பரிசளிப்பு நிகழ்வுகள் பலவற்றை நான் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள். தமிழ்ப் பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு. இன்னுமொன்று தடகள விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு. முதலாவதற்கு வைத்தியர் ஒருவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்க அழைக்கப்படுகிறார். இரண்டாவதற்கு ஒரு பொறியியலாளரைக் கூப்பிடுகிறார்கள். அந்த வைத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்று யோசித்துப்பார்த்தேன். க.பொ.த சாதாரணத் தரத்தில் தமிழ்ப் பாடத்தில் அவர் சிறப்புத்தேர்ச்சி எடுத்திருக்கக்கூடும். சிலவேளைகளில் பாடசாலை நாட்களில் தமிழ்ப் பேச்சுப்போட்டிகளை அவர் மனனம் செய்து ஒப்புவித்திருக்கலாம். மற்றும்படி அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? அவர் கடைசியாக வாசித்த தமிழ் நாவல் பொன்னியின் செல்வன் முதலாவது பாகமாக இருந்தாலே ஆச்சரியம். யார் கண்டார். இரண்டாவது பாகத்துக்கும் அவர் சென்றிருக்கலாம். சரி அத்தனை பாகங்களையும்தான் வாசித்தார் என்று வைப்போமே. ஏன் வெண்முரசின் இருபத்தாறாயிரம் பக்கங்களையும் வாசித்த உத்தமத் தமிழ் மகானாகவே அவர் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனா