பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது . அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன . கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .
குருவியின் கண்ணுக்கு எய்த அர்ச்சுனனின் குறி போல உண்மையான பிரச்சினையை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள். "பாட பாட ராகம், மூட மூட ரோகம்" என்று பழமொழி கேட்டிருக்கிறேன், அதுபோல பாலியல்பு என்பதை இயல்பானதொன்றாக அல்லாமல் கலாச்சாரம், கற்பு, புனிதம், நல்ல பிள்ளைத்தனம் என்று மூடி மூடி வைக்க நாற்றமெடுக்கும் நிலைக்கு தான் நமது போய்க் கொண்டிருக்கிறது. 4 வயசிலேயே குட் டச், பாட் டச் சொல்லிக் கொடுக்கின்ற உலகில் 18 வயதிலும் முழுமையான தௌிவான அறிவு இல்லாமல் தடம் புரளுகின்ற பதின்ம வயதினரை கொண்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் கலாச்சாரம் என்கிற பெயரில். மிகவும் தேவையான புனைவு.
ReplyDeleteசின்ன perfection: தேவகியின் பதில்கள் 2 hours ago என்று இருக்க, அதற்கு மேல் இருக்கும் வாகனின் கருத்துரைகள் 11 minutes ago என்றிருக்கின்றன.
அதை கவனிக்கவில்லை. Mockup செய்யும்போது மிஸ்ஸாகிவிட்டது :(
Delete"Nirabarathi" maathiri konru vidunkal?? athukkum meela kudukkanum... :D
ReplyDeleteகொல்லப்பட்டவர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருந்து எழுதுகிறார்கள் போல ........இன்றும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே ......
ReplyDelete