Skip to main content

Posts

மருதூர்க்கொத்தன் கதைகள்

“மரையாம் மொக்கு”. ஒரு கடலோரக் கிராமத்தில் வாழும் வறுமை மீனவரான காத்தமுத்துவின் கதை.  “முன்னங்கை பருமனனான நேரான வரசங்குத்திய சாணளவு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒரு பாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில விட்டு இறுக்கி அடிச்சி இணைக்கிறதுதாண்டா மரையாம் மொக்கு”  என்று கிழவர் ஆதம்பாவா “மரையாம் மொக்கு”வுக்கு விளக்கம் கொடுப்பார். மரையாம் மொக்கு என்பது வாவியில் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணம். சில்லி வலையை நீர்ப்பரப்பினுள் வளைத்துக்கட்டி நீரடியில் ஒளிந்துகிடக்கும் மீன்களை வெருட்டி வெளிக்கொணர்வதற்காக, நீரைத் தாம்தூம் என்று அடித்துக் கலக்குவதற்கு மரையாம் மொக்கு பயன்படும்.  காதர் பக்கென்று கேட்பான். “மரையாம் மொக்கைத் தூக்கிப்பிடித்தா தூரத்திலிருந்து பார்ப்பவனுக்கு ரொக்கட் லோஞ்சர் மாதிரிதானே தெரியும்?”

பொண்டிங்

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை. மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி

ஒரு கணித-கணினி மூளையின் தமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன… உங்கள் பாஷையில் சொல்வதானால்… Virtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும் அசையும் கரும்பொருட்கள் எல்லாம் அகக் கண்ணில் தெரிகிறது… ஓடும் எலிகள் எல்லாம் விஞ்ஞானிகளாய் மிரட்டுகிறது… ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்.. புரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது… நகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து வைத்திருக்கும் உள்ளுணர்வுகளுடன் கூட.. இது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்… எங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள் ஒளிந்திருக்கும் நப்பாசையை முடிவாக்கி உங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது… ‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.. சின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்.. பட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின் சரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய் பேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்.. உங்கள் எழுத்துக்களின் பல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி – காயத்திரி

எழுத்தாளருடன் முரண்படுதல்

“நான் என்பது எனக்கு வெளியே இருப்பது” என்றார் ழாக் லக்கான். சிறு வயதில் எனக்கென்றிருந்த அறம் இப்போது என்னிடமில்லை. சிறுவயது நானுக்கும் இப்போதைய நானுக்குமே மிகப்பெரிய வித்தியாசத்தை "நான்" காண்கிறேன். சமயத்தில் அதனை வியப்போடு பார்த்துமிருக்கிறேன். நாளை இதுவும் மாறுமென்றே தோன்றுகிறது. இதில் எனக்கு கெட்டியான இரும்புப்பிடி கிடையாது.

கந்தசாமியும் கலக்சியும்

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா  இலங்கை, இந்தியா இலங்கையில் கொழும்பு,  நல்லூரடி பூபாலசிங்கம் புத்தகசாலைக் கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். ஏனைய வழிகளில் பெற்றுக்கொள்ள jkpadalai@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். முகப்பு

கந்தசாமியும் கலக்சியும்

நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வ

ஏகன் அநேகன்

  விடியக்காலமை மூன்று மணி. அது ஒரு தனி உலகம். படிப்பதற்கு என்று எலார்ம் வைத்து எழுந்து, தூங்கித் தூங்கிக் கொல்லைக்குப் போய், தூங்கித் தூங்கி முகம் கழுவி, அம்மா தரும் தேத்தண்ணிக்கு வெயிட் பண்ணி, புத்தகம் கொப்பி திறக்கவே நான்கு மணியாகிவிடும். அந்த அதிகாலை அமைதியில் ஒரு மலர்ச்சி கிடைக்கும். நடுங்கும் குளிர். வீட்டு செல்லநாய் கூட குரண்டிக்கொண்டு சாக்குத் துணிக்குள் அயர்ந்து தூங்கும் நேரம். மொத்த ஊருமே தூங்கும்போது நாம் மட்டும் விழித்திருக்கிறோம் என்ற எண்ணமே அலாதியானது. வெளியே மழை சொட்டினால் அனுபவம் மேலும் இரட்டிப்பாகும். விழித்திருப்பவனின் இரவு அது.

ராசாளி

நான் ஒரு பாட்டு வெறியன் என்று சொல்லுவதே under statement. ஒரு பாட்டின் இஞ்சி இடுக்கு, சின்னச்சின்னச் சங்கதிகள், இசைக்கோர்வைகள் என்று வரிசையாக, ஒரு பாடலைக் கேட்காமல் வெறுமனே நினைத்துக்கொண்டே ரசிக்கக்கூடியவன். "பொத்திவச்ச மல்லிகை மொட்டு" என்று யோசித்தாலே போதும். ஆரம்ப வயலின்களிலிருந்து கீபோர்ட், புல்லாங்குழல், தபேலா, நாதஸ்வரம், தவில், எஸ்பிபி, ஜானகி, முன்னே நோட்டுகளுடன் இளையராஜா என்று மூளைக்குள்ளேயே கச்சேரி நிகழ்ந்து முடியும். ஒன்பது மணிநேர வேலையில் குறைந்தது அறுபது எழுபது பாடல்களேனும் தினம் கேட்பேன். இசை கேட்டுக்கொண்டிருந்தால் புரோகிராமிங் தானாக இயங்கும். இது எனக்குக்கிடைத்த வரம்.

தமிழ் ஆங்கிலேயர்கள்

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது.  ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.

நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்

செங்கை ஆழியான், புன்னியாமீன், கே. விஜயன் ஆகியோரின் நினைவரங்கும் இலக்கிய சந்திப்பும் நாளை இடம்பெறவுள்ளது. கந்தராஜாவின் தலைமையிலான இந்நிகழ்வில் ஈழத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஞானசேகரன், சந்திரசேகரன், பாலஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.  செங்கையாழியான் நினைவுரையைச் செய்கின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. செங்கை ஆழியான் உயிரோடு இருக்கும்போதே நானும் ஜூட் அண்ணாவும் அவருடைய புத்தக அறிமுக அரங்கைச் செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். கைகூடிவரவில்லை. இன்னொரு இருபது வருடங்களுக்குப்பிறகு செங்கையாழியான் எப்படி, எதற்காக வாசிக்கப்படலாம் என்பதை விரிவாக எடுத்துப்பேசலாம் என்று நினைக்கிறேன். வந்தால் கலந்துரையாடலாம். நிற்க. இலக்கியச்சந்திப்புகள், இயல் அரங்கங்கள் மீதான ஆர்வம் இப்போதெல்லாம் வடிந்துபோய்விட்டது. மேடைப்பேச்சுகளின் பயன் பற்றிய குழப்பங்களும் கூடவே எழுகின்றன. இதெல்லாம் எதற்காக?புத்தகங்களினூடு நாங்கள் எப்போதுமே பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்? எல்லாவற்றையும் தூக்கிக்குப்பையில் போட்டுவிட்டு ஒரு முடிவுறாத ரயில் பயணத்தில் யன்னல்கரையோரம் உட்கார்ந்துகொண்டு கூதல்காற்றில்