Skip to main content

கதாவிலாசம்


274
ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.

The namesake வாசிக்கும்போது நானே கொகுலாகவும் அஷோக்காகவும் ஆஷிமாவாகவும் உருவம் எடுத்திருக்கிறேன். அஷோக் இறந்தசெய்தி கேட்டு ஆஷிமாவுக்கு குளிர முதல் எனக்கு குளிர்ந்தது. பிரிவோம் சந்திப்போம் ரத்னாவுடன் பேசுவதற்கு வெட்கப்பட்டு தலை குனிந்திருக்கிறேன். மஞ்சளழகி கடற்கரையில் நீராடிவிட்டு வருகையிலே வசமிழந்திருக்கிறேன். கோபல்ல கிராமத்து அண்ணாச்சியின் புத்தக அலுமாரியை நோட்டம் விட்டிருக்கிறேன். ஐன்ஸ்டீனோடு பொன் நகரத்து புகையிரத மணிக்கூட்டை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஒன்று கதை மாந்தராக நாங்கள் மாறுவோம். இல்லை கதை மாந்தரோடு அசரீரியாக உலாவுவோம்.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும்போது அதை எழுதிய எழுத்தாளன் தான் உலகிலேயே அதி சிறந்த எழுத்தாளன் என்ற எண்ணம் வரும். செல்லம்மாளை வாசித்தபோது புதுமைப்பித்தனை விட எவன் வருவான் என்று எண்ணினேன். கோர்த்சேயின் Disgrace வாசித்தபோது இப்படியும் எழுதமுடியுமா என்று தோன்றியது. கோயில் மண்டபத்து மூலையில் சிவனே என்றிருக்கும் குட்டி பிள்ளையார் சிலையை பார்க்கும்போது அதற்குள் தான் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் வரும். வணங்காமல் போக மனம் வராது. ஒரு அழகான கவர் ட்ரைவை சச்சின் அடித்தாலும் கௌரி அடித்தாலும் மெய் சிலிர்க்கிறது. இதில் பெரியோர் சிறியோர் ஏது?

வாசிப்பும் அப்படியே.

எஸ்ராவின் கதாவிலாசத்தை வாசித்தபோது சேம் பின்ச். மனுஷன் கதாசிரியர்களை கொண்டாடியிருக்கு. கூட வாழ்ந்திருக்கு. ஒப்பிடுதல் என்பது கொண்டாடுவதற்காகவே ஒழிய ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்த அல்ல. அதை எஸ்ரா சொல்லாமல் அழகாக செய்கிறார். தும்பைபூவின் நுனியில் இருக்கும் தேன்துளி சிறிதே என்றாலும் அதன் சுவைக்கு நிகரே இல்லை என்கிறார். தன் வாழ்வில் கண்ட நிகழ்வுகளை, மாந்தர்களை வாசிக்கும்போது கொண்டுவருகிறார். அல்லது அவர்களாக வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். ரசிகன்டா.

வாசித்துக்கொண்டிருக்கும்போதே கேதா வீட்டு கழிவறை கொமெட் டாங்கில் கதாவிலாசம் இருந்த ஞாபகம் வந்தது!
மெசேஜ் அனுப்பினேன். பதில் வந்தது.
"That book changed me, rasikan bass. He get lost and make us get lost and immerse in it."
தன்னை தொலைத்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளன் ஆகலாம். எஸ்ரா எழுத்தாளன் ஆனதில் ஆச்சரியம் இல்லை. எப்போது எழுத்தாளன் வாசிப்பை நிறுத்துகிறானோ அவன் எழுத்துகளும் ஒரு குறித்த வடிவத்துக்குள் தேங்கிவிடும். அல்லது எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். வாத்தியார் மரணப்படுக்கையிலும் வாசித்தார். எழுதினார்.

s-ramakrishnan

கதாவிலாசம் … வாசிப்பின் கொண்டாட்டம்.

Comments

  1. நீங்கள் இப்பொழுது எழுதுவது குறைந்து விட்டது என்று தான் கவலையாக இருக்கிறது. நாங்கள் சுயநலக்காரர்கள்......கஷ்டப்படாமல் வாசித்து விட்டு நேரம் இருந்தால் மட்டும் விமர்சனம் எழுதுவோம் .யாரை குறை சொல்வது ........

    ReplyDelete
  2. Enna bass .. I am writing pretty much every week irrespective of the responses :)

    ReplyDelete
  3. sorry to tell you JK... yes you are doing your best but I felt you are not writing interesting stories as before. May be I am stuck in one circle . Dont worry you have lots of new followers now. Keep doing your good work.

    ReplyDelete
  4. S Ra once wrote: when he was at his friends place and that friends wife was serving the dinner. Then she was commenting: This fellow is eating a lot. Amazing writer.

    Now I am reading sujatha book. no word to discribe.

    siva

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட