Skip to main content

Q & A

200px-Q_and_A_-_black_swan_edition

விகாஸ் சுவார்ப் எழுதிய இந்த நாவலை தான் சிலம்டோக் மில்லியனார் என்று குதறினார்கள். ராம் முஹமட் தோமஸ் என்ற தராவியில் வசிக்கும் இளைஞன் Who will win  a Billion? என்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சியில் பன்னிரண்டு கேள்விகளுக்கும் எப்படி சரியாக பதில்சொல்லி பில்லியன் ரூபாய்கள் வெல்கிறான்? என்கின்ற கதை. படத்தில் வந்த கதை தான். ஆனால் கேள்விகளும் அதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களும் வித்தியாசம்.

சம்பவங்கள் இந்தியா முழுதும் பயணிக்கும். ராம் எப்படி தோமஸ் ஆகி மொகமட் ஆகிறான் என்று விளக்கும். திமோதி என்கின்ற சேவை மனப்பாங்கு நிறைந்த பாதிரியார், அனாதை ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் போது,  ராம் தோமஸ் ஆகிறான். கிறிஸ்தவ நிறுவனத்துக்குள் வெள்ளைக்கார பாதிரியார்கள் சிலரில் வண்டவாளங்கள், அவர்கள் செக்ஸ் படம் பார்ப்பது எல்லாம் கதையில் வரும். பிரேம்குமார் என்கின்ற பாலிவுட் ஹீரோ எப்படி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கிறான் என்று இன்னொரு சம்பவம். அவுஸ்திரேலியாவை சேர்ந்த இராஜதந்திரியின் வீட்டில் இவன் வேலை செய்கிறான். அங்கே அவுஸ்திரேலிய உச்சரிப்புகளை பழகுகிறான் (No worries, Maite, fair enough). அந்த இராஜதந்திரி ஒரு உளவாளி என்று தெரியவருகிறது.  உளவாளியை போட்டுக்கொடுத்துவிட்டு தப்புவது. பின்னர் ஒரு நடிகையின் வீட்டில் வேலை செய்வது. தாஜ்மகாலில் டூரிஸ்ட் கைட் வேலை. அங்கே தான் நீதாவை சந்திக்கிறான். அவள் ஒரு விலை மாது. காதலிக்கிறான். கதை வெகு இயல்பாக நகரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த சம்பவம் சார்ந்த கேள்வியும் அதற்கு அவன் சரியாக பதிலளிப்பதாயும் இருக்கும்.

பதினொறாவது கேள்வி ஷேக்ஸ்பியரின் எந்த படைப்பில் கொஸ்டார்ட் என்ற பாத்திரம் வருகிறது? Ask the friend மூலம் தான் உதவிய டீச்சரை அழைத்து அவரிடம் சரியான பதிலை கேட்கிறான். கடைசிக்கேள்வி பீத்தோவன் சம்பந்தமானது. அந்த கேள்விக்கு இவனுக்கு சுத்தமாக பதில் தெரியாது. கையில் இருக்கும் நாணயத்தை சுண்டி, தலை விழுந்தால் ஒப்ஷன் A என்று தீர்மானிக்கிறான். தலை விழுகிறது. வெற்றி பெறுகிறான்.

படத்தில் நடந்தது போலவே அவனை போலீசில் மாட்டுகிறார்கள். அங்கே ஒரு பெண் வக்கீல் இவனுக்கு உதவுகிறாள். இறுதியில் இவன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட, வெற்றிப்பணம் கைக்கு வர, டிவி நிறுவனம் திவாலாகிறது. கதை முடிவில் அவனுடைய அதிர்ஷ்ட நாணயத்தை அந்த வக்கீல் வாங்கிப்பார்க்கிறாள். அந்த நாணயத்தின் இரண்டு பக்கமுமே தலை தான். “Its my lucky coin, but luck has nothing to do with it” என்று சொல்லி சிரிக்கிறான்!


திரைப்படத்தில் நிறைய விஷயங்களை வெட்டி, இந்தியாவை எவ்வளவுக்கு எவ்வளவு குப்பை நாடாக காட்டமுடியுமோ அப்படி காட்டியிருப்பார்கள். நாவல் அப்படி இல்லை. ஒரு சராசரி இந்தியாவை அதன் நல்லது கெட்டதுகளுடன் எழுதியிருப்பார் விகாஸ். நாவலில் நாடகத்தன்மையோ, நீதாவும் ஜமாலும் கிஸ் அடிப்பதோ எதுவுமே இல்லை. கக்கூஸ் குழிக்குள் விழுந்து எழுந்து ஓடிப்போய் அமிதாப்பிடம் ஓட்டோகிராப் வாங்கும் தராவி குழந்தையும் இல்லை. சொல்லப்போனால் அவன் இறுதியில் தான் தராவியில் வசிக்கிறான். ஆரம்பம் டெல்லியில் தான்.

இந்தப்புத்தகம், திரைப்படம் வெளியாகி தலைவர் இசை என்று தெரிந்தவுடம் ஓடிப்போய் வாங்கி வாசித்த புத்தகம். முடித்த சூட்டோடு படத்தையும் பார்த்து சூடுபட்டுக்கொண்டது தான் மிச்சம். Five Point Someone க்கும் இது தான் நிகழ்ந்தது. ஆனந்த தாண்டவம், கரையெல்லாம் செண்பகப்பூ எல்லாமே சேம் ப்ளட். இதிலே The Namesake ஓரளவுக்கு நாவலுக்கு நேர்மை சேர்த்த திரைப்படம்.

வாசிக்கும்போது நாமே டீஆர் போல கலை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் எல்லாம் சிருஷ்டித்து வாசிப்பதால், நாவல் தரும் அனுபவத்தை எந்த திரைப்படமும் நெருங்ககூட முடியாது என்பது மீண்டும் இதில் நிரூபணமானது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக