Skip to main content

Posts

மடொல் டூவா என்கின்ற கிராஞ்சி

சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்திலும் இந்த நூல் உள்ளடங்கியிருக்கிறது. நாவலில் கதை இதுதான். ஒரு கிராமத்து முதலாளியின் மகனான ஏழு வயது உபாலி கினிவெலவும் அவர்களுடைய வீட்டு வேலைக்காரச் சிறுவனான ஜின்னாவும் சேர்ந்து அந்த ஊரிலே பல்வேறு குழப்படிகளைச் செய்கிறார்கள். அவன் தொல்லை தாங்கமுடியாமல், பாடசாலையை மாற்றி ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துப் படிப்பித்தாலும் உபாலியின் கொட்டம் அடங்குவதாகயில்லை. ஒரு நாள் உபாலியும் ஜின்னாவும் கிராமத்திலிருந்த ஓர்சார்ட் பண்ணைக்குள் புகுந்து அதை நாசமாக்குகிறார்கள். பின்னர் பொலிசில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அப்படி ஓடி வேறொரு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்யும்போது, அங்கு ஒடும் ஆற்றுக்கு மத்தியில் மனித நடமாட்டமில்லாத சதுப்பு மரக்க

ஏப்ரில் - குறுநாவல்

“காதல் உங்களைப் பூமியிலிருந்து தூரத்தே தள்ளி வைக்கும் வல்லமை கொண்டது. வெற்றியிலும் தோல்வியிலும்"   அத்தியாயம் 1 அத்தியாயம்  2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5  

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 5

“சமுத்திரத்தின் மிக மிக ஆழத்தில், சூரிய ஒளியின் பிரசன்னமே இல்லாத ஒரு குகையினுள் நீந்தித் திரிந்த மீனுக்கு கண்கள் இருந்தன” ஏப்ரில் - மகிழ் அம்மாவின் மரணம் நிகழ்ந்து அன்றோடு நான்காவது நாள் ஆகிவிட்டிருந்தது. ஏப்ரில் அழக்கூடத் திராணியில்லாமல் அறைக்குள்ளேயே எந்நேரமும் ஒடுங்கிக் கிடந்தாள். எக்காரணம் கொண்டும் சிங்கப்பூர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி ஊரில் எவரோடும் பேசவே மறுத்தாள். அம்மாவை, இருபதாவது மாடியிலிருந்து விழுந்து சிதைந்த அவரின் உடலை அவளுக்குப் பார்க்கவே தைரியம் இருக்கவில்லை. அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய சூதாடி அப்பாவை, மோசமான தம்பியை, அந்த நாட்டின் வாழ்க்கையை நினைக்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அந்தக் கொங்கிரீட் காட்டுக்குள் திக்குத்தெரியாமல் தவித்த இரண்டே சீவன்கள் தானும் அம்மாவும்தான் என்று சொல்லிப்புலம்பினாள். அவளாவது படித்து வெளியேறி இன்னொரு நாட்டில் புகலிடம் தேடிவிட்டாள். அம்மாதான் பாவம். ‘நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தீர்கள் மமா, இங்கு வந்து ஆங்கிலத்தையும் படிக்கப்போகிறேன் என்றீர்களே’ என்று அரற்றியபடியே இருந்தாள். அம்மா அவளுக்காகத்தான் எல்லாவற

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 4

"அவன் முகத்தில் எல்லாமே தெரிந்தது. கோபம். குரூரம். இயலாமை. இகழ்ச்சி, வன்முறை. திருமண நிகழ்வுக்குச் செல்லும் சீமாட்டிபோல அவன் அவற்றை நகைகளாக மாட்டிப் பெருமிதப்பட்டான். அவனுக்கும் நான் ஒரு சீமாட்டியாக அக்கணம் தோன்றியிருக்கக்கூடும்"

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 3

“அந்தப் பூங்கா ஓர வாங்கிலில் அமர்ந்திருக்கும் தாத்தாவும் பாட்டியும் என்றாவது சண்டையிட்டிருப்பார்களா?”

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 2

“ஒரு மின்னல் கோடு எங்கே போய் முடிவடைகிறது என்று எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அநேகமாக இன்னொரு மின்னலில் அது போய் முடியலாம். அல்லது தரையில்” ஏப்ரில் “ஶ்ரீலங்கனா?” அம்மாவின் அந்த ஒரே வார்த்தையில்தான் எத்தனை கேள்விகள். எத்தனை உணர்ச்சிகள். அது ஆச்சரியமா? இகழ்ச்சியா? வெறுப்பா? இவள் எப்போதுமே இப்படித்தான் என்ற அவநம்பிக்கையா? அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து ஒரு சிங்கப்பூரியனைத் தேடிக்கண்டடைவேன் என்று அம்மா முட்டாள்தனமாக யோசித்திருக்கச் சந்தர்ப்பமில்லை. ஆனால் அது ஒரு சீன இனத்தவனாகவாவது இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கக்கூடும். குறைந்தபட்சம் வெள்ளை என்றாலும் இந்தளவுக்கு எதிர்வினை இருந்திருக்காது. மகிழ் பற்றி அவரிடம் சொல்லாமலேயே விட்டிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் யாரோடாவது பகிர்ந்துகொள்ளத்தானே வேண்டும். மலையேற்றம் போகும்போது தெரிந்தவர் ஒருவராவது நான் எங்கே போகிறேன், எத்தனை நாளில் திரும்புவேன் என்பதை அறிந்துவைத்திருக்கவேண்டாமா? தொலைந்துபோய்விட்டால் எங்கென்று தேடுவார்கள்? “எத்தனை நாட்களாகப் பழக்கம்?” “ஆறு மாதங்களாக மமா… ஆனால் சீரியசாக இந்த மூன்று மாதம்தான்” பேஃஸ்டைமில் அம்ம

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 1

“காதல் உங்களைப் பூமியிலிருந்து தூரத்தே தள்ளி வைக்கும் வல்லமை கொண்டது. வெற்றியிலும் தோல்வியிலும்"