Skip to main content

Posts

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

கடந்த சனியன்று விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அமைப்புகள் கூட்டுச்சேர்ந்து நடத்திய தமிழர் திருநாள் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. பெருந்திருவிழாபோல வடிவமைக்கப்பட்ட அந்நாளில் வெளியரங்குகள், உள்ளரங்குகள் என பல தளங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்குகள் என்று பன்மையில் சொல்வதன் காரணம், வெளியரங்குகளிலேயே விளையாட்டுகளுக்கான மைதானம் ஒன்று, அங்காடிகளுக்கான ஒழுங்குகள், பொதுமேடை எனப் பலவும் இருந்தன. உள்ளரங்குகளிலும் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கான திட்டமிடலே பிரமிக்கவைத்தது.

"வெள்ளி" நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்

ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான். அந்தத் தளத்தில் வெள்ளி ஒரு பிரமாதமான தொடக்கப்புள்ளி. காலத்தை வைத்துப் பார்த்தால், இலக்கியத்தில் இதுவொரு hybrid நாவல். இரண்டு முனைகளை (காலங்களை) இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் வேலை. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, கலைந்து, சின்னாபின்னமாகாமல், ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு பரிமாறும் நேர்த்தி சூப்பராக இருக்கிறது. இவ்வாறான ஒரு கதைக்களத்தின் போட்டேன்ஷியல் ரிஸ்க் என்று பார்த்தால், சிலவேளை பச்சை இலக்கிய கிழவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஒரு

அலைமீது விளையாடும் இளந்தென்றல்

காதல் கவிதை திரைப்படம். தேம்ஸ் நதியின் படகொன்றில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழவும் இலண்டன் மாநகரின் அழகிய கட்டடங்கள். அப்போது சட்டென்று பவதாரிணியின் குரல் ஒலிக்கும். “அலைமீது விளையாடும் இளந்தென்றலே. அலைபாயும் இரு நெஞ்சைக் கரை சேர்த்துவா”

வரலாறு எனும் பரத்தன்

செங்கை ஆழியானின் "ஈழத்தவர் வரலாறு" என்ற நூலின் எட்டாவது அத்தியாயம் “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்”. Buckle up folks! கைலாயமாலையின் தனிப்பாடல் ஒன்றில் வரும் வரிகள் இவை. “அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக் குல்விய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே.” பத்தாம் நூற்றாண்டில் கந்தவேளுக்கு கோயில் கட்டி புவனேகபாகு A அழகு பார்த்திருக்கிறான். அது பூநகரியிலிருக்கும் நல்லூர் என்கிறார் செங்கை ஆழியான். காரணம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அச்சமயம் பௌத்த செல்வாக்கும் சிங்கள மக்களதும் ஆதிக்கம் மேலோங்கி வந்ததால் உக்கிரசிங்க மன்னன் கந்தரோடையைக் கைவிட்டு சிங்கை நகருக்கு இடம்பெயர்ந்தான். பின்னர் சிங்கை நகர் மன்னனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பராந்தகனின் மந்திரிதான் புவனேகவாகு A. சிங்கை நகர் என்பது பெரு நிலப்பரப்பைச் சேர்ந்தது. அதனால் புவனேகவாகு A கட்டிய கோயில் பூநகரி நல்லூரில் அமைந்திருந்தது என்று செங்கை ஆழியான் வரலாற்று ஆதாரங்களைக் காட்டிக் குறிப்பிடுகிறார்.

இலையுதிர் அழகு

“தம்பி ஸ்கார்பரோவில எந்தெந்த சொந்தக்காரர் வீட்டயெல்லாம் போகோணுமோ சொல்லும். நான் கூட்டிப்போறன்” எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு நாட்களை மாத்திரம் ஒதுக்கியிருந்தேன். அதிலும் ஒரு நாள் கௌசல்யா அக்காவுக்கானது. அவர் என் பெரியம்மாவின் மகள். ஊரில் இருந்த காலத்தில் தீபாவளி என்றால் ஆட்டிறைச்சி சாப்பிட அக்கா வீட்டுக்குதான் ஓடுவோம். மணியாகப் பொரியல் கறி வைப்பார். அவர்களோடுதான் அரியாலைவரை ஒன்றாக 95ம் ஆண்டு இடப்பெயர்வின்போது சைக்கிள் உருட்டினோம். பின்னர் நாவற்குழியில் தொலைந்தாலும் வட்டக்கச்சியிலும் ஒன்றாக அவர்களோடு வாழ்ந்தோம். அக்காவுக்கும் தம்பி என்றால் போதும். எனக்கும் அக்கா என்றால் போதும். அத்தானும் ஒரு அற்புதமான மனிதர். எழுபத்தெட்டு வயது. கார் ஓடுவதில்லை. நான் வருகிறேன் என்று இரண்டு பேருந்து அட்டைகளுக்குக் காசு போட்டுத் தயாராக வைத்திருந்தார். ஊபர் நிரலியும் அவர் செல்பேசியில் உயிர்த்திருந்தது. “இல்லை அத்தான். சொந்தக்காரர், தெரிஞ்சாக்கள் என்று வெளிக்கிட்டா விடிஞ்சிடும். எனக்கு ஸ்கார்பரோவை சுத்திக்காட்டுங்கோ. பனங்கொட்டை பனிக்குளி

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

வெள்ளி நாவல் தயாராகிக்கொண்டிருக்கையிலேயே இவ்வகை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றுவது எமது கனவாக இருந்தது. நாவலில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை ஒரு எளிமையான அரங்கில் பாட்டு, நடனம், நயப்புரை கோர்த்து வழங்கவேண்டும் என்பதுதான் அது. அது ஈற்றில் கைகூடியது என்னளவில் மிகப்பரவசமான தருணங்களுள் ஒன்று. நிகழ்வில் மொத்தமாக மூன்று பாடல்களை எடுத்துச் செய்தார்கள். முதலாவது பாடல் குறுந்தொகையில் உள்ள செம்புலப் பெயல் நீரனாரின் ‘யாயும் ஞாயும்’. கொல்லன் மகளாம் வெள்ளி பட்டறையில் பணி புரிந்துகொண்டிருக்கும் சமயம் அங்கு வருகின்ற கோடனோடு செய்யும் சின்னதான காதல் விளையாட்டு இது. பாடல் யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன் இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா பொருளும் நயப்பும் - கேதா காணொளியாக்கம் - வசந்த் https://www.youtube.com/watch?v=b5Huswf0xCI

பாடசாலையை விட்டு வெளியே வாருங்கள்

ஜேகே ஒரு ஜொனியன் என்பதில் பெருமையடைகிறேன் என்று ஜூட் அண்ணா தன் உரையில் சொன்னார். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இது பிரபல பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றாலும் முதலில் நம் பாடசாலையைத்தான் சுட்டவேண்டும் அல்லவா? பரி. யோவான் கல்லூரி உருப்பட வேண்டும் என்று ஜொனியன்ஸ் எவரும் உண்மையிலேயே நினைக்கிறீர்கள் என்றால் முதலில் பாடசாலையை விட்டுக் கொஞ்சக்காலம் தள்ளி நில்லுங்கள். Get the hell out of there and leave the school alone.