Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி டிலக்சனா


இது கொல்லைப்புறத்துக் காதலிகள் வாசித்தபிறகு சிலநாட்கள்/கிழமை சென்றபின் என் மனதிலே உள்ள பதிவுகளை உங்களுக்கு கூறுவதற்காக எழுதுகிறேன். தமிழில் டைப் பண்ணே நீண்ட நேரம் எடுக்கும் என்பதற்காக என் கைப்பட எழுதுறன்! 
- நிறைய நினைவுகளையும் கடந்த கால இரை  மீட்டல்களையும் உங்கட கதைகளை வாசிக்கும்போது உண்டரக்கூடியதாக இருந்தது! நன்றி. “இலங்கைத் தமிழில்” ஒரு நல்ல எழுத்தாளனை அவரது படைப்புகளை வாசிக்க எதேச்சையாக கிடைத்த சந்தர்ப்பம். யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்டவள்! வவுனியா மக்களின் தமிழும் தனித்துவமானதுதான்.  தமிழ் என்றால் யாழ் மட்டுமே என்று குறுக்குவதில் விருப்பமில்லை.
- எக்ஸாமுக்கு போறதுக்கு முதல் சாமி கும்பிடுறது. எல்லா சாமியையும் ஒரேயளவு கும்பிடுறது. இதே பழக்கம் எனக்கும் இருக்கு! வாசிக்கேக்க பஸ் முழுவதும் சிரிச்சுக்கொண்டே வந்தன். 
- குட்டியன் கதை செம. “Touching”. என்ன எண்டு சொல்லத் தெரியேல்ல.
- எல்லோரும் கூடுதலாக உங்கட எழுத்துக்களை பாராட்டியிருப்பார்கள். So மேலும் பாராட்டுவதைவிட இன்னும் நீங்கள் சில Topics பற்றி எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
1) நீங்கள் சிங்கப்பூரில் இருந்ததெண்டபடியால், இங்குள்ள மக்கள், அவர்களின் நினைவுகள் (This is just to see how you captured the moments and your opinion compared to mine, ha ha)
2) வன்னி வவுனியா மக்களைப்பற்றியும் எழுதவேண்டும். பரந்துபட்டு எழுதவேண்டும். உங்களுக்கு அனுபவம் இருக்கலாம். நீங்கள் ஆராய்ந்து எழுதுபவர் என்றும் தெரியும்.
3) உங்கள் எல்லா male, female characters உம் “குமரன்”, “ஆங்கில இலக்கியம்” படித்தவனாக இருக்கவேண்டும் என “fix” பண்ணாமல் எல்லாவிதமான மனிதர்களையும் சூழலையும் பற்றி எழுதுங்கள்.
எதுவும் தவறெனின் மன்னிக்கவும். இப்பத்தான் உங்கட blog வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
--- டிலக்சனா.

12

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக