Skip to main content

Disgrace


அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன்.
246645-booksவெண்மேக கூட்டம்!
சூரியன் மெதுவாய் நோட்டம்!
வெள்ளைக்காரி வெட்கம்!
கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five?
நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends என்று இப்போது தெரியும். சாப்பிட்டு முடிய நான் ஓடும இடமும் தெரியும்! அன்றைக்கும் அப்படித்தான். நடாலியாவை தேடி ஓடினேன்! அவள் அன்றும் இல்லை, but as usual a book did chose me again! This time அந்த புத்தகத்தின் பெயர் Disgrace!
DSC_3075
1999 ம் ஆண்டு புக்கர் பரிசு கிடைத்த நாவல்.  J.M.Coetzee என்ற எழுத்தாளர். அவருக்கு சிலவருடங்களுக்கு பின்னர் நோபல் பரிசும் கிடைத்தது. என்னடா இது நோபல் பரிசு நாவல் எல்லாம் அஞ்சு டாலரா. மச்சம்டா உனக்கு என்று வாங்கிவிட்டேன்! ஒரு வாரம் பத்து நாள், ட்ரெயினில், எவள் எந்த காட்டு காட்டினாலும் கவனிக்காமல் புத்தகத்தை மட்டுமே கவனித்து வாசித்து முடித்தும் விட்டேன்!
கதையை சொல்லமுதல் களத்தை சொல்லவேண்டும்! தென் ஆபிரிக்காவின் Apartheid க்கு பின்னைய காலம். Apartheid என்பது தென் ஆப்ரிக்காவின் வெள்ளையினவாத அரசு முறையை குறிக்கும். இந்த சிஸ்டம் 1993ம் ஆண்டுக்கு பின்பு தலைகீழாக மாறியது தெரிந்ததே. எங்கள் அனைவருக்கும் கறுப்பினத்தவர் சந்தித்த அடக்கு முறைகள் அநியாயங்கள் தெரியும். நெல்சன் மண்டேலா தெரியும்.  ஆனால் எங்களில் யாராவது கறுப்பின விடுதலையின் பின்னரான அந்த நாட்டு நிலைமையை சிந்தித்து பார்த்திருக்கிறோமா? அங்கே என்ன தான் நடக்கிறது என்று அறிய முற்பட்டு இருக்கிறோமா?
அதிகார மாற்றத்தின் பின்னரான தென் ஆபிரிக்க தேசத்தின் இனங்களின் நிலைகளை சொல்லும் நாவல் தான் இந்த Disgrace. அதிலும் வெள்ளையின மக்களின் உளவியல், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இதில் அதிகம். 
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். பிரிட்டிஷ் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை, கல்வித்தரம், ஆங்கில அறிவு எல்லாமே அவர்களுக்கு பெரும் பதவிகளை தேடித்தந்தது. இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இந்த சமநிலை மாறியது. சிங்களவர்களின் பொறாமை, மேலாதிக்கம், சிங்களம் மட்டும் சட்டம், நாட்டை எங்கே கொண்டு போய் விட்டது என்பதை சொல்ல தேவையில்லை. இந்த context ஓடு இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வாருங்கள்!
250px-Frederik_de_Klerk_with_Nelson_Mandela_-_World_Economic_Forum_Annual_Meeting_Davos_19921993 ம் ஆண்டு கிளார்க்கும் மண்டேலாவும் ஒப்பந்தம் செய்து கொள்ளுகிறார்கள். நாட்டின் அதிகாரம் வெள்ளையர்களிடம் இருந்து கறுப்பர்களுக்கு மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பர் ஆதிக்கம் பரவுகிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகம். திடீரென்று கிடைத்த அதிகாரம், வெள்ளையர் மீதிருந்த ஆவேசம், அங்கே இருக்கும் முதிய வெள்ளை தலைமுறை, இவர்களுக்குள் நடக்கும் ஒருவித சிக்கலான மன உணர்வுகள், கிலேசங்கள், கலாச்சார அதிர்வுகள், போராட்டங்கள் தான் இந்த கதை. அடடே இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கும் கதை.
கதை என்ன?
டேவிட் ஒரு வெள்ளை இன இலக்கிய பேராசிரியர். பெண் பித்தர். பெண்களை கொண்டாடுபவர். இரு முறை திருமணமாகி, விவாரத்தாகி, தொடர்ந்து ஒரே விலை மாதிடம் சென்று கொண்டிருப்பவர். அவளை கொஞ்சமாய் காதலிக்கவும் தொடங்கிய நேரம், அவளுக்கும் இன்னொரு குடும்பம் இருப்பது தெரியவர, அவர்கள் பிரிய நேரிடுகிறது. அப்போது தான் கல்லூரியில் தன் வகுப்பில் படிக்கும் மாணவி மீதே இச்சை கொண்டு அவளை தன் வயப்படுத்துகிறார். அவளுக்காக பாடத்தில் கூட தில்லு முல்லு செய்கிறார். பைரன் கவிதைகளை எக்ஸ்க்ளூஸிவ்வாக சொல்லிக்கொடுக்கிறார். இந்த விஷயம் பெரிதாக, விசாரணை கமிஷன் வரை போகிறது, இவர் மன்னிப்பு கேட்க மறுக்க வேலை போகிறது. எங்கேயோ தூரத்தில் கிராமத்தில் இருக்கும் தன் மகள் லூசியிடம் போக முடிவெடுக்கிறார்.
disgrace_stillஒரு கிராமம். லூசி ஒரு பூந்தோட்ட பண்ணை நடத்தி வருகிறாள். நண்பியோடு வாழ்ந்து வந்தவள், இப்போது நண்பி அங்கு இல்லை. அவள் ஒரு லெஸ்பியனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பண்ணையில் பணி புரியும் பெற்ராஸ், கறுப்பினத்தவன். அவன் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் பண்ணையை அபகரிக்க திட்டமிடுகிறான். ஒரு நாள் மூன்று கறுப்பர்கள் லூசியை பாலியல் வல்லுறவு செய்ய, லூசி கர்ப்பமாகிறாள். சிக்கல் வலுக்கிறது. அந்த கறுப்பர்கள் பெற்ராஸின் உறவுக்காரர்கள். ஒன்றுமே செய்ய முடியாது. பொலிஸ் கை விரித்துவிட்டது. லூசி இப்போது அந்த ஊரில் தனியாள். பெற்ராஸ் தன்னை லூசி திருமணம் செய்தால் தானே குழந்தைக்கு தந்தையாக இருக்க ஒப்புக்கொள்கிறான். ஆச்சரியம், லூசியும் ஆமாம் என்கிறாள். டேவிட்டுக்கு வெறுத்துப்போய் அந்த இடத்தை விட்டே போகிறார். மீண்டும் நகரத்துக்கு வர, அங்கே அவர் வீடு சூறையாடப்ப்ட்டு கிடக்கிறது.
disgraceகதை இப்படி போகிறது என்று வையுங்களேன். முழுக்க சொன்னால் ரங்கனுக்கு பிடிக்காது! மிக சிக்கலான நாவல் இது. தென் ஆபிரிக்க வெள்ளை கறுப்பினங்களுக்கிடையேயான எண்ணம் சிந்தனைகளில் உள்ள அடிப்படை வேறுபாடு ஒரு புறம். ஒரு குழப்பமான,  தார்மீக உணர்வுகள் இல்லாத, அதை கேள்வி கேட்க பிரியப்படாத டேவிட்டின் வாழ்க்கை. உன்னை போல பலர் செய்த கொடுமைகளுக்கு நாங்கள் பரிகாரம் சுமக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லும் லூசியின் வாழ்க்கை, எனக்கு விமர்சனம் எழுத தெரியவில்லை!
வாசிக்கும் போது ஒரே போக்கில் கதை போகாது. இது தான் சரி இது தான் பிழை என்ற ரமணிச்சந்திரன் கிடையாது. டேவிட் பீத்தோவன் பற்றி ஆராய்ச்சி செய்வார். மகளுக்கு நடந்த கொடுமைக்கு துடிப்பார். மகளின் திருமணமான நண்பி ஒருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். பைரன் கவிதைகளை காட்டி மாணவியை மயக்குவார். தான் செய்வது பிழை என்று தெரிந்தும், திருந்தும் வயதை தாண்டிவிட்டேன் என்கிறார். தப்பு செய்யும்போது அதற்கு சால்ஜாப்பு வைத்திருக்கிறார்.
நோபல் பரிசு நாவல். வதை தான் கதை. வதையின் பரிணாமங்கள் எங்குமே இறைந்து கிடக்கும் ஒரு black நாவல் என்று சொல்லலாம். ஆனால் ugly இல்லை. வாசிக்க சுவாரசியமான ரம்மியமான கதை ஓட்டம். கதையை ஒரு இழையில் சொல்லுவது எப்படி. ட்ரை பண்ணுகிறேன்!
டேவிட வெள்ளை இனத்தவர். பேராசிரியர்.
  1. விலை மாதுவிடம் செல்கிறார். அவள் பிரிகிறாள்
  2. மாணவியை மயக்குகிறார். படுக்கிறார். பிடி படுகிறார்.
  3. தென் ஆபிரிக்காவில், வெள்ளையின பேராசிரியர் செய்யும் தவறுக்காக வேலை போகிறது. நீக்குபவர்கள் பல்கலைக்கழகத்தினர். வெள்ளையினத்தவர். (அவர்களில் சிலரோடு கூட முன்னர் உறவு!)
  4. லூசி, அவர் மகள், கறுப்பர்கள் பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். கர்ப்பமாகிறாள்.
  5. போலீஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை. யார் இதை செய்தார்கள் என்றும் தெரிந்தும்!
  6. பெட்ராஸ் ஒரு கறுப்பன், லூசியின் பண்ணைக்காக குழந்தைக்கு தந்தையாகவும் தயார் என்கிறான். திருமணம் முடிப்பதாக சொல்கிறான்.
  7. லூசி சம்மதிக்கிறாள்.
  8. இறுதியாக டேவிட் தனியனாகிறார். No country for this old man!
பெட்ராஸ், கறுப்பு இனத்தவன், பண்ணை தொழிலாளி!
disgrace--john-malkovich-12020645
கொஞ்சம் யோசித்தால், ஆரம்பத்தில் வெள்ளையர்களிடம் இருந்த ஆதிக்கம் கறுப்பர்களிடம் இடம் மாறுகிறது இல்லையா? ஆனால் யாருமே இங்கே உத்தமர் இல்லை. எதுவுமே மாறப்போவதில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடம்பெயருகிறது என்பது தான் அந்த நூல்!
இது படமாக கூட வந்திருக்கிறதாம். நொட்டை அண்ணேயிடம் கேட்டு இருக்கிறேன். எப்படியும் எடுத்து தந்திடுவார்! பார்க்கவேண்டும்.

நண்பி அமுதா மீண்டும் மீண்டும் எனக்கு சொல்வது.
The world’s never been fair!

Comments

  1. Oh super keep it up well done , book vaasikkave trainila workkukku pokalam pola

    ReplyDelete
  2. நன்றி கவி அழகன் ... ட்ரெயினில் போகும்போது புத்தகம் வாசிப்பது தனி சுகம்! நான் காரை ஸ்டேஷனில் பார்க் பண்ணீட்டு வேலைக்கு போவதே அதுக்கு தான் தல...!

    ReplyDelete
  3. மிக அழகான எழுத்து நடையில் அழகான நாவலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  4. // சாப்பிட்டு முடிய நான் ஓடும இடமும் தெரியும்! //

    சாப்பிட்டதும் ஓட வேண்டியது அங்க இல்லையே...

    ReplyDelete
  5. >ரு வாரம் பத்து நாள், ட்ரெயினில், எவள் எந்த காட்டு காட்டினாலும் கவனிக்காமல் புத்தகத்தை மட்டுமே கவனித்து வாசித்து முடித்தும் விட்டேன்!

    Time sharing/Multi-tasking எதுவும் சரிவரவில்லையா?

    வேடிக்கையாகச் சொன்னேன். புத்தகம் எனக்கும் 5 $ இற்குக் கிடைக்கும் என்றில்லை :-(

    ReplyDelete
  6. வாசகர் கருத்துக்கு மதிப்பளிக்கிற எழுத்தாளர்.. Thanks.

    ReplyDelete
  7. நொட்டை2/21/2012 5:22 pm

    நீங்கள் குறிப்பிட எல்லா விடயங்களும் படத்தில் பதிவாகப்டுள்ளது.. ஆனால் எனக்கு படத்தை பார்க்கும் போது கதையின் கரு மிகவும் தெளிவாக விளங்கவில்லை... சிலவேளை டேவிட்டின் மன்மத லீலைகளில் என் கவனத்தை வைத்து விட்டேனோ என்னமோ ?

    ReplyDelete
  8. நன்றி முன்பனிக்காலம்! தொடர்ந்து வாங்க!

    ReplyDelete
  9. @பிரபா ... அது யாரு சாப்பாடு சமைச்சது எண்டதில இருக்கு!!

    ReplyDelete
  10. சக்திவேல் .. கவனிக்காமலா அவளுக்க காட்டுறாங்க எண்டு எழுத முடிஞ்சுது?

    ReplyDelete
  11. கிச்சா ... உள் குத்து பலமா இருக்குமாப்ல!

    ReplyDelete
  12. நொட்டை அண்ணே .. படத்த பார்த்திட்டு தர இல்ல பார்த்தீங்களா?

    ReplyDelete
  13. The world’s never been fair because humanbeings are like that both in their public and personal life. Prejudice, favourism, self-wishness etc. are the reasons. Thriuvaluvar talks about அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், Buddha says just அவா is the reason (I mean ஆசை, not அவாள்). In the history, variety of people in different ways tried to create peace and harmony even though that is not their main aim but those are the main by-products. For example, Yogis tried by teaching people to attain self-realization, some religious leaders and messiahs tried through moral values/God, and reformers (like Karl Marx, Periyar etc.) tried through social movements. As we all know, nothing worked so far, history always repeats itself. Did you get a chance to read either the book அனோனிமா or its preface posted here: http://aadhavanvisai.blogspot.com/2012/02/blog-post_13.html. I did not get a chance to read the book but the preface by தந்துகி is great.Recently, Marie Colvin's death is a shocking news despite it is expected due to the nature of her job.

    ReplyDelete
  14. //Buddha says just அவா is the reason (I mean ஆசை, not அவாள்).//
    சூப்பர் டைமிங்!

    //Yogis tried by teaching people to attain self-realization, some religious leaders and messiahs tried through moral values/God, and reformers (like Karl Marx, Periyar etc.)//

    As long as the instinct to survival last among the living beings, harmony and peace would only be a distant dream I guess..

    //Marie Colvin's death is a shocking news despite it is expected due to the nature of her job.//

    Its a horrendous shocking news, especially for eelam people, but then that's how it goes .. people now used to it to the extent that they don't even react to such deaths .. pathetic..

    ReplyDelete
  15. நல்லதொரு விமர்சனம் .வாசிக்க தூண்டுகிறது ;அந்த புத்தக்கத்தை வாங்க முடிவெடுத்து விட்டேன் .

    The world’s never been fair!
    இதுதான் உண்மை !!.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .