Skip to main content

ஆண்கள் இல்லாத வீடு

முற்றத்து வேம்பு
விளக்குமாறால் கூட்டித்தள்ளியும்
சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள்
மரத்தடி நிழலில் நாற்காலி
என் ராங்கிகார அம்மா,
கால்கள் மெல்லமாய் தாளம்போட
ஏதோ ஒரு பாட்டு
நாளை இந்த வேளையோ? 
541957_10151420977146654_20018706_nஇது நல்ல வேளையோ?
எப்படிச்சொல்வேன் நான்?
என்னை விட்டு போய்விட்டான் என்றா?
அதிர்வாளா? அழுவாளா?
யாருக்காக அழுவாள்?
ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி
ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு.
பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன்.
என்னடா?
சொன்னேன்.
என்னடி சொல்லுறாய்?
திரும்பவும் சொன்னேன்.
போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா?
அரற்றினாள்
விடம்மா.. போனால் போறான்.
அம்மாளாச்சி … போயிட்டாரா ..
அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ
அழுதாள். அரட்டினாள்.
அதிர்ந்து போனேன் நான்.
அம்மா நீ வந்து… 
உடம்பில் ஏதோ ஊர்வது போல
அவனை காதலித்தேனா?
அறிந்தேனா புரிந்தேனா?
என்ன கருமாந்திரம் செய்தேன் நான்?
நான் நினைத்தது தான் அவன் என்றேனோ?
அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ?
அறியவும் முயலாமல் முனிந்தேனோ?
அம்மாவை பார்த்தேன்.
கண்களால் கோதிவிட்டாள்.
இந்த அன்பு
அவங்கள் இல்லாதவிடத்தில் 
அம்மாவின் அன்பு
அவளுக்கு என் அன்பு
நடக்கும் என்று பயந்தது தான்
நடந்துவிட்டது
இனி என்ன?
இதே வீடு தான்
ஆண்கள் இல்லாத வீடு
இதே வேம்பு, தோட்டம், துரவு
அடுப்புக்கரி  சரவச்சட்டி
ஒழுகல் கூரை, தேடாவளையம்
பட்டி மாடு கன்றுக்குட்டி
கழுத்துவெட்டி சேவல் கோழி
கெக்கலிக்கின்றன
இது ஆண்கள் இல்லாத வீடு
 

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக