Skip to main content

“மேகம் இடம் மாறும்போது!!”


அன்புள்ள பிருந்தன்!
Nachathera-brunthanஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான்.  சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை குட்டு வாங்கியதால் பாடுவதை குளியலறையோடு நிறுத்தியவன். என் விமர்சனத்தை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. குப்பையில் போட்டு விடலாம். ATM மெஷினில் வரும் Balance Receipt ஐ பார்த்து விட்டு கசக்கி எறிவது போல எறிந்துவிடுங்கள். எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று எப்படியும் பார்ப்பீர்கள் தானே!

உங்களையும் உங்கள் சகோதரர்களையும் முதன் முதலில் கேள்விப்பட்டு இன்றைக்கு பத்து வருடங்கள் இருக்குமா? அப்போது தான் சில ராஜா, ரகுமான் பாடல்களை உங்கள் குரல்களில் பாடி ஒரு சீடி வெளியிட்டு இருந்தீர்கள். கஜன் கொடுக்கும் போதே, “காந்தினியின் குரலை கேட்டுப்பார், she got something” என்று சொன்னான். அதுதான் ஆரம்பம்.
அப்புறம் கூடிய சீக்கிரமே உங்கள் ஆல்பம் “துளிகள்” வெளியானது. கஜன் சீடீ வாங்கிக்கொண்டு நேரே என் வீட்டுக்கு தான் வந்தான். எம்மிடம் இருந்த 5 in 1 இல் போட்டு கேட்டோம் ..
By then I  realised you got something!

Brunthan’s masterpiece of todate!
அந்த அந்தி நேர இடியுடன் கூடிய மழை, தொடர்ந்து வரும் beat, கேட்கும்போதே நீங்கள் ரகுமானின் தீவிர ரசிகனா? என்று கஜனிடம் கேட்க அவன் சிரித்தான். அந்த காலத்தில் “Thakshak” படத்தில் வந்த “Bhondhon se baatein” என்ற பாடலை இலங்கையில் பலர் அப்போது அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் உங்களுக்கு அந்த பாடல் எப்படிப்பட்ட காட்சியில் வருகிறது என்று கூட தெரிந்திருக்கவேண்டும். A beautifully inspired starting piece.
இந்த பாடலின் அழகை விவரிப்பது நான் என் காதலியை மற்றவர்களுக்கு விவரிப்பது போல. “மேகம் இடம் மாறும்போது” என்று ஆரம்பிக்கும் போது அப்படியே காதலி பின்னால் வந்து தோள் சுற்றி கைகள் போடும் உணர்வு ஏற்படும். “பிரிவின்றி உறவில்லை” என்று பாடும் காந்தினி அப்புறம் “மாற்றம் இன்றி” என்ற கீழ் நோட்டில் சற்றே விழுங்கினாலும் நீங்கள் அப்படியே take off ஆகி “உன்னை என்றும் மறவேன்” என்று மாறுவீர்கள். அருமை!
276802_201879359853239_4234108_nபின் அந்த வயலின் intelude. முதல் கவுன்டிங்கில் வரும் கடைசி நோட்டில்(என்ன நோட் என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு knowledge பத்தாது எனக்கு), வயலின் improvise பண்ணி ஒரு சங்கதி போடும். அதே சங்கதியை முதலாவது சரணத்தின் இறுதியில் காந்தினி பாடுவார்(அது பெண்குரலா? இல்லை வயலினா? என்று ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்!). நீங்கள் அப்போது சகியே என்று சொல்வீர்கள். காந்தினியின் bravo attempt இல் உங்கள் portion வெறும் harmony தான்! இசையமைப்பாளனாய் நீங்கள் non-striker ஆய் நின்று பாடகியை அடித்து ஆட விட்டிருக்கிறீர்கள்! பொண்ணுக்கு இன்றைக்கு சுற்றி போடுங்கள். நாள் முழுக்க வேறு பாடலுக்கு தாவுவதாக இல்லை. She is too good. கொஞ்சம் ஹரிணி, கொஞ்சம் ஜெயஸ்ரீ சேர்த்து செய்த கலவை இந்த பெண்!
யார் அந்த Piano?  இனிமை! இரவு நேரம், நிலவு முற்றத்தில் கேட்க வேண்டிய master piece. இதம். Original Piano பாவித்து இருந்தால் இன்னும் அதிகம் உயிர் வந்து இருக்குமோ? 3.08 timeline ஐ மீண்டும் கேட்டுப்பார்த்தேன், extra note ஒன்று வருகிறது. இசையை சுவாசிக்கும் சிலர் சேர்ந்து இந்த பாடல் அமைத்து இருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் கொஞ்சம் clarity இல்லையோ? அதிகபிரசிங்கித்தனம் என்று நினைக்கவேண்டாம். iPad வாங்கி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் இந்த பாடல் 247 தடைவைகள் play பண்ணி இருக்கிறேன். நம்புவீர்களா?
சரணம் போவதற்குள் பதிவு இத்தனை நீண்டு விட்டது. எனக்கு எதை எடுக்க எதை விட என்று தெரிய வில்லை.
“உன் கூந்தல் உதிர்க்கும் பூக்கள், நாம் குளிக்கும் நதியை தேடும்“
“என் நறுமணம் உனை சூழ்ந்து” …
இந்த இடங்கள் எல்லாம் மெலடி மென்னியை திருகும் .. பிருந்தன். பொறாமையாய் இருக்கிறது!

மீண்டும் வயலின்… ஒப்பிடுகிறேன் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். உங்கள் originality யை என்னளவுக்கு இன்னொரு ரசிகன் கொண்டாடி இருப்பானா என்பது சந்தேகமே! இது ஒரு complement தான். தேவாவின் இசையில் “அன்பே டயானா” என்று ஒரு படம் வந்தது. “ஒரு முறை சொன்னால் போதுமா” என்ற ஹரிகரன் சுஜாதா பாடிய பாடல் அது. நீங்கள் கேட்டீர்களோ தெரியாது. எனக்கு கொள்ளை பிரியம். அந்த பாடல் இருக்க கூடிய வரிசையில் வரக்கூடிய அருமையான பாடல் இந்த “ஒரு போய் சொல்லாயோ” என்ற பாடல்.  மீண்டும் நீங்களும் காந்தினியும் சேர்ந்து கலக்கும் பாடல். “இரு மனம் இணைந்திட” என்று அவரோகணம்( சரி தானே) வரும் போது அப்படியே மெத்தையில் ஆயாசமாய் விழுந்து படுக்கும் உணர்வு. Brilliant!
என்ன சொல்வது? கொஞ்சமே கமகம்கள் அதிகமாய் போய்விட்டது. அதுவும் அந்த கீழ் நோட்களில் கம்பி மாதிரி பிடிக்கவேண்டுமோ என்னவோ என்ற எண்ணத்தில் அந்த கம்கம்கள், அது பாடலின் உயிரை சற்று பதம் பார்க்கிறது போல எனக்கு தோன்றுகிறது.
161997_170743269630902_4072412_n
உங்கள் ஏனைய சகோதர்களின் பாடல்களும் கேட்டு இருக்கிறேன். குறிப்பாக “தா” திரைப்பட பாடல். இசை குடும்பம் தான். எல்லாமே மீன் குஞ்சுகள் இல்லை, திமிங்கிலங்கள். கலக்குங்கள்!
நான் அடிக்கடி கஜனுக்கு சொல்லி குறைப்படும் ஒரு விஷயம். உங்கள் “துளிகள்” பாடல்களின் வரிகள். வைரமுத்துவை பிரிந்த ஆரம்ப காலத்தில் வந்த சில ராஜா பாடல்களின் வரிகள் போல மிக சாதாரணமாக இருக்கிறது! ஆனால் ராஜா எப்படி தன் மேட்டுகளால் பூசி மெழுகினாரோ(உதாரணம்: சித்தகத்தி பூக்களே) அது போல உங்கள் மேலடிகள் அந்த வரிகளில் இருக்கும் குறையை மறைத்து விடுகிறது.
“ஒரு பொய் சொல்லாயோ நீ, உன் காதலன் என்று” .. இந்த வரிகள் ஏற்கனவே கேட்டு விட்டோமே? ஒன்றுக்கு இரண்டு முறை. “உன்னை காணாமல் உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தாயடா”, மிக சாதாரணமாக இருக்கிறது. எனக்கேன்னவோ, சந்தத்துக்கு வார்த்தைகள் கோரத்தது போல, நீங்கள் composer தான். நல்ல மெட்டு தான் ஒரு பாடலுக்கு தூண். ஆனால் வரிகள் தான் காலம் போக போக எம்மில் அந்த பாடல்களை ஊற வைக்கும். நான் சில முறை கேட்பவர்களை கணக்கில் எடுக்கவேயில்லை. இருநூறு தடவைகளுக்கு மேலே உங்கள் பாடல்களை கேட்டு ரசித்தவன் இல்லையா! சொல்லும் உரிமை இருக்கிறது! Exaggeration என்று நினைத்தால் கஜனுக்கு ஒரு call போட்டு கேளுங்கள்!!
கொஞ்ச காலத்துக்கு முன்னர் “Music And Lyrics” என்ற ஒரு அருமையான படம் வந்தது. ஒரு composerக்கும் பாடலாசிரியருக்கும் இடையேயான காதல். அந்த படத்தின் சில வசனங்களை தருகிறேன்.
ஒரு பாடலுக்கு மெட்டு முக்கியமா? இசை முக்கியமா? என்ற ஒரு argument இந்த படத்தில் வரும்.  Alex தான் பாடகர். Sophie அந்த பாடலாசிரியை.
Alex : It doesn't have to be perfect. Just spit it out. They're just lyrics.
Sophie : "Just lyrics"?
Alex : Lyrics are important. They're just not as important as melody.
Sophie : A melody is like seeing someone for the first time. The physical attraction. Sex.
Alex : I so get that.
Sophie : But then, as you get to know the person, that's the lyrics. Their story. Who they are underneath. It's the combination of the two that makes it magical.





என் அளவில் இந்த பாடல், இசையும் வரிகளும் சங்கமிக்கும் ஒரு உன்னத புள்ளி. உங்களுக்கு தெரியாதது என்று இல்லை. மனம் கேட்காமல் உங்கள் தீவிர ரசிகன் என்ற முறையில் எழுதிவிட்டேன்!
உங்களின் பல பாடல்கள் பிடிக்கும். ஆனால் இரண்டு master pieces மாத்திரம் இன்று எடுத்து இருக்கிறேன். உங்களை நான் எப்போதும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறேன். நம்மவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்பவனின் திறமையை ரசிக்கப்பிடிக்காது. எங்கோ ஒரு மூலையில் இருப்பவனை தேடி தேடி ரசிப்பான். ஆனால் என் playlist இல் உங்கள் பாடல்கள், சமகாலத்தில் வந்த “பூவாசம் புறப்படும் பெண்ணே”, “என்னுயிர் தோழியே”, “காடு திறந்து” பாடல்களுடன் ஒன்றாக இருக்கிறது. ரகுமானும் ராஜாவும் தரும் பரவசங்களை இந்த இரண்டு பாடல்களும் தருகின்றன. என்ன நீங்கள் இப்போது தான் முதல் செஞ்சரி அடிக்கிறீர்கள், அவர்கள் 99 சென்சுரிகள் கடந்து விட்டார்கள். அண்மையில் வந்த உங்கள் பாடல்களில் அந்த “கனவே கனவின் நினைவாலே” பாடல், மனதை தொடுகிறது. பியானோ பின்னுகிறது. இம்முறை sound mixing இல் நல்ல நேர்த்தி. முழுப்பாடலையும் கேட்க ஆவலாய் இருக்கிறது. கிடைக்குமா? Smile


பதிவு நீண்டு விட்டது! ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். பாடல் கேட்பதை விட எனக்கு வேறு வேலை கிடையாது! வேலையிலும் பாடல் தான்! எனக்கு இளையராஜாவில் இருக்கும் ஆனால் மற்றய இசையமைப்பாளர்களிடம் இல்லாத ஒரு விஷயம் எப்போது பிடிக்கும். அது தான் ஆச்சரியம் தருவது! ஆச்சரியம் என்பது எதிர்பாராத போது கிடைக்கவேண்டும்.  ரகுமானிடம் அது இல்லை. ரகுமான் தன் பாடலின் ஆரம்பத்திலேயே அந்த பாடலின் mood create பண்ணி விடுவார். வித்தியாசமான பாடல்களை இங்கே  நான் சொல்லவில்லை. உதாரணமாக “ஆரோமலே” ஒரு வித்தியாசமான பாடல். ஆனால் அதை கேட்க ஆரம்பிக்கும் போதே அது ஒரு வித்தியாசமான பாடல் என்று தெரிந்து விடுவதால் கேட்கும் போது ஆச்சரியம் ஏற்படாது. வியப்பு தான் ஏற்படும். ராஜாவின் சில பாடல்கள் எதிர்பார்க்காத திருப்பங்களை தரும். மிக சாதாரணமாக தான் அவை ஆரம்பிக்கும். அட அடுத்த பாடலுக்கு தாவுவோம் என்று நினைக்கும் போது தான் மனசை போட்டு தாக்கும் மெலடி ஒன்று சரணத்தில் வந்து இறங்கும்.

எப்படி தொடங்குகிறது இந்த பாடல்? கனவில் கூட நினைக்க மாட்டோம் இந்த பாடல் சரணத்தில் அப்படி மாறும் என்று. Interlude இல் நேர்த்தியான தெம்மாங்குக்கு தாவி சரணம் வரும்போது மெலடி நம்மை அள்ளும். சித்ரா பாடும் போது அது இன்னும் உருக்கும். உருக்கிக்கொண்டு இருக்கும் போதே பாடல் பழைய இடத்துக்கு போய்விடும். அது தான் ராஜாவின் ஆச்சரியம். அதனால் தான் ராஜாவும் ஆச்சரியம்! ரகுமானும் அப்படி ஆச்சரியங்கள் தந்திருக்கிறார். சிலவேளை அவரிடம் ஆச்சரியங்களை மட்டுமே நாம் எதிர்பார்ப்பதால் அது அடி பட்டு போய்விடுகிறது போல. ரட்சகனின் “மெர்குரி பூக்கள்” பாடலின் சரணம் அப்படிப்பட்டது. எதிர்பாராத மேலோடி அது! (பின்னர் அதை அவர் “லகான்” படத்தில் பாவித்தது வேறு விஷயம்!)

பிருந்தன் …. உங்களிடம் ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன். ஆச்சரியப்படுத்துங்கள்!

அன்புடன்,
ஜேகே

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக