Skip to main content

Posts

கொட்டக் கொட்ட விழித்திருத்தல்

மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.

காற்று வெளியிடை

எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம். நீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர்  வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடும். நீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீரு

ஸ்டூடியோ மாமா

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழமாற்றத்தி்ல் “ஸ்டூடியோ மாமா” பற்றி எழுதியிருந்தேன். சென்றவாரம் கோபி அண்ணாவும் அவரின் நண்பர்களும் பேபி ஸ்டூடியோவுக்குப் போனசமயத்தில் மாமாவைக் கண்டிருக்கிறார்கள். கூடவே நான் எழுதியதும் ஞாபகம் வந்து அவருக்கு இதை வாசித்துக் காட்டியிருக்கிறார்கள். “I met the baby studio owner and told him about the blog. When I showed him he was in tears. Especially when he heard that he was like Ilayaraja” வட்ஸ்அப் மெசேஜை வாசித்தபோது சிரிப்பு, நிறைய அந்தரம், பயங்கர சந்தோசம் ஏற்பட்டது. கோபி அண்ணாவுக்கு நன்றி. இளையராஜாவின் இரண்டு படங்களையும் அண்ணர் எடுத்து அனுப்பியிருந்தார். அந்தப்பதிவு மீண்டும்.

வெற்று முரசு

                                                                        அதிகாரம் என்ற சொல் ஆலமரங்களில் ஒட்டுண்ணியாகப் படரும் குருவிச்சைத் தாவரம் போன்றது. அது தான் அடையாகும் மொழியையே தனது விருந்து வழங்கியாக்கி முழுங்கிவிடவல்லது. மொழியின் எந்தச்சொல்லோடும் பொருந்திவர வல்லது. அதிகாரம் போதை. அதிகாரம் நஞ்சு. அதிகாரம் அகங்காரம். அதிகாரம் மமதை. அதிகாரம் கோபம். அதிகாரம் மடமை. அதிகாரம் மாயை. அதிகாரம் அவசரம். அதிகாரம் அரைவேக்காட்டுத்தனம். அதிகாரம் கவர்ச்சி. அதிகாரம் காமம். அதிகாரம் அடிமைத்தனம். அதிகாரம் வீழ்ச்சி. அதிகாரம் கீழ்மை. அதிகாரம் துஷ்பிரயோகம். அதிகாரம் இறை. அதிகாரம் மையம். அதிகாரம் போலி. அதிகாரம் பண்பாடு. அதிகாரம் இனம். அதிகாரம் மனிதம். அதிகாரம் மொழி. ஆனால் தனியராக அதிகாரத்தின் அர்த்தம்தான் என்ன?

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

நேற்று இடம்பெற்ற “அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது” ஒன்றுகூடல் மிகுந்த மனத்திருப்தியோடு நடந்து முடிந்தது. வாசிப்பின் உந்துதலில் தூரத்தையும் பொருட்படுத்தாது பன்னிரண்டுபேர் இணைந்திருந்தார்கள். எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் சம்மணமிட்டு, சுற்றி உட்கார்ந்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் என்பது ஒரு நீண்டகாலக் கனவு. சாத்தியமாக்கியதற்கு அனைவருக்கும் நன்றிகள்.

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

அது என்னவோ தெரியாது, கடந்த ஒரு சிலமாதங்களாகவே அசோகமித்திரன் புராணம்தான். ஒலிப்புத்தகத்தில் அவருடைய சிறுகதைகளைக் கேட்டு, அது பற்றிப் பேசுவதற்குத் துணை வேண்டுமென்று சொல்லிக் கேதாவையும் கேட்கவைத்துப் பின்னர் நித்தமும் காலையில் வேலைக்குப்போகையில் ஒரு மணிநேரம் தொலைபேசியில் அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம்.

இக்கரைகளும் பச்சை 4: பஹன

“வரேக்க சிங்களப்பேப்பர் கொஞ்சம் எடுத்தாறீங்களா? மரக்கறி சுத்திவைக்க ஒண்டும் இல்லை” தமிழ்க்கடை வாசலில் மெல்பேர்ன் நகரத்து இந்திய, இலங்கை இலவசப் பத்திரிகைகள் ஒருபக்கமாகச் சிதறிக்கிடந்தன. அநேகமானவை ஆங்கிலப் பத்திரிகைகள். சிலது சிங்களத்தில். பக்கத்திலேயே விளம்பரக்கட்டுகள். லைக்கா மொபைல் தொட்டுப் பரதநாட்டிய வகுப்புவரை அச்சடிக்கப்பட்ட விளம்பரங்கள். எல்லாவற்றிலும் பெண்கள் தெரிந்தார்கள். இந்தியப்பத்திரிகைகளில் பொட்டு வைத்திருந்தார்கள். லங்கா டைம்ஸ் முகப்புப்பக்கத்தில் திருமணவுடையில் ஒரு அழகான சிங்களத்துச் சின்னக்குயில் சிரித்துக்கொண்டிருந்தது. மெல்லிய தங்கநிறத்தில் ஸீத்ரூ சேலை அணிந்து, கழுத்தில் ஆரம், நெற்றிச்சுட்டி, நிறைந்த சிரிப்பு, சிங்களத்திகளுக்கேயுரிய மேல்நோக்கி எறியும் கண்கள் என்று, இன்னமும் சில நிமிடங்களில் புட்டவிக்கும் நீத்துப்பெட்டியைத் தலையில் அணிந்தபடி தோன்றப்போகும் கண்டிய இளவரசனுக்காகக் காத்திருக்கும் மணமகள். தூசி படிந்து, கட்டுக்குலைந்து, கால்களுக்குள் மிதிபட்டு.  எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாய்ப் பொறுக்கி கார் டரங்கில் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.

சோமப்பா சொன்ன கதை

விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களைக் கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாகக் கமம் செய்து வருபவர்கள். பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும்தான் அவர்கள் வாழ்வு. அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைத்தே ஆகவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும் உழைப்பார்கள். பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்குப் போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளைகளில் வெள்ளம் பயிரை மேவிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. அவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றது. அடிக்கடி பஞ்சப்பாடு. ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை தவறாமல் அரசனுக்கு திறை செலுத்துவார்கள். மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள்.  விருத்தேஸ்வரம் நல்லவர்களைக் கொண்ட தேசம்.

வழிகாட்டிகளைத் தொலைத்தல்

ஒரு மழை நாள் இரவில் வேதாளத்தைத் தோளில் போட்டவாறு வீடு திரும்புகையில் அது கேட்ட கேள்வி இது. இலக்கியம் என்பது சமூகத்தினுடைய வழிகாட்டி, அது மானுடத்தை மேம்படுத்துகிறது. இலக்கியமே அகவயமான ஈடேற்றங்களுக்கு வழிகோலுகிறது. நம்மைச் செழுமைப்படுத்துகிறது. காலவோட்டத்தில் அறம் என்பதன் புறவரைவினை மீள்பார்வை செய்து சீர்திருத்துவதும் அதுவே. இவையெலாம் உண்மை எனின் இத்தகைய அற்புதமானதொரு சமூகக்கருவி ஏன் பொதுப்புத்தியில் அதிகம் தாக்கம் செலுத்தத் தவறுகிறது? இலக்கியங்களின் இருப்புக்கு மத்தியிலும் எப்படி நம் சமூகம் இப்படி வன்முறைப்போக்கோடு முழித்துநிற்கிறது? பொதுப்புத்தியைக்கூட விலத்திவைப்போம். இலக்கியம் அதனைப் படைப்பவரைக்கூடச் செழுமைப்படுத்துவதாகத் தெரியவில்லையே? போட்டியும் பொறாமையும் கோபமும் வன்மமும் பொய்யும் இகழ்வும் இன்னும் பல தீக்குணங்களும் இலக்கியவாதிகள் உட்பட எல்லோர் மத்தியிலும் வியாபித்து நிற்கிறதே? அறத்தின் உபாசகர்கள் பலரிலும் அறம் பொய்த்து நிற்பது பரவலாக இடம்பெறுகிறதே? இது முரண் அல்லவா? இலக்கியத்தின் நோக்கம் மீதான பிம்பம் அதன் உபாசகர்களால் அவர்களுடைய இருத்தலுக்காக அபரிமிதமாகக் கட்டமைக்கப

ஊக்கி

“Yarl IT Hub” நிறுவனத்தினர் “ஊக்கி” என்கின்ற மென்பொருள் எழுதும் பயிற்சி நெறி ஒன்றுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.