“தேங்க்ஸ் ஜெஸ்ஸி, நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!” “என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்” "ம்ம்ம்ம், நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி" "கார்த்திக்..." “ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?” “ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்” “ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை” “ஹேய், ஆர் யு ஓகே?” “ம்ம்ம், நீ கிடைக்கும் வரை ஓகேயாகத்தான் இருந்தேன்” “இப்போது என்னை என்ன செய்யச்சொல்கிறாய் கார்த்திக்?” “எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா? உனக்கு புரியாது ஜெஸ்சி! யாரும் என்னை சட்டை செய்வதே இல்லை தெரியுமா? அம்மா கூட, நீ ஒருத்தி தான் .. நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பாய்” “ஏண்டா? நீதானே எனக்கு எல்லாமே, நீ சொல்வதைக்கேட்காமல் வேறு யார் சொல்வதைக்கேட்பேன்?” “ஆகா, கவிதை” “உனக்காகவே வாழ்ந்து உன் மீது தலை சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை!” சொல்லு