Skip to main content

Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!

 

lifeofpiவிலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
-- மாணிக்கவாசகர்

“கண்ணே கண் மணியே, கண்ணுறங்காய் பூவே” என்று ஜெயஸ்ரீ தன் மடியில் எங்கள் தலையை வைத்து 3D இல் வருடுவதோடு படம் ஆரம்பிக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதை அவர் ஒரு எழுத்தாளருக்கு சொல்லுவதான கதை.

 

பை என்ற பிஸ்ஸிங்கின் குடும்பம் பாண்டிச்சேரியில் விலங்குகள் காப்பகம் ஒன்று நடத்துகிறது. இவனோடு சேர்த்து அம்மா அப்பா அண்ணன் என்று வீட்டில் நான்கு பேர். அழகான குடும்பம். பை இற்கு சிறுவயது முதலே யார் கடவுள்? என்ற தேடல் இயல்பாக ஆரம்பித்து எல்லா கடவுள்களிலும் தத்துவங்களிலும் ஈர்ப்படைகிறான். படுக்கைக்கு போகும் முன் விஷ்ணுவை வணங்குவான். சாப்பிடும் முன்னர் ஜெபித்து ஆமென் சொல்லுவான். அல்லாவை தொழுவான். யூதாயிசத்திலும் நம்புவான். ஏன் கடவுள் தன் குழந்தையை பூமிக்கு அனுப்பி இவ்வளவு கொடுமைப்படுத்தவேண்டும்? என்று இயேசுவை பற்றி கேட்பான். எம்மோடு சேர்ந்து எம்மை போலவே எல்லா துன்பங்களை அனுபவித்து எமக்காகவே தான் இறைவன் இருக்கிறார் என்று காட்டவே அவர் தன் மகனை அனுப்பி துன்பப்படவைத்தார் என்று பாதிரியார் சொல்ல, இவனுக்கோ இயேசுவை பார்க்க பரிதாபம் வருகிறது. அட, கடவுளின் நோக்கத்துக்காக ஏன் மகனை இந்த பாடு படுத்துகிறார்? என்ற பரிதாபம். இறைவன் மீது கொஞ்சம் கோபம்.

இறைவன் மீது உனக்கு இருக்கும் நம்பிக்கையின் ஆழம் அது பரிசோதிக்கபடாதவரைக்கும் விளங்காது(You don’t know the strength of your faith until it’s been tested) என்பதை யாரோ சொல்ல அதையும் பரிசோதிக்க துணிந்தான்.  புலிக்கூட்டுக்கு முன்னால் போய், ஒரு மாமிசத்துண்டை வைத்துகொண்டு அதன் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த புலியும் அவனை ஓர்ந்து கவனித்துவிட்டு மெல்ல மெல்ல அணுகி மாமிசத்தை பறிக்கும் தருவாயில், தந்தை பாய்ந்து வந்து அவனை காப்பாற்றுகிறார். மிருகங்களுக்குள்ளும் ஒரு உணர்ச்சியுள்ள ஒரு ஜீவன் இருக்கிறது என்று இவன் சொல்லுவதை இல்லை என்று நிரூபிக்க, ஒரு ஆட்டை புலிக்கூண்டில் கட்டிவைத்து, அதை எப்படி புலி அடித்து சாப்பிடுகிறது என்று காட்டுகிறார். இப்போது தான் முதன்முறை பை பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தின் முதல் அனுபவத்தை பெறுகிறான்.

lifeofpi2

பைக்கு பதினேழு வயதாகும்போது மொத்த குடும்பமுமே விலங்குகளை ஒரு மிகப்பெரிய சரக்கு கப்பலில் ஏற்றியபடி கனடாவுக்கு குடிபெயருகிறார்கள். பயணத்தின் போது கப்பல் சமையல்காரன் இவர்களை “கறி” என்று திட்டுகிறான். இன்னொரு சீனத்தவன் நண்பனாகிறான். கடல் பயணம் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் கடந்தகாலத்தின் நினைவுகளோடும் பயணிக்கிறது. ஒரு நாள் இரவு புயலும் இடியும், எல்லோரும் கீழ் தளத்தில் நித்திரை. பை புயலை பார்த்து ரசிக்கவென மேல் தளத்திற்கு வருகிறான். அப்போது மிகப்பெரிய கடல் அலை கப்பலை கவிழ்க்கிறது. உள்ளே தூக்கத்தில் அவனின் மொத்த குடும்பமுமே இறந்துவிடுகிறது. பை மட்டும் சின்ன படகில் தப்ப முடிகிறது. படகில் அவனோடு சேர்த்து ஒரு காலுடைந்த வரிக்குதிரை, ஒரு ஒராங்குட்டான் குரங்கு, ஒரு ஓநாய்(spotted hyena) கூடவே அந்த புலி. அதற்கு பெயர் ரிச்சார்ட் பார்க்கர்.

புலி அந்த படகின் தரப்பாளுக்கு அடியில் படுத்துக்கிடக்கிறது. இது தெரியாமலோ என்னவோ ஓநாய் படகு முழுதும் தன் ஆட்டத்தை காட்டுகிறது. காயப்பட்ட வரிக்குதிரையை கடித்து கொல்கிறது. அந்த ஒரங்குட்டானுடன் சண்டைக்கு போய் அதையும் கொல்கிறது. பைக்கு பயம் பிடிக்கிறது. அடுத்தது அவன் தான் என்று நினைந்து நடுங்கும் தருவாயில் திடீரென்று புலி ஒரே பாய்ச்சலாக உள்ளிருந்து பாய்ந்து ஓநாயை அடித்துக்கொல்ல, இப்போது படகில் பையும் அந்த புலியும். கதை இங்கே தான் உள்ளே இறங்கி ஆட ஆரம்பிக்கும் தருணம்.

புலி இறந்த மிருகங்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டு உறுமிக்கொண்டு திரிகிறது. பை அங்கு கிடந்த துடுப்புகளை சேர்த்து கட்டி ஒரு குட்டி மிதவை செய்து அதை படகோடு கட்டி, அந்த மிதவையிலேயே தங்கிக்கொள்கிறான். இடையிடையே புலி அசரும் சமயம் பார்த்து படகுக்கு போவான். இவனுக்கு கொஞ்சம் சாப்பாடு படகில் இருந்தாலும், புலிக்கு மாமிச உணவு வேண்டும், இல்லாவிட்டால் நீந்தி வந்து தன்னை அடித்து சாப்பிட்டுவிடும் என்ற பயத்தில் மீன் பிடித்து கொடுக்கிறான். குடிக்க தண்ணீர் கொடுக்கிறான். ஒருநாள் ஒரு திமிங்கலம் பாய்ந்த பாய்ச்சலில் இவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உணவுகளும் அடிபட்டு போக, இவனும் மீனை பிடித்து சாப்பிட தொடங்கினான். இன்னுமே எவ்வளவு நாட்களுக்கு தான் மிதவையிலேயே கிடப்பது? என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக புலியை பயிற்றுவித்து கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம் என்று முயல்கிறான். புலியும் கட்டுப்படுகிறது. படிப்படியாக ஆரம்பித்து இப்போது பை நிரந்தரமாகவே படகில் தங்கிக்கொள்கிறான்.

life-of-pi2

மாதங்கள் கழிகின்றன. கொலைப்பட்டினி. இரண்டுபேருமே இறக்கும் தருவாயில் ஒரு மிதக்கும் தீவை அடைகிறார்கள். அங்கே நீர், கிழங்குகள் எல்லாமே கிடைத்தாலும், இரவில் தடாகம் எல்லாமே இரசாயன மாற்றங்களில் நச்சாகிறது. அங்கே இருந்த தாவரங்களும் விலங்குகளை உண்ணும் வகைகள் என்பதை அறிந்த பை, படகில் மீண்டும் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான். புலியும் இவனோடு தொற்றிக்கொள்கிறது.

இன்னும் சில மாதங்கள் கடல் பயணம். இறுதியில் ஏதோ ஒரு கரிபியன் தீவில் படகு கரையொதுங்குறது. 227 நாட்களுக்கு பிறகு இருவருமே தப்பிவிட்டார்கள். கரையில் பை அப்படி தள்ளாடி சரிந்துவிழுகிறான். புலியும் களைத்து விழுந்து தள்ளாடுகிறது. இத்தனை நாளாய் கூட இருந்த புலி இவனை திரும்பிப்பார்த்து ஒரு சொட்டு கண்ணீராவது விடாதா என்று இவன் ஏக்கத்தில் பார்க்க, அது அசட்டையே செய்யாமல் காட்டுக்குள் நுழைகிறது.

இப்போது பை ஒரு வைத்தியசாலையில். கப்பல் எப்படி கவிழ்ந்தது என்று இவனை விசாரிக்கிறார்கள். கதையை சொல்லுகிறான். அவர்கள் நம்பவில்லை. உண்மை கதையை சொல்லு என்கிறார்கள். என்னடா இது என்று பை வேறொரு கதை சொல்கிறான்.

படகில் தப்பியவர்கள் பையும், அவன் அம்மாவும், அந்த சமையல் காரனும் சைனீஸ் காரனும். சைனீஸ் காரன் காலில் காயம். அவனை அடித்து கொன்றுவிட்டு சமையல்காரன் அவனையே தூண்டிலாய் பயன்படுத்தி மீன் பிடிக்கிறான். நரமாமிசம் சாப்பிடுகிறான். இதை பார்த்த பையின் அம்மா, பையை ஒரு மிதவையில் தப்பச்சொல்லிவிட்டு சமையல்காரனுடன் சண்டைபோட்டு சாகிறார். இதை பார்த்த பை ஆவேசத்தில் திடீரென்று பாய்ந்து சமையல்காரனை கொன்றுவிடுகிறான்.

இரண்டு கதைகளையும் கேட்ட எழுத்தாளர் முதலாவது கதையே சிறந்த கதை என்கிறார். கப்பல் கம்பனியும் அதையே தெரிவுசெய்கிறது. “And so it goes with god” என்று பை சிரிக்கிறான். கதை முடிகிறது.

இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். அந்த காலொடிந்த வரிக்குதிரை தான் அந்த சீனத்துக்காரன். ஒரங்குட்டான் தான் பையின் அம்மா. அந்த ஓநாய் தான் சமையல்காரன். ஓநாயை அடித்துக்கொன்ற புலி? அது தான் இந்த பை. அப்படி என்றால் முதல் கதையில் வருகின்ற பை யார்? என்ற கேள்விக்கு பதில் தான் … கடவுள். உணர்ந்தபோது நான், கேதா, வீணா மூவருக்குமே மயிர்கூச்செறிந்தது. என்ர கடவுளே!

life-of-pi-movie-image-23

முதல்கதையை புலியின் கோணத்தில் பாருங்கள். உயிர்தப்ப நீந்திவந்த புலி தட்டுத்தடுமாறி கடவுள் இருக்கும் படகில் சிக்கென பற்றிக்கொள்கிறது. ஓநாய் அவ்வளவு அட்டகாசம் செய்தபோதும் தரப்பாளுக்குள் இருந்த புலி, தாமதித்தால் சங்கு, தனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்தபிறகே அது ஓநாயை கொல்கிறது. அதற்கென்று நல்ல தண்ணீர் கிடைக்கிறது, மீன் கிடைக்கிறது. எல்லாமே கடவுள் தான் கொடுக்கிறார். அதைக்கூட அறியாமல் கடவுளையே பார்த்து உறுமி அவரை படகை விட்டு வெளியே போய் ஒரு மிதவையில் வசிக்கச்செய்கிறது. ஒரு கட்டத்தில் கடவுளின் கட்டுப்பாட்டுக்கு அடிபணிகிறது. ஆளில்லா தீவில் தண்ணீரும் உணவும் கிடைத்தபோது கடவுளை கணக்கெடுக்கவில்லை. கடவுளோடு சேர்ந்து கிடைக்கவில்லை. ஆனால் அந்த இடம் நிரந்தரம் இல்லை, ஆபத்தானது என்று தெரிந்தவுடன் மீண்டும் கடவுளுடன் படகில் தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கரைசேர்ந்து உயிர் தப்பிய பின, காப்பாற்றிய கடவுளை ஏன் நாயே என்று கூட கவனிக்காமல், ஒரு நன்றி, bye கூட சொல்லாமல் தன் பாட்டுக்கு சந்தோஷமாக காட்டுக்குள் புகுந்துவிட்டது.

முதல் கதையில் பையும் புலியும் தப்புகிறார்கள். அதாவது கடவுளும் பையும் தப்புகிறார்கள். ஆனால் இரண்டாவது கதையில் பை மட்டுமே தப்புகிறான். அங்கே கடவுள் என்ற பாத்திரம் அருவமாக இருந்து பையை காப்பாற்றியிருக்கிறது. ஆக இரண்டுமே ஒரே கதைதான். ஒன்றில் கடவுள் ஒரு பாத்திரம். மற்றயதில் கடவுள் அருவம். எதை நம்புவீர்கள்? உருவத்தை தானே. அதனால் தான் கப்பல் கம்பனியும் அதையே நம்புகிறது. எழுத்தாளனும் அதையே விரும்புகிறான். இந்த ஒரு காரணத்துக்காகவே கிரிஸ்துவத்தில் கடவுளின் குழந்தையாக இயேசு இங்கே வந்து கஷ்டப்பட்டார். இந்து மதத்தில் அவதாரங்கள் இடம்பெற்றன. எம்மோடு எப்போதுமே சேர்ந்தியங்கும், எம்மை இயக்கும், வாழவைக்கும் கடவுள்களை நாங்கள் உணருவதில்லை. எமக்கு எல்லாமே கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் கடவுளை மறந்துவிடுகிறோம். “I still cannot understand how he could abandon me so unceremoniously, without any sort of goodbye” என்று புலி திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் போன அந்த சந்தரப்பத்தை பை விவரிக்கிறான். எவ்வளவு உண்மை. ஆனால் அது தான் சாஸ்வதம் என்று உணர்ந்த ஏ ஆர் ரகுமான் “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று உணர்ந்து போற்றிப்பாடுகிறார்.

1352859256-3808271702

அதே சமயம் கடவுள் ஏன் எம்மையெல்லாம் இப்படி ஆட்கொள்ளவேண்டும்? அவருக்கேன் இந்த வேலை கெட்ட வேலை என்ற ஒரு விவாதத்துக்கும் பதில் இருக்கிறது. ஓரிடத்தில் பை(கடவுள்)சொல்கிறான் “Without Richard Parker, I wouldn’t be alive today to tell you my story. Caring for the tiger kept me alive”. இந்த இடத்தில் கொஞ்சம் agnostism கூட எட்டிப்பார்க்கிறது. அட கடவுளை நாம் தானே படைத்தோம். எங்களுக்காக கடவுள் அக்கறைப்படாவிட்டால் அவருக்கு தான் இருப்பு ஏது? என்ற ஒரு சிந்தனை. I care there for I am என்று சொல்லுவார்களே அது.

“நாமெல்லாம் நட்டநடு சமுத்திரத்தில் தனியனாக அல்லலுறும் சிற்றறிவு ஜீவன்கள். எங்களை காத்து மீட்க எப்போதுமே இறைவன் ஒருவனே எம்மோடு இருப்பான்” என்ற ஆன்மீகத்தின் ஆதார தத்துவத்தை இத்தனை தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்காயாக எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் ஒரு படம் கொடுக்கிறது என்றால் .. what a film!

இந்த படத்தை நான் டெக்னிக்கலாக விமர்சிக்கப்போவதில்லை. அது கூடாது. ஒரு படம் அது சொல்லவேண்டிய கருத்தை ஆணி அடித்தது போல சொல்லி, என்னை இவ்வளவு நீளமாக அலச வைத்திருக்கிறது என்றால், அப்படிப்பட்ட படங்களை விமர்சனம் என்று ஒரு வார்த்தைக்குள் அடக்கவே கூடாது. என்னை இப்படிப்பட்ட எண்ண ஒட்டங்களுக்குள் அலைபாய வைத்த படக்குழுவினருக்கும், படத்தை சேர்ந்து பார்த்த நண்பர்கள் கேதாவுக்கும், வீணாவுக்கும், முடிந்தபின் கார்பார்க்கிலேயே மணிக்கணக்காக திருவாசகம் பைபிள் தொட்டு “கந்தசாமி கலக்ஸியின், “யார் யார் யாரவர் யாரோ”வை கூட முடிச்சுப்போட வைத்த அந்த அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கும் … கூடவே வீணாவின் யாழ்ப்பாணத்து பால் கோப்பிக்கும் நன்றிகள்.

“என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் .. உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!”-- கடவுள்

Comments

  1. நானும் படத்தைப் பார்த்ததிலிருந்து பலவாறாக ஜோசித்துப் பார்த்தும் ஏதோவொன்றை இந்தப்படத்தில் தவறவிடுவதாக உணர்ந்தேன்.பை தான் கடவுள்.. இதை இதைத் தான் தவறவிட்டிருக்கிறேன். தரம்.. படமும் விளக்கமும் :-)

    ReplyDelete
  2. அருமையான பதிவு தலைவா. என்ன சொல்லுறது, மனசு இன்னும் அந்த அலைகளில் மிதந்துகொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  3. பின்நவீனத்தும் மாதிரி இருக்கும் போல.

    ReplyDelete
    Replies
    1. பின்னவீனத்துவமா எண்டு தெரியாது அண்ணே .. ஆனா பார்த்தபிறகு ஒரு பரவசம் வரும் .

      Delete
  4. நன்றி ஜனகன்.

    ReplyDelete
  5. Very nicely narrated JK when I searched on net for more views on the story, I came across another interesting opinion. Richard Parker is the evil inside human. When a person is challenged to the maximum, the evil comes in to play. One can't get rid of evil totally. But he can train himself to control evil. Life of PI is not just a movie. It's a whole experience. Glad we didn't miss it!

    --Veena

    ReplyDelete
  6. Wow..that's very good perspective and very typical one. I am also glad we didn't read the plot before watching it. That made us experience the film with our own conscience and our interpretation got its own uniqueness in the end. Yeah.. Glad we made the right choice and watched it.

    JK

    ReplyDelete
  7. I agree with Braveena Santhiranayagam. Watching the movie I never thought the original Pi is 'God' and that kind of interpretation is unnecessary, I feel. It's more of a dilemma between two sides of a human being, presented in two physical forms. In deed it was beautifully crafted and was a visual treat too..
    There is also an animated short film I've seen sometime ago presenting the real side of the story in a raw sense.

    -- Thevamaran

    ReplyDelete
  8. True Maran. But from PI's point of view, he was a seeker of god always. Even when the lightening strikes for the 1st time, he reacts as if he see the god. So it's fair to think that he was continuously realising god rough out the hardship in different forms. But he would have found it difficult to explain it to ppl and make them convinced of what he experienced. That's why he had to give a physical form to what ever he felt or what ever helped him to survive such a big challenge.

    -- Veena

    ReplyDelete
  9. As you mentioned, all that was experienced by Pi's good side as he was seeking for god, whereas the evil side was portrait by the Richard Parker. That's why I said, even in the first story, there was no presence of 'God' in a physical form. It's two sides of a human being presented to portray two different experiences which have contradicting in nature, but coexist in oneself.

    --Thevamaran

    ReplyDelete
  10. Thevamaran Ramathasan I see your validity of the point. The narration is ambiguous enough to bring many interpretations. In my case, we saw god in Pi and human in Tiger in the first story. And there are enough logical justifications given to for both versions of the stories for the existence of god. But the screen play is smart enough to leave other interpretations. After all the narrator is not trustworthy since he told different versions, left the viewers to wonder wha would have been true and not(one of the reasons I critically analysed the film). What if come and say I saw the god other day and then contradict to say no its just a dog? Then my authenticity will be questioned. The movie's success is not to let that questions arising but let people to analyse what the theme is all about. And I appreciate that effor, for all the reasons I don't put any counter argument to your experience and give due credits to it instead! I see there are enough necessasities for both of our discussion points.

    JK

    ReplyDelete
  11. JK, I agree with your point that the narration itself was ambiguous to allow different interpretation. Perhaps, that's the beauty of the movie. I'm looking at it as a movie presenting complexities arising within a person himself rather than attaching it to God as an element. The usage of the word 'god' in the movie itself can be interpreted differently without taking it in a direct sense. I don't mean to argue with you, but I'm merely remarking upon the interpretation that is also realistic and provides thoughtful insights into human nature than tagging it to God and faith in a simple way. The article is nice.. Thanks for taking time to write it.

    -- Thevamaran

    ReplyDelete
  12. As you said the theory of god is again is not the mere dialectical mean i suppose. I think the film got lot for taking for agnostics and atheists. All because it talks about faith and faith can easily evolved in to a god cos it's simple to keep it in that way. Anyway thanks for bringing the valid point, ofcourse I didn't think in that perspective on and after watching the movie.

    --JK

    ReplyDelete
  13. It's a pleasure.. Keep up your good writing..

    -- Thevamaran

    ReplyDelete
  14. Even though I enjoyed the movie very much, I understood the relationship between the 2 stories after reading your article. Superb work machchi.

    -- Kurinchi

    ReplyDelete
  15. JK,
    I wathced this movie during Christmas weekend. Definitely, it is one of the most memorable one and I felt there is something in the climax. However, I did not bother to try and understand it, till I read your post. After, reading your post, Gooogled to read other discussions about the movie's end, I liked those. Thanks for writing especially when Bombay Jayshree is nominated for Oscars. It is the fourth nomination in four years for Tamilians, hope she gets it.
    Mohan

    ReplyDelete
  16. Thanks Mohan .. Lets hope she wins too. Other nominated songs also good I could see.

    ReplyDelete
  17. //ஓநாய் அவ்வளவு அட்டகாசம் செய்தபோதும் தரப்பாளுக்குள் இருந்த புலி, தாமதித்தால் சங்கு, தனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்தபிறகே அது ஓநாயை கொல்கிறது. //

    ஓநாய் புலியை அடிக்கேல்லேயே? கடவுள (பைய)தானே கொல்ல போனது ?

    ReplyDelete
    Replies
    1. அது புலிக்கு தெரியாதே! மற்ற மிருகங்கள் எல்லாம் இறந்துவிட்டன என்றவுடன் அடுத்தது தான் என்று நினைத்திருக்கலாம். புலி இருந்த இடத்தில் மேலே தடியில் தொங்கிக்கொண்டிருந்த பை/கடவுள் புலிக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

      Delete
    2. ok, அடுத்து, வாழைப்பழம் தாழும்? தாழது என்றதுக்கும்? திமிங்கிலம் பாயுறதுக்கும் ஏதாவது இருக்கா :)

      Delete
    3. http://www.shmoop.com/life-of-pi/part-3-chapter-99-summary.html

      He tells Pi that for starters bananas don't float. (Remember Orange Juice and the island of bananas?) Pi gets Mr. Okamoto to put a banana in the sink and test his objection. The banana floats.

      //திமிங்கிலம் பாயுறதுக்கும் ஏதாவது இருக்கா :) //

      Ennaangadaa ninachchukittirukkeenga :) .. no idea baas.

      Delete
  18. நான் படம் பாத்து முடிச்சுட்டு புலிய தான் பையின்ர கற்பனை பாத்திரம் எண்டு நினைச்சன் ? இரண்டு கதையிலயும் பை இருப்பான் எண்டு தான் என்க்கு விளங்கினது? ஆன உங்கட விளக்கமும் நல்லாயிருக்கு, சில டவிடு கேக்கிறன் நேரமிருந்தா பதில் போடுங்க :)

    ReplyDelete
  19. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பழகன்

      Delete
  20. Hi JK,
    I think your take on the story is not what the author intended; if you read the book or listen to the author's interviews, you may find the authors intention to be somewhat different. But your take is very interesting nonetheless.
    For the record, in the first story, both Pi and the tiger are the two sides of the same person, Pi. Having witnessed the horrors that can be caused by human beings (including himself), Pi creates the animal characters to come to peace with what had happened. In other words, he creates a better story that will help him live his remaining days without guilt or trauma; a story where he is merely a witness to the horrors and the only role he plays is to keep the tiger (his bad side) both alive and under control. He creates 'orange juice' so that he is not haunted by the memory of his mother's death; he creates Richard Parker as someone seperate from himself to overcome the guilt of killing etc. This gives an alternative to the horrors of 'reality'. He then argues 'so it goes with God', meaning we need the character of god in our lives to give us a better story, else what is left a horror story of birth and death with no meaning or purpose.

    ReplyDelete
    Replies
    1. Hi Friend,

      Thanks for dropping by.
      //I think your take on the story is not what the author intended; if you read the book or listen to the author's interviews, you may find the authors intention to be somewhat different. But your take is very interesting nonetheless.//
      It doesn't really matter what the author was intended. Literature is all about how the recipient relates the experience provided by the art. I have seen the author's interpretations and that's well discussed by maran and Veena in the comments section. I don't dispute or deny that view.

      I feel more refreshed with my interpretations and if by any chance I meet the director/author, wouldn't mind explaining it :D ..

      Cheers. Whats your good name btw?

      Delete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட