பொப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஆங்கில இசை உலகில் “பாடல் எழுதுவது (song writing)” என்பதன் அர்த்தம் அதன் வரிகளை எழுதி, இசையமைத்து பாடுவது வரை நீளும். இவற்றை வேறுவேறு நபர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்குச் செய்தால் எல்லோரையும் பாடலாசிரியர்கள்(Song writers) என்று அழைப்பார்கள். அநேகமான சமயங்களில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதுமுண்டு. மைக்கல் ஜாக்சன் கூடுதலாக நடன அமைப்பையும் தானே பார்த்துக்கொள்வார். பொப் டிலானும் தானே பாடலை எழுதி இசையமைத்து பாடவும் செய்பவர். பொப் பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இங்கே அவை தேவையற்றவை. பொப் டிலான், மைக்கல் ஜாக்சன் போன்றோ, போல் மக்கார்டினி போன்றோ ஒரு தனித்துவ அற்புதக்குரலுக்கு சொந்தக்காரர் என்று சொல்லமுடியாது. ஆனால் அவருடைய பலம் அவர் எழுதும் பாடல் வரிகள். அந்த வரிகளைக் கடத்துவதற்குத் தேவையான இசையை மாத்திரம் பெரும்பாலும் கிட்டாரின் உதவிகொண்டு அவர் நிகழ்த்திவிடுவார். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இன்னமும் அது நிலைத்து நிற்பதற்கு அவருடைய இந்த எளிமையான minimalist பாணியே காரணம் என்பார்கள். “Music &