நாச்சார் வீடு பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துகள். ஜே.கே., பொய்யுக்குச் சொல்லவில்லை. மெய்யாலுமே நாச்சார் வீடுகளில் அபரிமிதமான காதல் உண்டு. பிடித்த வீடும் அதுதான். இங்கே அவுஸ்திரேலியாவில் கூட, வசதி இருந்திருந்தால் நான் சின்ன அளவிலான நாச்சார் வீடு கட்டிக் குடியிருந்திருப்பேன். படங்கள் ஏதாவது பார்க்கும் போது, நாச்சார் வீடு காட்டினால், பாத்திரங்களில் ஒன்றாமல், வீட்டை 'ஆவென்று' பார்ப்பது வழக்கம். நாச்சார் வீட்டு மோகம் உங்களுக்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. வராந்தா வைத்த இங்குள்ள கிராமத்து வீடுகள் கூடப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தரும். நாம் சின்ன வயதில் பள்ளி விடுமுறைக்குச் சண்டிலுப்பாயில் உள்ள அப்பாச்சி வீட்டுக்குப் போவோம். எங்கள் பொழுது முழுக்கப் பக்கத்து அன்ரி வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவதில் கழியும். அது நீங்கள் சொன்ன அதே குணமும், மணமும் கொண்ட நாச்சார் வீடு. ஜே.கே. நீங்கள் புதுசு, புதுசாக எழுதும் போது, அது எல்லோர் வாழ்விலும் எங்கோ தட்டுப்படுகிறது. நாம் இந்தியா போகும் போது இதற்காகவே பாலக்காடு கல்பாத்திக்குப் போனோம். திண்ணைகள் வைத்த, கட்டு வீடுகள் கொண்ட நா