Skip to main content

கருத்துகள்


வணக்கம் Mr. JK,

உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது.

இரு நாட்களுக்கு முன், என் தோழியின் பரிந்துரையினால் உங்கள் *ஆட்டிறைச்சி* பதிவை தான் முதலில் படித்தேன். சாதாரண விஷயத்தை கூட மிக சுவாரசியமா சொல்லுவார்னு சொன்னா. ஆனா இவ்வளவு அருமையா , எனக்கு பிடிச்ச மிக அழகான இலங்கை தமிழ்ல இருக்கும்னு எதிர்பாக்கல. உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு.

சின்ன வயசுல இருந்து நிறைய படிக்கிறேன். ஒரு எழுத்தாளரோட எழுத்து நடை பிடிச்சா மட்டுமே, படித்ததையே திரும்ப திரும்பவும் கூட படிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. புது எழுத்தாளர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க ஆரம்பிக்கவே ரொம்ப யோசிப்பேன்.

உங்க பதிவுகளை இரு நாட்களாக விடாமல் தொடர்ந்து படிக்கிறேன். 2011 இல் இருந்து ஆரம்பித்து.

ஒரு சின்ன வேண்டுகோள்.

எனக்கு உங்கள் தமிழில் சில வார்த்தைகள் புரியல. சில இடங்கள்ள, உங்கள் பேச்சு வழக்கப்படி எழுதியிருக்கீங்களா, இல்ல ஆங்கில வார்த்தையை தமிழ்ல எழுதியிருக்கீங்களானு குழப்பம் வருது. பதிவின் சுவராசியத்தில , வேகத்தில் அதை விட்டுட்டா கூட, பிறகு அது என்னவா இருக்கும்னு யோசிக்க வைக்குது.

உங்கள் பேச்சு வழக்கில் இருக்குற , எங்களுக்கு புரியாத வார்த்தைகளை எல்லாம் சேர்த்து ஒரு இடத்துல அர்த்தம் போட்டீங்கனா, படிக்க இன்னும் நல்லாருக்கும்.

I am not sure whether you have done it already , as I haven't seen your website fully yet. If it's there pls let me know.

உங்கள் எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

Regards,
Valentine.

000

ஜேகேயின் இந்த புத்தகம் Science fiction வரிசையில் வந்தாலும்,கதை தொடங்கியது முதல் முடிவு வரை வாசகரை குபீரென சிரிக்க வைக்கும் எழுத்து நடையோடு ஆர்ப்பரிக்கின்றது. கல்கி,கி.ரா,சுஜாதாவின் கதைகள் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தன் எழுதிய 'சினிமாவுக்கு போகலாம் வாங்க'க்கு பின்னர் பல இடங்களில் சத்தமாக சிரித்தது இப்புத்தகத்திற்குத்தான்.

இலங்கையில், கந்தசாமியின் நிகழ்கால வாழ்க்கையில் தொடங்கும் இந்தக்கதை பல விடயங்களை நகைச்சுவையோட சிந்திக்கவும் வைக்கின்றது.ஆன்மிகம்,அரசியல்,பண்பலை,தொலைக்காட்சி என போகிற போக்கில் அடித்து விளையாடுகிறார் ஜேகே.விண்ணுலகம்,பால்வெளி,கருப்பொருள் என பலவற்றிற்கும் தரும் விளக்கங்கள் மிகவும் உபயோகமானது.

நண்பர் மயிலன் இப்புத்தகத்தை பத்தி பதிவிடவில்லையென்றால் கண்டிப்பாக இதை வாசிக்க தவறி இருப்பேன்.அடுத்த பதிப்பில் இலங்கையில் இல்லாதவர்களுக்கு தெரியும் பொருட்டு சில வார்த்தைகளுக்கு விளக்கங்களும்,அந்நாட்டு அரசியல் பற்றி சிறு விளக்கமும் இடம் பெறுமாயின் வாசகருக்கு மிகவும் உதவும்.இறுதி பாகத்தைப் பற்றி ஜேகேவிடம் விளக்கம் கேட்டப்பின் தான் அந்நாட்டின் வரலாறு பற்றி சில தகவல்கள் தெரிந்தது.

புத்தகம் மூலம் மனது விட்டு சிரிக்க வைக்க சிலரால் தான் முடியும்,அது உமக்கு கிடைத்த வரம் ஜேகே. தொடரட்டும் உமது இலக்கியப்பணி.

—முரளி இராமகிருஷ்ணன் கணபதி


வலண்டைனுக்கும் முரளிக்கும் என் அன்பும் நன்றிகளும்.

ஈழத்து வழக்குச்சொற்களை விளக்கத்தோடு பதிவிடலாம் என்றே எனக்கும் தோன்றுகிறது. அகராதிபோல அலுப்படிக்காமல் சிறு கதைகளோடு அல்லது உரைகளோடு அதனைச் செய்யலாம். விரைவில் தொடராகவே ஆரம்பிக்கிறேன்.

அன்புடன்,
ஜேகே

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.