Skip to main content

The Namesake


நண்பர் சுகத் ஒரு பதிவுக்கு ஒரு போட்டிருந்த கமெண்ட் இது.
“The books are like Guru's, most of the good books will find you, you don't have to go and find them.”
உண்மை தான். வாழ்க்கையில் சில புத்தகங்கள் நம்மை தேடிவரும். அப்படியே போட்டுதாக்கும். இது போல் ஒரு உறவு இனி இல்லை என்று அவை ஒன்றாக எம்மோடு கொள்ளும். இரவு பகல் பார்க்காது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் துணையாக ஏதாவது ஒன்றை அனுப்புவாராம். கணவனாக, மனைவியாக, சில கலைஞர்களுக்கு துணைவி கூட அமைவதுண்டு! சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, ஒரு சிலருக்கு செய்யும் வேலை, சிலருக்கு பணம். துணை பல வகை. எனக்கு அது புத்தகமா என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு. அப்படியென்றால் கடவுளுக்கு நன்றி. உனக்கும் ஒரு புத்தகம் அனுப்புகிறேன் கடவுளே!
என்னை அப்படி, கார்த்திக்குக்கு ஒரு ஜெஸ்ஸி போல போட்டு தாக்கியது இரண்டு நபர்கள். முதல் நபர் எண்டமூரி. அப்போது நான் பளையில் இடம்பெயர்ந்து அகதியாக இருக்கிறேன். 1995ம் ஆண்டு. பாடசாலை இல்லை. படிப்பு இல்லை. ஆனால் எண்டமூரியின் “ஒரு பறவையின் விடுதலை” இருந்தது. பளையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் வாசித்த புத்தகம். சாதாரண காதல் கதை தான். ஆனால் அந்த செடேடிவ் ஆன ஆண் பெண் உணர்வுகளை எண்டமூரியால் மாத்திரமே தர முடிந்தது. சுசீலா கனகதுர்காவுக்கும் இந்த இடத்தில் ஒரு ஹாட்ஸ் ஆப்!

102635728சில வருடங்களுக்கு முன்னர், எல்லாமே ஒரு blacked out ஆனது போன்ற உணர்வு. எந்த புத்தகமும் என்னை அண்டவில்லை. அப்போது ஒரு வித identity crisis இல் தத்தளித்துக்கொண்டு இருந்த காலம். பத்து வயது பள்ளித்தோழன் மயூரதன், அடிக்கடி என்னோடு பேசுவான். அவன் இருப்பது நியூயோர்க்கில், நான் மெல்போர்னில். அவனும் நானும் பேசும் விஷயம் எப்போதும் புத்தகங்களே. ஒருமுறை கேட்டான் “The Namesake” வாசிச்சிட்டியா என்று. இல்லை என்றேன். அதை முதலில் வாசி, அப்புறம் உன் பிரச்சினைக்கெல்லாம் நீயே முடிவுகள் எடுப்பாய் என்றான். எனக்கு ஆச்சரியம். உடனேயே “Augustan and Robertson” புத்தகக்கடையில் ஆர்டர் பண்ணி வாங்கியது தான் “The Namesake”.
article00லண்டனை பிறப்பிடமாக கொண்ட ஜோஹும்பா லாஹிரி எழுதிய நாவல் தான் இது. லாகிரி தன்னுடைய “Interpreter of Maladies” என்ற சிறுகதை தொகுப்புக்கு புலிட்சர் பரிசு வாங்கியிருக்கிறார். அதற்கப்புறம் எழுதியது தான் “The Namesake”. அப்புறம் “Unaccustomed Earth”. மூன்றுமே இன்றைக்கு என் வீட்டின் குட்டி நூலகத்தை அலங்கரிக்கின்றன. வாழ்க்கையில் சிலரை சந்திக்கும் பாக்கியம் எப்போதாவது தான் கிடைக்கும். அந்த சந்திப்பு உங்கள் வாழ்க்கையே மாற்றிப்போடும்.  “The Namesake” அந்த வகை புத்தகம். என்னை தேடி வந்து கொண்டாடிய தேவதை!

கதை என்ன?
ஆஷிமா கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண், அசோக்கை மணம் முடிக்கிறாள். அசோக் MIT இல் fellowship செய்யும் இன்ஜினியரிங் மாணவன். ஒரு ரயில் விபத்தில் கால் ஒன்று ஊனமாகிறது. அவன் உயிரை, அவன் வாசித்துக்கொண்டிருக்கும் ருசிய சிறுகதையான் “Overcoat” காப்பாற்றுகிறது. கால் ஊனமான அசோக், மணமகன் கிடைக்காத ஆஷிமா, இயல்பாக திருமண தரகர் மூலம் இணைகிறார்கள். ஆஷிமாவும் அசோக்கும் அமரிக்கா வருகிறார்கள்.
namesakeஇங்கு தான் கதை வேகம் பிடிக்கிறது. ஆஷிமா பெங்காலி கலாச்சாரத்தில் ஊறித்திளைத்த பெண். அசோக் ஒரு introvert intellect! நல்லவன் தான். ஆனால் இயல்பாக அவர்களின் வயது வித்தியாசம் அசோக்கை ஒருவித godman ஆக ஆக்குகிறது. ஆஷிமா அமெரிக்க கலாச்சாரத்தை கண்டு மிரள்கிறாள். கர்ப்பமாகிறாள். குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு பாட்டி தான் பெயர் வைக்கவேண்டும். பாட்டி அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை. பெயர் வைக்காமல் ஹாஸ்பிடலில் டிஸ்சார்ஜ் பண்ணமுடியாது என்று சொல்ல, அசோக் தன் உயிரை காப்பாற்றிய “overcoat” கதை எழுத்தாளர் “Gogol” பெயரை வைக்கிறார். வீட்டுப்பெயர் நிக்கில். Gogol வளர்கிறான்.

Gogol குடும்பம் விடுமுறைக்கு போகும் இடம் எப்போதுமே கொல்கத்தா தான். அவனுக்கு இயல்பாக, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கே உரித்தான identity crisis வருகிறது. Gogol  பெயரை எல்லோரும் கேலி செய்கிறார்கள். Gogol தன் குடும்பத்தை ஒவ்வாமையோடு பார்க்கிறான். அவர்களை விட்டு விலகிச்செல்கிறான். தன்னுடைய identity crisis ஐ மறைக்க அமரிக்கர்களுடன் நட்பு நாடுகிறான். சிகரட், மரிஜுவானா என எல்லா கெட்டபழக்கங்களுக்கும் அடிமை ஆகிறான். முதல் உடல் உறவு ஒரு அமரிக்கப்பெண்ணுடன், ஒரு பார்ட்டியில். குடிபோதையில் அந்த பெண் முகம் கூட அவனுக்கு ஞாபகம் இல்லை. இப்படி போகிறது அவன் வாழ்க்கை.

விரக்தியில் Gogol அவன் பெயரை நிக்கில் என்று மாற்றுகிறான். தந்தை ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடைய பெயரின் namesake ஐ விளக்குகிறார். Gogol அதை கேட்டு வருந்துகிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்பத்தோடு நெருக்கமாகிறான்.

namesake1_lGogol முற்போக்கு சிந்தனை கொண்ட மாக்சின் என்ற அமரிக்க பெண்ணை காதலிக்கிறான். அவள் வீட்டிலேயே டேரா போடுகிறான். அவள் அம்மா, அப்பா இருக்கும் ஒரே வீட்டில் இருவரும் வாழுகிறார்கள். அமரிக்க கலாச்சாரத்தில் சிக்கலான கூறுகள், இரண்டாம் தலைமுறை குடியேறியான Gogol, இவர்கள் மன உணர்வுகள் இந்த பகுதியில் அழகாக காட்டப்படுகிறது.

ஆஷிமாவுக்கு மாக்சினை Gogol அறிமுகப்படுத்தும் நேரம். ஆஷிமா இப்படியான அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள இப்போதெல்லாம் பழகிவிட்டாள். இந்த உறவும் கடந்து போகும் என்று நினைக்கிறாள். சில நாட்களில் அசோக்குக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துபோகிறான். இங்கே தான் கதையின் முதலாவது உச்சம் உருவாகுகிறது. Gogol இது வரை கொண்டிருந்த அந்த identity crysis  நொறுங்கி அவன் தான் யார் என்று உணர்கிறான். இங்கே அவனுக்கும் காதலிக்கும் சண்டை. பிரிகிறார்கள்.
image_06ஆஷிமா, சிலநாட்களில் Gogol க்கு மௌஷ்மியை அறிமுகப்படுத்துகிறாள். அவளும் ஒரு பெங்காலி இனத்துப்பெண். இரண்டாம் தலைமுறை குடியேறி. அவனுக்கு போலவே அவளுக்கும் அதே identity crisis. அதை உடைக்க, பிரெஞ்சு இலக்கியம், ஆணுக்கு மேல் ஆண் என தொடர்ந்து பல உறவுகளை தாண்டி வந்தவள். நிலையற்றவள். இருவருக்கும் பொருத்தமேயில்லை. ஆனாலும் பெங்காலி கலாச்சாரத்தின் படி திருமணம் முடிக்கின்றனர், டேட்டிங் கூட அதிகம் செய்யவில்லை. இரண்டு coffees, ஒரு நாள் மௌஷ்மி வீட்டில் விருந்து. அங்கே உடல் உறவு கொள்ளும்போது அவள் oven இல் வைத்த bacon தீய்ந்து விடுகிறது! லாஹிரியின் நுட்பமான எழுத்தின் அடையாளங்கள் இவை!

namesake5Gogol  ஓரளவுக்கு இந்த புது வாழ்க்கைக்கு தயாராகிவிட்டான். மௌஷ்மிக்கு முடியவில்லை. ஒரு நாள் அவளுக்கும் அவளின் முன்னாள் காதலனுக்கும் தொடர்பு என்ற அதிர்ச்சி Gogol க்கு தெரியவருகிறது.

இந்த சமயம் தான், Gogol இன் தங்கை சோனாலியின் திருமணம் நடக்கிறது. அவள் ஒரு யூத இனத்து ஆணை மணம் முடிக்கிறாள். ஆஷிமாவும் வீட்டை விற்றுவிட்டு கொல்கத்தா போக முடிவு எடுக்கிறாள். அப்போது தான் Gogol இன் நிலை அவளுக்கு புரிகிறது. அவள் அமரிக்காவிலேயே தங்க தயாராக, Gogol இல்லை என்று சொல்லி தாயை அனுப்பிவைக்கிறான்.

220px-Gogol_Paltoஇப்போது Gogol தனியே. அமரிக்காவில், பிறந்து வளர்ந்து, எல்லாமே இருண்டு போய் தனிமையை உணர்கிறான். அப்பாவின் குட்டி நூலகத்துக்கு போகிறான். அங்கே “Overcoat” புத்தகம் கண்ணில் புலப்படுகிறது. அந்த புத்தகம் அவனுக்காய் அப்பா எப்போதோ பரிசாக வாங்கி, கொடுக்க முடியாமல் போன புத்தகம். Gogol வாசித்துக்கொண்டு இருக்கும்போது ……
எனக்கு இதற்கு மேல் கதையை விவரிக்க முடியவில்லை. மன்னிக்கவும்!

இந்த புத்தகம் ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு வாங்கிக்கொண்டு வந்தேன். வாசிக்க ஆரம்பித்து, போக போக, உடம்பு பட படக்க ஆரம்பித்து குளிரத்தொடங்கி விட்டது. ஹீட்டர் போட்டும் பயனில்லை. அதிகாலை நான்கு மணியளவில் மௌஷ்மியின் infidelity சம்பவம் வாசிக்கிறேன். என்னை அடித்துப்போட்டது. எப்படி என்ற கேள்வியும் ஏன் என்ற கேள்வியும், Gogol எப்படி அதை தாங்கிகொள்கிறான் என்பதும் புரியவில்லை. புத்தகம் முடியும் போது அதிகாலை ஏழு மணி, என்னை அறியாமல் மனம் இறுகி, கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. Gogol இன் தனிமை மிரட்டியது. கண்ணாடியில் Gogol ஐயே பார்த்தேன். இப்படி ஒரு நாவல், இனி என்னை தேடி வருமா?
அசோக் மரணம் சம்பவிக்கும் இடமும் கனக்கவைக்கும் பயங்கரம். ஆஷிமா அடைந்த அந்த உணரச்சியை லாகிரி விவரிக்கும் இடம். நோபல் பரிசு ஏன் கொடுக்கவில்லை? அபாரம்.
"She stares at her empty teacup, and then at the kettle on the stove, which she'd had to turn off in order to hear her husband's voice just a few hours ago. She begins to shiver violently, the house instantly feeling twenty degrees colder. She pulls her sari tightly around her shoulders, like a shawl. She gets up and walks systematically through the rooms of the house, turning on all the light switches, turning on the lamppost on the lawn and floodlight over the garage as if she and Ashoke are expecting company. She returns to the kitchen and stares at the pile of cards on the table, in the red envelopes it had pleased her so much to buy, most of them ready to be dropped in the mailbox. Her husband's name is on all of them" .... excerpt from "The Namesake", the book I will live, only live with throughout my life!”
நான் ஒரு உல்டா பேர்வழி. என்னுடைய “Girl Is Mine” என்ற ஆங்கில சிறுகதையிலும் இந்த உணர்வுகளை கடன் வாங்கியிருப்பேன்! எழுதும்போது காப்பி பண்ணுகிறேன் என்ற உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில் சிறுகதையில் வரும் அந்த உணர்வை நானும் அனுபவித்து இருக்கிறேன். நிஜத்தை லாஹிரியும் சொல்லலாம். நானும் சொல்லலாம்!
"Please Jake ..."
I stared at the car audio player, which I just paused in order to talk to Jessie. I began to shiver rather violently, the car instantly feeling ten degrees colder even though the cooler is switched off. I put my seat belt on suddenly, lowered the window glass and started staring outside. Its morning still, students just started  to gather inside the campus compound and chit chat. Some students are talking to themselves with some notes in hand. They must be memorizing something, it should be an exam period.”
அதுமட்டுமல்ல, தமிழில் எழுதிய சிறுகதை சுந்தரகாண்டத்திலும் இந்த காட்சியை விட்டு வைக்கவில்லை!
“மேகலா அமைதியாய் இருந்தாள். அவளுக்கு புரிந்துவிட்டது. அவள் இது நாள் வரை எதை எண்ணி பயந்தாளோ அதுவே தான். ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்தாள். வவுனியா வெயில் சுட்டு எரித்தது. மேகலா சற்றே குளிருவது போல உணர்ந்தாள். கைகள் இரண்டையும் இறுக்கமாக மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள். அறை திடீரென்று நிசப்தமானது போல தோன்றியது. தந்தையின் கையில் இருந்த குழந்தை இன்னும் அழுதுகொண்டிருந்தது.”

“The Namesake” என்னை எப்படி மாற்றியது என்பதை அறியவேண்டுமானால் நண்பன் கஜனிடமோ அல்லது என் அக்காவிடமோ கேட்டுப்பாருங்கள். என் வாழ்க்கையில் “The Namesake” க்கு முன்னர், “The Namesake” பின்னர் என்ற முற்றிலும் மாறுபட்ட இரண்டு ஜேகேகள் இருக்கிறார்கள். Gogol க்கு இயல்பாக் இருந்த Identity crisis ஐ நான் எனக்கு வலிந்து திணித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அவனுக்கு உடைந்த அதே கணம், நானும் அதை உடைத்துவிட்டேன். நன்றி லாகிரிக்கு!
The Namesake, எனக்கு நெருக்கமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அமுதாவுக்கும் எனக்கும் உருவான நட்பு The Namesake இல் ஆரம்பித்தது தான். அவள் கணவன் ஒரு பெங்காலி, ஒருமுறை அவர்கள் வீட்டில் இந்த புத்தகம் இருந்ததை கண்டு, அது பற்றி கேட்டபோது, இன்னும் வாசிக்கவில்லை என்றாலள். மயூரதன் எனக்கு சொன்னதை அவளுக்கு சொன்னேன். கணவனும் மனைவியும் ஒன்றாக ஒருமுறை விடுமுறைக்கு சென்றபோது வாசித்துவிட்டு சொன்னார்கள் “It was an epic”. அன்று உருவான நட்பு தான், இன்றைக்கு நான் சிங்கப்பூரில் சம்பாதித்தது எது என்று கேட்டால், அவர்கள் இருவரும் தான். எனக்கு ஒரு சிக்கல் என்றால் call பண்ணி பேசுவதற்கு இருக்கும் ஒரு சில நண்பர்களுள் அவர்களும் அடங்குவர்.
namasakeஇந்த புத்தகத்தை மீரா நாயர் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்.  தேர்ந்த நடிகர்களான இர்பான் கான், தபு, கல் பென் போன்றோர் நடித்து இருந்தார்கள். படம் என்ன மாதிரி மூட் கிரியேட் பண்ணவேண்டுமோ அதை சரியாகவே கிரியேட் பண்ணியது என்று நினைக்கிறேன். ஆனாலும் புத்தகங்கள் எப்போதுமே சிறப்பு தான். எங்கள் பாத்திரங்கள், எங்கள் லோகாஷன்கள். அவை தரும் உணர்வை எந்த திரைப்படமும் தர முடியாது.
இது இலக்கியம்!
இந்த புத்தகம் வாசித்த சூட்டிலேயே, லாகிரியின் ஏனைய இரண்டு புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன். எனக்கு மனது கணக்கும் போதெல்லாம் கையில் எடுக்கும் புத்தகம் The Namesake தான். அப்படி ஒரு பாசம் அதன்மேல். லாகிரி போல ஒரு வாழ்க்கையை, புலம்பெயர்ந்த வாழ்க்கையை எழுத முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த வகை இலக்கியங்கள் எமக்கு வேண்டும். எமக்கு என்பதை விட, எம் அடுத்த தலைமுறைக்கு வேண்டும். வாசகர்கள் நாங்கள் தான் இப்படியான எழுத்தை கொண்டாட வேண்டும். அப்போது தான் நம் அடுத்த தலைமுறை Youtube இல் கழிக்கும் நேரத்தை விட புத்தகங்களில் கழிக்கும் நேரம் அதிகமாகும்.

மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு காதலியுடன்!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக