Skip to main content

தங்க மகன்

 

 

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-91/gnakoothan1.jpg

இரணமடு குளத்துக்கட்டு
கரியரில கருக்கு மட்டை
பறியிரண்டு ஹாண்டிலில
பொரியுருண்ட வாயுக்குள்ள.

இரவி அயரும் நேரத்தில
கரியர் கூட்டம் வருமெண்டு,
புரவிபோல கடுகதியில்
துவியுருளி மிதிச்சானே.

வழித்துணைக்கு பாட்டிருக்கு
இளையராஜா மெட்டிருக்கு
இருமல் ஒண்டு எடுத்துவிட
எசப்பாட்டு கேட்டுடிச்சு.

கறுவலோட பாட்டுக்கு
எசப்பாட்டு ஏதென்று
பருவகுயில் குரல்வந்த
திசைதேடி பறந்தானே.

பாட்டுக்காரி யாரு எண்டு
பார்த்தகணம் அக்கணமே
கரண்டுகம்பி அறுந்துவிழுந்த
மரத்தபோல எரிஞ்சானே.

திறந்த துருவி(ல்) தண்ணியில
கறந்த பாலு நிறத்து மேனி
கச்சைவர குறுக்குக் கட்டி
பொச்சு தேச்சு குளிக்க கண்டு,

பிச்சை எடுக்க வந்தவனும்
எச்சி இலை குப்பையில
மிச்சமீதி தேடிப்பார்த்து
சொச்சத்தயும் விழுங்குவானே.

இளிச்சுகொண்டு நிண்டவனை
எட்டயில கண்டவளும்
பக்கத்தில கிடந்த கல்லை
ஹெட்டபோலில் அடிச்சாளே.

விரைந்து வந்த குறுனிக்கல்லு
மறந்து நிண்டு பாத்தவனின்
மண்டையில பட்டதால
மருண்டவனும் பறந்து போனான்.

வெட்டிப்பயல் விழுந்தடிச்சு
வீடுவந்து சேர்ந்தபோது
சொட்டையில சொட்டு ரத்தம்
கொட்டிக்கொண்டு நிற்ககண்டு,

கட்டினவள்  கையிருந்த
சட்டி விழுந்து உடஞ்சுபோச்சு.
பொட்டு வச்ச வட்டமுகம்
பெட்டி பாம்பா சுருங்கிப் போச்சு.

உச்சிமேல கத்தாழை
வச்சி பத்து போடடுக்கொண்டு
விட்ட இவ ஒப்பாரியில்
உப்பளமு தோன்றிப்புட்டு.

கணவனுக்கு கல்லெறிஞ்ச
கள்ளனை பிடிக்கவெண்டு
காவல்துறை போக அவ
காலில் செருப்பை மாட்டிட்டா.

மாட்டிப்புட்டா வண்டவாளம்
தண்டவாளம் ஏறிடுமே!
மண்டக்கதை தெரிஞ்சுபோனா
பங்கருக்குள் போகணுமே.

வாசல்படி போனவளை
புறத்தால கூப்பிட்டு.
பேசாமே குசுனிக்க
போடி எண்டு சொன்னானே.

சின்னபெடி ரெண்டு  சேர்ந்து
கல்லடிச்சு போட்டாங்கள்.
காவல்துறை கண்டறிஞ்சா
உள்ள தூக்கிப் போடுவாங்கள்.

பாவமெண்டு விட்டிடெண்டு
சொன்னவனை காதலுடன்
“எண்டபுருஷன் தங்கமெண்டு”
முத்தமொண்டு தந்திட்டாள்!

 

**********************

ஓவியம் : வென்னி மலை

Comments

  1. தங்க மகன் மங்கமாட்டான்................

    அஜந்தன்

    ReplyDelete
  2. வைரமுத்துவின் 'அம்மா' கவிதை மெட்டு
    கடுகதியில் துவியுருளி - எங்கள் ஈழ டச்சு!
    Uthayan

    ReplyDelete
  3. Very nice. Liked the reality potrayed in this.

    ReplyDelete
  4. நல்ல கவிதை.. பொரியுருண்டை கரியர் குசினிக்க என்று பல நம் வட்டார வார்த்தகளைப் பாவித்திருக்கிறீர்கள்.
    ஒரு சந்தேகம்: தங்கமகன் என்னடாவெண்டால் கரியர் கூட்டம் வருமென்று மிதிச்சுக்கொண்டு இருக்கிறார். அவவெண்டால் யானை தண்ணி குடிக்க வாற துருவில பாட்டுப் பாடிக்கொண்டு பொச்சு தேச்சுக் குளிச்சுக்கொண்டிருக்கிறா. இது எப்ப சாத்தியம்? ஒருவேளை அவ வன்னி மகள் யானை பல கண்டவள். உவர் யாழ்ப்பாணத்தால இடம் பெயர்ந்து போய் அங்க கவிதை எழுதிக் கொண்டு திரிந்த அந்த ஆளோ ?
    இது நனைவிடை தோய்தல்லத்தானே?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. நீங்கள் வன்னியில் வசித்தீர்களோ தெரியவில்லை. நீர் குடிக்க வரும் யானைகள் அண்டும் பகுதி குளத்தின் கிழக்குக்கரை.அங்கேயே விறகு எடுக்கும் காடு இருக்கிறது. கட்டிக்கொண்டு கட்டு ஏறினால், துருவில் குளத்துக்கு வடக்கே வயல்கள் நோக்கி இருக்கும். யானைகள் கட்டு தாண்டுவதில்லை. அதனால் அவள் குளித்தது ஆச்சரியமில்லை. அவன் பயத்தில் ஒடுவதும் இயல்பே. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கட்டு சிறியது. லத்திகளை அங்கேயும் காணமுடியும். புனைவுகள் பல உண்மை சம்பவங்களை கோர்த்து செதுக்கும் கற்பனையே. அதில் என்னதும் இருக்கும். உங்களதும் இருக்கும்.

      Delete
  5. "அதில் என்னதும் இருக்கும். உங்களதும் இருக்கும்" - கடைசியில எனக்கும் என் மனைவிக்குமிடையில கோள் மூட்டுறீங்களே!

    ReplyDelete
  6. u use all rare words. Catta Pult. Parri (Bag).
    ur writing is amazing.

    ganesh ( I am known as siva as well)

    ReplyDelete
  7. அந்த கல் ஏறி வாங்கினது நீங்கதானோ தெரியல .....................................

    சும்மாதான் நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
  8. என் புருஷன் தங்கமெண்டு
    முத்தமொன்று தரும்முன்னே
    சின்னப்பொடி ரெண்டு சேர்ந்து
    அடிச்ச கல்லு போலில்லை
    என்ற அவள் பார்வையிலே
    தங்கமும் தகரமாச்சே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட