ட் எவே எ மன்ந் எகோ"

என்று ராசன் சொல்ல, என்னையுமறியாமல் வெடித்துச் சிரித்து,

"வா...வ் சரசுமாமி யு மேட் இட்" என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன்.

மனிசி இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிச்சிட்டுது. ;)

கதையில் தொக்கி நிற்கும் முடிவை வாசகமனது மளமளவென்று ஊகித்து சிருஷ்டிக்கும். நான் ஊகித்ததை எழுதினால், அது இனி கதை வாசிக்கப்போகின்றவர்களுக்கு நான் செய்யும் பாவம். இது என்னுடைய வாசிப்பின் புரிதல். வாசகசாத்தியங்கள் ஆளுக்காள் வேறுபடலாம். Let them decide.

ஏனெனில், ஒரு சிறுகதையின் வடிவம் என்பது எழுதுபவரின் எத்தனமும் வாசிப்பவரின் இயல்பும் இணைந்தே உருவாக்கப்படுகின்றது. So, it's unique.

க்ளிஷே, விரசம், தேவையற்ற அருட்டல்கள் எதுவுமில்லாமல் ஒரு sensitive ஆன கதைக்கருவை விளமீனை வைத்து மணக்க மணக்க குழம்பு வைத்த ஜேகேக்கு மிக்க நன்றி.

A JK story :)

Thanks Jeyakumaran Chandrasegaram

பி.கு: சரசுமாமிக்கும் அந்த சூடானிய "குழந்தைக்கும்" அன்பும் முத்தங்களும் 😍😘😘😘 

- வைதேகி பாலமுரளி

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.