Skip to main content

பீரை நினைச்சு மோரை அடிச்சும் ...





பீரை நினைச்சு மோரை அடிச்சும்
போதை ஏறாது, புரிஞ்சுக்கோ.
காரை நினைச்சு தேரை உருட்டியும்
ஸ்பீடு ஏறாது, அறிஞ்சுக்கோ.
கீரை கடைக்கு எதிர போட்டும்
வாங்க ஆள்வேணும், உணர்ந்துக்கோ.
கூரை பிரிச்சு அள்ளிக் கொட்டியும்
சாமி இல்லை நீ, தெரிஞ்சுக்கோ

ஒட்டகத்தை கூட்டிக்கொண்டு
பெட்டிக்கடை போகாதே.
வெட்டிப்பயல் லைக்குக்காக
ஒட்டடைய போடாதே.
சொட்டைப்பயல் படம் போட்டா
தொப்பி கொழுவிப்பார்க்காதே.
பிட்டு லிங்கை கிளிக்குப்புட்டு
டக்கு பண்ணி மாட்டாதே..

கல்லாமையோட நிண்டு நீயேன்
கட்டிப்பிடிச்சு உருளவேணும்?
மல்லுப்பிடிச்சி ஆருக்கு
என்ன லாபம் சொல்லு பார்ப்பம்?
இல்லுக்கிட்ட வில்லுப்பிடிச்சி
வெண்டவன காட்டு பார்ப்பம்?
சொல்லாத சொல்லைப்போல
நல்ல சொல்லு சொல்லு பார்ப்பம்?

வண்ணாத்திப் பூச்சிபோல
வாழுநாளு கொஞ்சக்காலம்.
எல்லாமே புரிய உனக்கு
இல்ல காணும் ரொம்ப நேரம்.
உள்ளகாலம் கொஞ்சத்தையும்
வெஞ்சினத்தில் கரைச்சுப்புட்டா
இல்லாமப் போனபின்னும்
கரையாது அண்டங் காகம்!

************* 

Photo : Peter Mueller

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக