Skip to main content

ஏர் எழுபது


ஒரு சின்ன தேடலின்போது ‘ஏர் எழுபது’ எனும் வேளாண் நூலைப்பற்றி அறிய முடிந்தது. வாழ்த்துப்பாடலோடு ஆரம்பித்து பின்னர் கமத்தொழிலின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றி இந்த நூல் பேசுகிறது. சிறப்புகள் என்றால் வெறும் புகழுரைகள் என்றில்லாமல் மிக நுணுக்கமான விடயங்களைப்பற்றியெல்லாம் இந்நூல் குறிப்பிடுகிறது. உழுகின்ற எருதின் பூட்டுக்கயிறு, கழுத்துக்கறை முதற்கொண்டு எவ்வாறு நாற்று நடுவது, போர் அடிப்பது, நெற்கூடை என அத்தனை விசயங்களையும் பாயிரங்களாக எழுதிவைத்திருக்கிறது இந்நூல்.

உதாரணத்துக்கு.
"பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே"
பொருள்:
பழமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட
உழும் கலப்பை உயர்வானது.
உழவர் பெருஞ்சிறப்புக்கு உரியவர்.
இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில்
உலகம் செல்லும்.
படைச்சாலில் விதை இடுவர்
அது விளையும்
விளைவைப் பெற வழிச் செல்வர்.
"காற்றுமேல் வருகின்ற கார்விடினும், கடல்சுவறி,
யாற்றுநீர் அறவெள்ளி அரசனும்தெற் காயிடினும்,
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. "
பொருள்: காற்று வந்து கார்மேகம் பெய்யாமல் போனாலும்
ஆற்றுநீர் வறண்டு போனாலும்
ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் காராளர் கடமை
"கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே! "
பொருள்: சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர்.
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது
மாட்டின் கழுத்தில்
ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை.
"ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. "
பொருள்: அன்னம் நீங்காக் கழனி
கழனி உழவர்
உழவர் களத்தில் ஏற்போர் கூடை
கூடை கொண்டு களத்தில் புகுந்து உலகோர் நெல்லைப் பெற்றுக்கொள்வதால்
அரசன் ஆடை அணி பொலிய முடி சூடிக்கொள்வான்
அவன் யானைக்கு ஓடை பொலியும்
இந்த “ஏர் எழுபது” நூலை எழுதியது கம்பர் என்கிறார்கள். இராமாயணம் எழுதிய கம்பர்தான் இவர் என்று சொல்பவர்களும் உண்டு. இல்லை, ஔவைமாதிரி கம்பரும் ஒரு பொதுப்பெயர். அவர் வேறு இவர் வேறு என்றும் சொல்கிறார்கள். ஆனால் இது 12ம் 13ம் நூற்றாண்டு சோழர்காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்தமுடிகிறது.
தமிழிலக்கியம் ஒரு ஜீவ நதி.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.