Skip to main content

வானிசை நேர்காணல்

சிலவாரங்களுக்கு முன்னர் குமார் என்பவர் தொலைபேசி அழைப்பெடுத்து என்னோடு ஒரு வானொலி நேர்காணல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வானிசை என்று இங்கே மெல்பேர்னில் இயங்குகின்ற பிராந்திய வானொலி மையமொன்று. “சரி, செய்யலாம்” என்றேன். “நல்ல கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று வழமைபோல என்னிடமே கேட்டார்! சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா?” என்றார். “கேட்பது உங்கள் வேலை, ஆனால் சர்ச்சையான பதில்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்றேன். இனிமையான மனிதர். புரிந்துகொண்டார்.

சென்ற வெள்ளியன்று பேட்டி நேரடியாக ஒலிபரப்பானது. எமில்ராஜா என்பவர் பேட்டிகண்டார். முன்னர் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்ததாகச் சொன்னார். ஞாபகம் இல்லை. நானறிந்து எழில்வேந்தன் என்பவர் முன்னர் சக்தியில் இயக்குனராக இருந்தார். அப்புறம் அபர்ணாசுதன் வந்தார். அபர்ணாவையும் லோஷனையும் குணாவையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். குணாவுடன் "அழைத்துவந்த அறிவிப்பாளர்", "இளைய சக்தி" போன்ற நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன. ஆனால் எமிலுடன் பேட்டி எப்படிப்போகும் என்பதில் எனக்கு அவ்வளவாக ஆரம்பத்தில் சுவாரசியம் இருக்கவில்லை. என்ன வேலை, பிடித்த திரைப்படம் என்று கேட்டு அறுக்கப்போகிறாரோ என்று பயந்தேன். ஆனால் என் கணிப்பு பொய்யானது.

எமில்ராஜா நேர்காணலை மிகச்சிறப்பாகவே கையாண்டார். ஐந்தாறு வருடங்களி்ல் பல நேர்காணல்கள் செய்துவிட்டேன். எனக்குப்பேட்டி என்றால் கமல் விஸ்கிப்போத்தலோடு தகிட தகமி ஆடுவார். ஆனால் இது ஒகே போலப்படுகிறது. எவருமே ஆங்கில வாசிப்பு, எழுத்துப்பற்றி அதிகம் கேட்டதில்லை. எமில் லாகிரி பற்றி அதிகம் கேட்டார். “The Namesake” பற்றி மாத்திரம் ஐந்து நிமிடங்கள் பேசியிருப்போம். திருப்தியாக இருந்தது. கேட்பவர்களுக்கு எந்த பிரயோசனமுமல்லாத என்னுடைய படிப்பு, தொழில் பற்றிய கேள்விகளைத்தவிர்த்து ஏனைய கேள்விகள் நன்றாகவே அமைந்தன. சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்க இடம்கொடுக்காமல் நான் பதில்களை இழுத்துவிட்டதால் நிகழ்ச்சிக்குரிய நேரம் இடக்கு முடக்கு இடம்பெறாமலேயே முடிவடைந்துவிட்டது. மகிழ்ச்சி.

அறிமுகத்தின்போது நான் சமூகத்தொண்டுகள் செய்பவன் என்று நானே அறியாத விடயத்தைச்சொன்னார்கள். எழுத்தாளர் என்றால் சமூகத்தொண்டும் செய்வார் என்கின்ற default சிந்தனையாக இருக்கலாம். நான் செய்கின்ற மிகப்பெரிய சமூகத்தொண்டு சும்மா இருப்பது மாத்திரமே. அறியற்க!

எமில்ராஜாவுக்கும் குமாருக்கும் நன்றிகள். மீண்டுமொரு நிகழ்ச்சியை புத்தகங்களுக்காக மாத்திரமே எமில்ராஜாவுடன் செய்யலாம் என்று நம்புகிறேன்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக