Skip to main content

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்


வரவேற்புரையும் கவிதை வாசிப்பும்

"சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்"




சேரன் உருத்திரமூர்த்தி உரை

"மஹாகவியைத் தீவிரமாக, கிளர்ச்சியுடன் ஆழமாக அணுக வேண்டுமானால் அவருடைய பரவலாக ஜனவசியமாக அறியப்பட்ட கவிதைகளைத் தாண்டி “சாதாரண மனிதனின் சரித்திரம்” போன்ற காவியங்களின் உள்ளே போய்த் தேடவேண்டும்.”


கலாதேவி பாலசண்முகன் உரை

“மஹாகவிகள் காலத்திரையின் துளையூடாக முன்னும் பின்னும் பார்க்க வல்லவர்கள்”


கேதா உரை

"உயர்வானவர்கள் என்று கருதப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்துகொண்டு வாழலாம் என்று புதிய இளைஞர்கள் நினைக்கின்றபோது ஏற்கனவே உயர்மட்டத்தில் அமர்ந்துகொண்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் குறுக்கே வந்து எப்போதும் அதைத் தடுக்கிறார்கள் என்கிறது கண்மணியாள் காதை "


அ. முத்துக்கிருஷ்ணன் உரை

"பெருத்த முன்னெடுப்புடன் இடம்பெற்றுவரும் உலகலாவிய திணை அழிப்புகளை, அதற்குப்பின்னரான அதிகாரக் கட்டமைப்புகளை இலக்கியங்கள் வெளிப்படுத்தவேண்டும். தமிழகத்தின் நெய்தல்திணை என்பது பெரும் கம்பனிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. நம் கண்முன்னே இடம்பெறும் விடயங்களை உள்ளது உள்ளதுபோலப் பேசுவதற்குத் தயங்குகிறோம். பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் பேசாமல் கடந்துவிடுகிறோம்."



நன்றி


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக