Skip to main content

Yarl Geek Challenge!

 

426861_10150565099076415_852787673_n

தொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம்? அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம்? மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்?

The Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில் எப்படி போட்டியாளர்கள் பிரகாசிக்கிறார்கள் என்பதை வைத்து அணிகளை உருவாக்கி, ஆட்களை நீக்கி, வாரா வாரம் சுவாரசியங்கள் எகிறி எகிறி, முடியும் தருவாயில் நாங்களும் அந்த மாதிரி நிறுவனங்களுக்கு போய் இப்படி செய்தால் என்ன? இந்த டிசிஷன் ஏன் பிழை? இவனை ஏன் ப்ரோஜக்ட் மானேஜராய் போட்டார்கள்? என்றெல்லாம் பார்க்கும் டிவிக்கு முன்னால் இருந்து கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுவோம். தொழிற்புரட்சி மேம்பட்ட இடங்களில் காணப்படும் பொதுவான ஒரு அம்சம் இது. சிறுவர்களை ஆரம்பத்தில் Monopoly விளையாட வைத்து, அவர்கள் இளைஞர்கள் ஆகும்போது இவ்வாறான நிகழ்ச்சிகளை பார்க்கவைத்து, அப்படிப்பட்ட சிந்தனையை கலாச்சாரத்தின் கூறாக ஆக்குகிறார்கள். எங்கள் ஊரில் எப்படி கணிதம் கலாச்சாரத்தோடு இணைந்துவந்ததோ, எப்படி இசை ஆர்வம் இப்போது சுப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என்று மாற்றப்படுகிறதோ அதுபோல, இது இன்னொரு பரிமாணம்.

Apprentice போன்ற ஒரு நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் செய்து பார்ப்போமா? என்று ஒரு பொறி தட்டினபோது முதலில் ஆர்வமாக இருந்தாலும் யோசித்து பார்க்க மலைப்பாக இருந்தது. வாரா வாரம் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஊடக அனுசரணை வேண்டும், தகவல் தொழிற்துறை நிபுணர்கள் வேண்டும், அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இடம் வேண்டும். ஸ்பொன்ஸர்ஸ் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலே நிகழ்வில் பங்கெடுக்க போட்டியாளர்கள் வேண்டும். அதே எக்சைட்மேண்டோடு, ஒரு கலக்கு கலக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வரும் போட்டியாளர்கள். இயலுமா என்று கேட்டபோது யாருக்குமே எந்த சந்தேகமும் இருக்கவில்லை!

Yarl Geek Challenge Season I, ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29ம் திகதிவரை நடைபெறுகிறது.

fb

இந்த போட்டி மென்பொருள் துறையை(Software Engineering) சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு அல்லது ஐந்து போட்டியாளர்கள், அவர்களுக்கு மென்பொருள் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆலோசகர்(mentor) என்று ஒரு அணி அமைக்கவேண்டும். அணியில் பலதரப்பட்ட திறமைசாலிகள் இருத்தல் அவசியம். திறமையான டிசைனர், வித்தியாசமான ஐடியாக்களை யோசிக்கக்கூடியவர், அவற்றை document செய்ய கூடியவர், எல்லோரையும் கவரும் வண்ணம் பிரசெண்டேஷன் செய்யக்கூடியவர், அணியை வழிநடத்த கூடியவர் என எல்லோரும் அணியில் இருந்தால் தான் சுற்றுகளில் தப்பிக்க முடியும்.

மொத்தமாக ஐந்து சுற்றுகள். முதல் சுற்றில் அணிகள் தங்களின் ப்ரோபோசலை சமர்ப்பித்து அறிமுகப்படுத்தவேண்டும். இரண்டாவது சுற்று Requirements Engineering என்று ப்ரோபோசலில் இருக்கும் அம்சங்களை எப்படி உள்வாங்கி, அனலைஸ் பண்ணி, நேர்த்தியாக குழப்பங்கள் இல்லாமல் வரையறுப்பது போன்ற செயற்பாடுகள் இந்த சுற்றில் ஆராயப்படும். மூன்றாவது சுற்று டிசைனுக்கானது. இங்கே தான் எப்படி அணிகள் தங்கள் ஐடியாவை வடிவமைத்து உருவாக்கமுடியும் என்று தெரிவிக்கப்போகின்றன. நான்காவது சுற்று அல்கோரிதம் சார்ந்தது. முழு ப்ரோஜெக்டையும் செய்து முடிக்க அவகாசம் இல்லாததால், அவர்களின் ஐடியா சார்ந்த அல்கோரிதம் ஒன்று அணிகளுக்கு கொடுக்கப்பட்டு அதை அவர்கள் செய்து காட்டவேண்டும். இதிலே சுவாரசியமான கலந்துரையாடல்கள், ஏன் இப்படி, ஏன் இப்படி இல்லை என்றெல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம். கடைசிச்சுற்று, எப்படி அணிகள் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தப்போகின்றன? அதன் strategy என்ன? அடுத்தகட்ட நகர்வு என்ன? ஒரு ஐடியாவை எப்படி சந்தையில் வெற்றிகரமான product ஆக்குவது என்ற சுற்று. ஒருவித மரதன் ஓட்டம் போல, ஐந்து சுற்றுகள். காலை மாலை என மாணவர்களும் பொறியியலாளர்களும் நிபுணர்களும் ஆர்வலர்களும் ஒரே இடத்தில்.

போட்டிகள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் மாலை அமர்வாக, தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும். காலையில் அணிகள் தங்கள் mentor உடன் இணைந்து கலந்துரையாடி அன்றைய சுற்றுக்கு தம்மை தயார் பண்ணும். மாலையில் நடுவர்கள், வெளியார்கள் முன்னிலையில் போட்டிகள், வெற்றிகள், வெளியேற்றங்கள், சுற்று சார்ந்த தொழின்முறை அமர்வுகள் என நிகழ்வுகள் நடைபெறும்.

ஒக்டோபர் பதின்மூன்றாம் திகதியன்று, யாழ்ப்பாணம் சர்வோதயா மன்றத்தில்(Sarvodaya Center Hall) ஒரு அறிமுக நிகழ்வு நடைபெறும். அணிகள் அறிமுகம், அணிகளுக்கு mentorகளை நியமிக்கும் நிகழ்வு, போட்டிகள் பற்றிய அறிமுகங்கள் … The launch அன்றைக்கு தான். அங்கேயே உங்கள் ஐடியாக்களை கலந்துரையாடி போற்றிக்கேற்றமாதிரி வடிவமைக்கலாம். பின்னர் இரண்டுவாரம் கழித்து ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29வரை போட்டிகள் ஆரம்பமாகும்.

இப்போது இந்த போட்டிகளில் எப்படி நாமும் இணைவது? போட்டியாளர்களாக இணையவேண்டும் என்றால், நீங்கள் நான்கு ஐந்து பேர் ஒன்றிணைந்து, சாதுர்யமாக ஒரு அணியை தெரிவு செய்து ஒன்றிரண்டு ஐடியாக்களுடன் எம்மை அணுகவேண்டும். போட்டியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கலாம், ஐடி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களாக இருக்கலாம், பாடசாலை மாணவர்களாக கூட இருக்கலாம். நம்மால் முடியும் என்று நினைத்தால், அப்படி நினைப்பவர்கள் கூட இருந்தால், ஐந்து பேர் சேர, அணி ரெடி. ரெடியாகுங்கள் … இரண்டுவாரங்கள் தான்.

ஏற்கனவே ஐடி துறையில் பரிச்சியமான, project managers, business analysts, software architects & engineers யாராவது இந்த நிகழ்வில் இணைந்து அணிகளை வழிநடத்த ஆர்வமாக இருந்தால் உங்களை அன்போடு எம்மை தொடர்பு கொள்ள அழைக்கிறோம். நான்கு நாட்கள் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டும், மிகுதி விஷயங்கள் எல்லாமே நாங்கள் பார்த்துக்கொள்வோம். இப்படி ஒரு நிகழ்ச்சியை உங்களைப்போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. எனவே இணைந்து, யாழ்ப்பாணத்தில் இப்படியான பலவிஷயங்களுக்கு ஒரு முதல்விஷயமாக இதை செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். நாடி நிற்கிறோம்.

இந்த முயற்சியில் ஆர்வமாய் இருப்பவர்கள், வெளிநாட்டில் இருக்கும் துறை சார்ந்தவர்கள், ஸ்பொன்சர்ஸ், இலங்கை நிறுவனங்கள் மூலம் ஸ்பொன்சர்ஸ் கொண்டுவரக்கூடியவர்கள், மீடியா என எல்லோரின் பங்களிப்பும் எங்களுக்கு அவசியம்.தொடர்புகொள்ளுங்கள். கலக்கலாம்!

சொல்லப்போனால் ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29வரை, நான்கு நாட்களுக்கு எல்லோரும் சேர்ந்து எங்கள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு சந்தோஷமாக கலந்து பேசி, கொண்டாடி..

Its going to be a new experience and sure it will be fun!

போட்டி பற்றிய தொடர்ச்சியான தகவல்களுக்கு Yarl IT Hub அமைப்பின் இணையத்தளத்திலோ அல்லது Facebook பக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

அணிகளின் விண்ணப்பம்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள்.

ஏனைய இணைப்புகள்

www.yarlithub.org

http://www.facebook.com/groups/264218806991707/

யாழ்ப்பாணத்தில் ஒரு சிலிக்கன் வலி!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக