பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது . அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன . கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் இருக்கும் சமாதானம் எப்போது பெர்த்திட்க்கு வரும் என்று கூற முடியுமா?
ReplyDeleteநேற்று அனுப்பினேன். இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடும்.
ReplyDelete- ஜேகே
இன்று சமாதானம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி . உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசத்தையும் கடக்க வேண்டும் என்னும் போது மனம் சமாதானம் அடைய மறுக்கிறது.ஆவலுடன் வாசிப்பதட்கு காத்திருந்தேன்..... ஆனால் அந்த ஒரு பெயரில் மனம் உடைந்துவிடுகிறது
ReplyDelete