Skip to main content

Posts

Showing posts from January, 2026

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை. இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றி...

ஆறிடும். ஆறாது.

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு மிக நெருக்கமான அக்கா ஒருவர் ஒரு வார்த்தை சொன்னார். அது என்ன வார்த்தை என்பதோ சொல்லப்பட்ட சூழலோ அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அது என் ஆழ் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அப்படியொன்றும் மோசமாக எதையும் சொல்லவில்லை. அது சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய ஒன்றுதான். ஆனால் என் நுண்ணுணர்வை அது தாக்கிவிட்டது. பிறரிடம் கடமைப்படுவது என்பது எனக்குக் கொல்லக்கொண்டுபோவதுபோல. அதனால் மனம் சஞ்சலத்தோடு அலைந்தது. அந்த மன அங்கலாய்ப்பு அர்த்தமற்றது என்று புத்தி எனக்குப் பாடம் புகட்டியது. ஆனால் என் மனதினால் அதனை விட்டுத்தள்ளமுடியவில்லை. நாள் முழுதும் அது புலம்பிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாளே, சொல்வழி கேட்கமாட்டாயா என்று புத்தி என் மனதைக் குட்டி அடக்கியதால் மனம் கூண்டுக்குள் பதுங்கிய நாய்க்குட்டியாட்டம் ஒடுங்கிவிட்டது. ஆனால் இரு வாரங்கள் கழித்து, புத்தி வேலைக்குப் போயிருந்த சமயம் மனம் கூண்டுக்குள்ளிருந்து மறுபடியும் வெளிவந்து வேலையைக் காட்டிவிட்டது. ஏனென்று தெரியவில்லை. சாதாரண விசயம்தான். சனியன்போல அலைக்கழிந்தது. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என்று ஒரு பாட்டு இருக்கு. கன்னி மனத...