Skip to main content

Posts

Showing posts from May, 2014

கோச்சடையான் - வடை போச்சே!

  சுற்றிவர கோட்டை கொத்தளங்கள். பின்னணியில் அரச உடை அணிந்த மகளிரும், வீரரும் ஆட,   நடுவே தீபிகா படுகோன், செம கியூட்டாக “மெதுவாகத்தான்” என்று பாட காட்சி ஆரம்பிக்கிறது. இருபது செக்கன்கள் கழித்து தலைவர், படு ஸ்மார்ட்டாக நடந்துவருகிறார். “எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா” என்னும்போது தீபிகாவின் சேலை தலைப்பை ஸ்டைலாக தூக்கிப்போட, தீபிகா வெட்கப்பட்டு ஓடுகிறார்.  தலைவரின் அதகளம் ஆரம்பிக்கிறது. “அன்னம், மடவண்ணம்” என்னும்போது மிகவேகமான நடை. “கொடிவேண்டுமா, குடை வேண்டுமா“ என்ற ஒவ்வொரு தாள கட்டுகளிலும், இருவரும் சேர்ந்து தோன்றும் ஒவ்வொரு பிரீசிங் காட்சிகளிலும் ஒரு கட். ஒருமுறை கண் மேலே எகிறும். மற்றப்பக்கம் நாடி தாழ்ந்து காதலுடன் பார்க்கும்.  “படை வேண்டுமா, பகை வேண்டுமா, உனைப்போல வேறார் ஏது?” என்னும்போது எஸ்பிபி சிரிப்பும் சேர்ந்துகொள்ள, தலைவர் நளினமாக அதற்கு எக்ஸ்பிரஷன் கொடுக்க, அப்படியே பிரமாண்டமான பின்னணி நடனங்கள் சேர்ந்துகொள்ள…..

நரேந்திர மோடி, இந்தியாவின் ஜே ஆர் ஜெயவர்த்தனா.

    "மோடிக்கும் ஜே. ஆருக்கும் என்ன ஒற்றுமை?" என்று ஒரு சிங்கள நண்பன் முகநூலில் கேட்டிருந்தான். முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்விக்கான பதில் பல புதிர்களுக்கான முடிச்சுகளைப் போடக்கூடியது. தவிர்க்கமுடியாத ஒற்றுமைகளை இந்த இருவரும் கொண்டிருக்கிறார்கள். ஜே ஆரின் வாழ்க்கை ஒரு வரலாறு என்றால் அதிலிருந்து ஓரளவுக்கு மோடியின் அரசியலை எதிர்வு கொள்ளக்கூடிய அளவுக்கு இருவருக்கும் பல ஒற்றுமைகள். யார் இந்த ஜே ஆர்?