Skip to main content

படிச்சதென்ன பிடிச்சதென்ன? : புத்தனின் ஊரில் புத்தர்கள்!


இன்று காலை ஏதன்ஸ் நகரத்து வாலிபனின் வீட்டுக்கு போனேன். “புத்தனின் ஊரில் புத்தர்கள்” என்று ஒரு கதை. சிறுகதை. சார் கவிஞர் என்பதால் கதை எழுதினாலும் கவிதை போல இருக்கிறது. நான் எழுதும் கவிதை கதை போல இருப்பது போல! கதையை அங்கே போய் வாசியுங்கள். கதைக்கு நான் போட்ட கமெண்டும் அவன் பதிலும் பதவில் ஏற்றப்படவேண்டியது போல தோன்றியதால் காப்பி பேஸ்ட் டீ!


ஜேகே சொன்னது…
//ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது. அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? //

சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது!
உங்கள் அளவுக்கு தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை.
ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! கவிதையாக்கினால், ஜேகே போன்ற சாதாரண வாசகர்களுக்கு புரியாது. ஆக இரண்டும் கெட்டானான இந்த பாணிக்கு தாவிவிட்டீர்களா?


ஏ.எ.வாலிபன் சொன்னது…
//உங்கள் அளவுக்கும் தமிழறிவு இல்லை. //
ஜே.கே இந்த சம்பிரதாயங்களை இனி விட்டு விடுவோம். இது கவிதை மாதிரி உங்களுக்கு தோன்றியது எனக்கு கொஞ்சம் வியப்பே, சிறுகதை வடிவம் தான் ஒருத்தனின் சிந்தனை ஓட்டத்தை செரியா தீட்ட உதவும். கவிதையில் சந்தங்களுக்காக நான் சமரசம் செய்ய வேண்டி இருந்திருக்கும்.... என் மொழி அறிவு இதை இதே தாக்கத்தில் கவிதையாய் தர காணாது. இது எழுதி சுமார் 5-6 வருடமிருக்கும். அண்மைக்காலமாக வலைத்தலங்களுக்குள் என் வாசிப்பை சுருக்கியதால் வீரியம் இழந்தவனாக உணருகிறேன். இந்தக் கதையே விளங்குமா எனும் சந்தேகத்தில் - பழைய பாடம் - படம் பார் பாடம் படி என்று ஆக்கியிருக்கிறேன். மற்றபடி உங்கள் வாசிப்பு ரசனை blog-அறிந்த உண்மை, நான் சாட்சிக்கு வரத் தேவையில்லை.
அந்த உதாரணம் " காற்றின் தீராத பக்கங்களில் தான் கதை எழுதிய போது" மறு ஜென்மம் எடுத்தது. நான் சும்மா பிச்சையில் இருந்து சொச்சை போடுகிறேன்.
 

ஜேகே சொன்னது…
அங்கு தான் பிரச்சனை. சந்தம் கவிதையில் இருந்தால் அழகு. ஆனால் கவிதைக்கு சந்தம் தேவையில்லை என்பது என் கருத்து. கருத்து முகத்தில் அடிக்கும் போது அங்கே சந்தம் இருந்தாலும் தொலைந்து விடுகிறது!

இந்த வகை சிறுகதைகள் குறிப்பாக கணையாழியில் வாசித்து இருக்கிறேன். ஈழத்தில் 90களின் ஆரம்பத்தில், இந்தியாவில் 70களில் இந்த பாணி சிறுகதைகள் தான் இலக்கியப்பட்டியல் ஆகி இருக்கிறது. அண்மையில் "Australian Short Stories" என்ற 70களின் கதைத்தொகுப்பில், யாரென்று தெரியாத ஒரு கூலியின் சாவு வீட்டை மையமாக வைத்து ஒரு சிறுகதை. இதே உணர்வுகள் தான். ரசித்தேன்.
இப்படி எழுத முயலும் போதெல்லாம், சுஜாதா என்னை தடுத்துவிடுவார். இந்த வகை எழுத்தில் ஒரு சிக்கல், வாசகனுக்கு அந்த மனநிலையை நாங்கள் create பண்ண வேண்டும். அந்த context புரிய வேண்டும். பெரும்பாலான பதிவுலக வாசகர்கள் அந்த பக்கமே போவதில்லை. தனக்கு பிடித்ததை வாசிப்பான். வித்தியாசமான எழுத்தை தனக்கு பிடித்தமானதாக்க அழும்பு பண்ணுவான். நீங்கள் சொன்னது போல், வாசிப்பு என்பது web surfing என்ற கட்டுக்குள் அடங்கிவிட்டது. ஜெயமோகனால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதமுடியாது. இன்னொரு பொன்னியின்செல்வன் இந்த தலைமுறையில் சான்ஸ் இல்லை. வாசகர்கள் இல்லை. பொறுமை இல்லை. கொஞ்சப்பேர் மிச்சம் சொச்சம்! என் வீட்டு லைப்ரரி புத்தகத்தில் அம்மாவினதும் என்னுடையதும் கைரேகைகள் மட்டுமே!

எழுத்தாளர்களில் இரண்டு வகை.இசையை எடுத்துக்கொள்ளுங்கள். யாருமே இல்லாத அமேசன் காட்டுக்குள்ளும் ஏதோ ஒரு குயில் சங்கீதம் பாடிக்கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்களே இல்லாவிட்டால் இளையராஜா?

இங்கே இந்த பதிவுக்கு வராத கமெண்ட்கள் மீது கோபம் வருகிறது. உங்கள் facebook நண்பர்கள் share பண்ணும் links ஐ பார்க்கும் போது இன்னும். பக்கத்து இலையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்!
சிலவேளை காட்டுக்குள் இளையராஜா போல இருக்கிறோமோ என்று தோன்றுகிறது! எசப்பாட்டு கேக்குதா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…
//எசப்பாட்டு கேக்குதா?//
வசைப்பாட்டும் கேக்குது நண்பரே.... நான் என் அம்மாக்கு அடிக்கடி சொல்லும் பஞ்ச் இது "குயில்களின் கச்சேரியை மனிதர்கள் சில சமயம் கேட்பதுண்டு ஆனால் மனிதக் கச்சேரிகளை குயில்கள் கேட்பதில்லை". குயில் மனிதர்களுக்காகவன்றி தனக்காகப் பாடும் விட்டேத்தி தனம்தான் அதன் அழகு.
நிற்க, நானும் கொமேன்ட்களுக்கு ஆசைபடுகிறேன் தான், ஆனால் நிறைய கொமென்ட்களை விட இந்த மாதிரி ரசனையான ஒரு கொமென்ட் தருகிற திருப்தி தனி. என்னுடைய கோபம் நான் ரசிக்கப் படாமல் போவதிலும் ஒரு நல்ல தொழில்முறை எழுத்தாளன் ரசிக்கப்படாமல் போயிடுவானோ என்பதுதான்.
பட்டிமன்றங்களுக்கும் கலக்கப்போவது யாருக்கும் வேறுபாடற்றுப் போனது போல, எல்லாம் மாறும், மாறியே வந்துள்ளது. வேறு வழியில்லை.



Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக