Skip to main content

1984


images (1)

 

“சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது”
வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன்.
கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.
வெளிவட்டம் தான் உத்தியோகத்தர் கட்சி. White Collar ஆட்கள். இவர்கள் மாடு மாதிரி உழைப்பார்கள். கட்சி என்ன சொன்னாலும் அதை மானசீகமாக நம்புவார்கள். பெரிய அண்ணர் தான் அவர்களுக்கு கடவுள். அவரை காதலிப்பார்கள். அவர் படம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பெருத்த மீசையுடன் இருக்கும். கீழே “Big brother is watching you” என்று கொட்டை எழுத்துகளில் இருக்கும். பார்த்து ரசிப்பார்கள். வெளிவட்டக்காரர் காதல் செய்ய முடியாது. ஆனால் குழந்தை பெறலாம். குழந்தை பெறுவதற்காக திருமணம் முடிக்கலாம். செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் இச்சையோடு செய்யாமல் சிவனே என்று செய்யவேண்டும். வின்சனின் மனைவி “Lets do it for the party” என்பாள். அது தான் கட்சி மீது உள்ள பக்தி. “கட்சிக்காக இதை செய்கிறோம்” என்று அவசர அவசரமாக செய்துவிட்டு அப்புறம் தத்தம் வேலையை பார்க்கபோய்விடுவாள். மூளையை கட்சிக்காக காவு கொடுத்தவள். வின்சன் சுயசிந்தனை உடையவன். பிரிகிறார்கள்.
இதிலே இருக்கிற மூன்றாவது வட்டம் தான் கீழ்தட்டு மக்கள். Blue Collar வேலை செய்பவர்கள். தொழிற்சாலை, தோட்டம், கமத்தொழில் என்று மாடு மாதிரி வேலை செய்வார்கள். அவர்கள் உலகம் தனி. கட்சி அவர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களும் கட்சியை கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு என்று லோட்டறி, மது, மாது எல்லாமே விநியோகித்து அவர்களை பதர்களாக கட்சி மாற்றிவைத்திருக்கிறது. இவர்கள் நாட்டின் எண்பது வீதத்தினர். ஒரு நாட்டின் எண்பது சதத்தினர், முட்டாளாக, படிப்பறிவு இல்லாததாக, தம்மை சுற்றி நடப்பது எதையுமே கவனியாமல் இருந்தால் ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த மக்களுக்கு கூசிழிவு படங்கள் எடுத்து காட்டி சீரழிப்பதற்காகவே “உண்மை அமைச்சில்” பிரிவு இருக்கிறது. அங்கு தான் ஜூலியா வேலை செய்கிறாள்.
1984-John-Hurt
முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோஷலிசத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற பெயரில் பெரியண்ணனின் தலைமையில் உருவாகி இருக்கும் ஆட்சியில் தான் இதெல்லாமே நடக்கிறது. ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை உருவாக்கி, நாடு எப்போதுமே போரிலே இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். தாமே அடிக்கடி நாட்டுக்குள் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடத்தி கொலைசெய்வார்கள். இந்த நாட்டில் எந்த குற்றத்துக்கும் விசாரித்து பலவகை தண்டனை உண்டு. ஆனால் சுய சிந்தனை செய்தால் தண்டனை மரணம் தான். சுயமாக சிந்திக்கும் எவனுமே இறுதியில் சாகவேண்டும். இல்லாமல் போகவேண்டும். அப்படி ஒருவர் வரலாற்றில் இருந்தார் என்ற தடயமே அழிக்கப்படும். வரலாறு மாற்றப்படும். மாற்றுவார்கள். மக்களும் கேள்வி எதுவும் கேட்காமல் நம்புவார்கள். போலி நம்பிக்கை இல்லை. உண்மையிலேயே நம்புவார்கள். இரண்டும் இரண்டும் ஐந்தால் என்றால் நம்புவார்கள். சுரேஷ் நம்புவான். ரமேஷ் நம்புவான். சுமதி கைதட்டுவாள். நீயும் நம்புவாய். நான் நம்பிவிட்டேன்.
“He who controls the past controls the future. He who controls the present controls the past.” 
புரிகிறதா? எவன் இன்றைய திகதியில் சக்திவாய்ந்தவனாக இருக்கிறானோ அவனே நாளையை தீர்மானிக்கிறான். நேற்றையையும் தீர்மானிக்கிறான். அப்படி நேற்றையை தீர்மானிக்கும் பிரிவில் தான் வின்சன் கிளார்க் வேலை பார்க்கிறான். என்ன வேலை? இன்றைக்கும் நாளைக்கும் ஏற்றது போல வரலாற்றை மாற்றுவது தான் அவன் வேலை. உதாரணத்துக்கு ஒன்று. “ரேசர் பிளேடுக்கான ஒதுக்கீடு இந்த வருடம் ஆளுக்கு இருபது என்று குறைக்கப்படுகிறது” என்று தகவல் வருகிறது. வின்சன் உடனே சென்ற வருடம் பத்திரிகையில் வந்த அறிக்கையை பார்க்கிறான். அதிலே “அந்த வருடம் ரேசர் பிளேடுக்கான ஒதுக்கீடு ஆளுக்கு முப்பது” என்று இருக்கும். ஆக சென்ற வருடத்தை விட இந்த வருட ஒதுக்கீடு குறைகிறது. வின்சன் உடனே சென்ற வருட அறிக்கையில் முப்பதை பத்து என்று மாற்றுவான். எல்லா இடங்களிலும் அப்டேட் பண்ணுவான். இப்போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக ரேசர் பிளேட் ஒதுக்கிடப்படுவதாக அறிக்கை வெளிவரும்.
அதிர்ச்சியாய் இருக்கிறதா?
இன்னொரு உதாரணம். திடீரென்று மூன்று பேரை துரோகிகள் என்று டிவியில் காட்டுவார்கள். ஐந்து வருடங்களுக்கு முதல் இன்ன திகதியில் எதிரியின் பாசறையில் தாம் நாட்டின் ரகசியங்களை விற்றதாக ஒப்புக்கொள்வார்கள். உடனே வின்சன் ஐந்து வருடங்களுக்கு முதல் வந்த பத்திரிகை செய்திகளை படிப்பான். அதிலே இதே மூன்று பேரும் அதே தேதியில் அமெரிக்காவில் பெரிய அண்ணரோடு கை குலுக்கிக்கொண்டு கொடியேற்றும் படம் இருக்கும். உடனே அந்த செய்தியை அகற்றி, இவர்கள் மீது சந்தேகம் வரும்படியான செய்தியைக் அதற்குள் நுழைப்பான். ஆக ஐந்து வருடங்களுக்கு முன்னரேயே இவர்கள் துரோகிகள் என்று பெரிய அண்ணர் கண்டுபிடித்துவிட்டார் என்று வரலாறு சொல்லும். இப்படி வரலாற்றை மாற்றி மாற்றி, ஆகாயவிமானத்தை கண்டுபிடித்தது கூட கட்சி தான் என்று கதைவிடப்படும்.
கட்சிக்கு மூன்று கொள்கைகள் இருக்கிறது. நாடு முழுக்க அந்த கொள்கைகள் பரப்பப்படும்
யுத்தமே சமாதானம்.
அறியாமையே வலிமை
அடிமைத்துவமே உண்மையான சுதந்திரம்
சிறுவயது முதலே எதிரிகள், முகம் தெரியாத, சிலவேளை உருவகப்படுத்திய எதிரிகள் மீது வெறுப்பு இருக்கும். பொதுமக்கள் மத்தியில் துரோகிகள் தூக்கிலடப்படும்போது மக்கள் கொண்டாடுவார்கள். அகதிகள் சென்ற கப்பலை நாட்டின் படையினர் தாக்கி அழிக்கும் காட்சி டிவியில் போகும்போது மக்கள் விசில் அடித்து கரகோஷம் இடுவார்கள்.
All the war-propaganda, all the screaming and lies and hatred, comes invariably from people who are not fighting.
இலக்கியங்கள் கடவுள், மதம் எல்லாமே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் கட்சியில் கொள்கைகள் சேர்த்து மாற்றியிருப்பார்கள். மொழி கூட சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ஒழிக்கப்பட்டு வெறும் வழக்கு சொற்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் மக்களில் வாழ்க்கைத்தரம் அதள பாதாளத்துக்கு போயக்கொண்டிருந்தது. ஆனால் நாட்டில் பொருளாதாரமும், வசதியும் வரலாற்று தகவல்களின் படி சுபீட்சத்தை நோக்கியே செல்லும். எல்லோரும் அதை நம்புவார்கள் அல்லது அக்கறைப்படமாட்டார்கள். ஆனால் சிலர் சிந்திப்பார்கள். “இல்லையே சென்ற வருடத்தை விட இந்த வருடம் மோசமாக போகிறதே” என்று யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்களை வேட்டையாட தான் “சிந்தனை போலிஸ்” என்று ஒரு டீமே இருக்கிறது. கண்டுபிடித்தால் உங்கள் கதை கம்மாஸ்.

வின்சன் அப்படி யோசிக்க ஆரம்பித்தான்.
1984-2
வின்சனோடு கூட வேலை செய்யும் ஜூலியா. அடித்தட்டு மக்களுக்கு கள்ளச்சந்தையில் விநியோகிக்கவென கூசிழிவு படம் தயார் செய்யும் பிரிவில் வேலை செய்பவள். அழகி. புத்திசாலி. கட்சியின் பரமவிசிறி போல காட்டிக்கொள்ளும் சுயசிந்தனை உள்ளவள். கட்சிக்கு உச்சிவிட்டு தன்வேலையை பார்ப்பதே புரட்சி என்பாள். இவளும் வின்சனும் இரகசியமாக காதலிக்கிறார்கள். இடம் மாற்றி இடம் சென்று களவாக சேர்கிறார்கள். உட்கட்சியில் இருந்து கோப்பி சீனி களவாடி போட்டு குடிக்கிறார்கள்.
வின்சனுக்கு இந்த நாடும் மக்களும் இப்படி மாந்தைகூட்டமாக அடிமைப்பட்டு கிடப்பது பிடிக்கவில்லை. புரட்சி வேண்டும் என்கிறான். சிலவேளை அந்த எதிரி நிஜமாகவே இருந்தால் அவனோடு சேரவேண்டும் என்று நினைக்கிறான். அலுவலகத்தில் தொழில் புரியும் ஓபிரையன் அப்படிப்பட்ட புரட்சியாளன் என்று நினைத்து அவனை வின்சனும் ஜூலியாவும் சந்திக்கிறார்கள். கடைசியில் பார்த்தால் ஓபிரையன் “சிந்தனை போலிசின்” ஒரு முக்கிய உறுப்பினர் என்று தெரிகிறது. இருவருமே பிடிபடுகிறார்கள்.
1984-movie-miniluv-3
அப்புறம் ஒரு பாகம் பூரா சிறையில் நடக்கிறது. ஒரு சிந்திக்கும் மனிதனை, எப்படி சொல்லுவதை கேள்வியே இல்லாமல் ஏற்றுக்கொள்ளுமாறு மாற்றலாம் என்பதை, வலியை உளவியல் ரீதியாக எப்படி ஒருத்தனுக்கு கொடுத்து அவன் சிந்தனை, கொள்கைகளையே மாற்றலாம் என்பதை சாத்தியமாக்கிக்காட்டும் வதைக்கூடம் அது.
“நீ ஒரு துரோகி, உன்னை எப்படியோ கொல்லத்தான் போகிறோம், ஆனால் சாகும்போது நீ துரோகியாக சாகக்கூடாது, மனதளவில் நீ இந்த கட்சிக்கும் பெரிய அண்ணருக்கும் விசுவாசியாக மாறியபின்னரேயே உன்னை கொள்வோம்”
என்று ஓபிரையன் சொல்லுவான்.
“நீ சொல்லுவதை நான் வலிக்கு தப்புவதற்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் மனதளவில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடியாது.”
என்பான் வின்சன்.
“ஏன் முடியாது. ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்வாய். ஏற்றுக்கொள்ளவைப்போம். இது தான் சாஸ்வதம் என்று ஒன்றுமில்லை. நான் மிதக்கிறேன் என்று நானும் நம்பி, நீயும் நம்பினால் பின்னர் நான் மிதக்கிறேன் என்பது உண்மையாகிறது. நான் நம்புகிறேன். உன்னை நம்பவைத்துவிடுவேன்”
ஓபிரையன் சொல்ல முள்ளந்தண்டு சில்லிடும். தொடர்ச்சியான வதையின் இறுதியில் வின்சன் மனசார நடப்பவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள தொடங்கினான். எதற்காக நான் இவ்வளவு நாளும் தவறாக யோசித்தேன்? என்று மனம் வருந்துவான். தனக்கு முன்னாலே இருந்த பெரிய அண்ணரின் பிரமாண்ட படத்தை காதலுடன் பார்க்க தொடங்கினான்.
இனி அவனை ஒரு துப்பாக்கி சன்னம் பிடரியை பதம் பார்க்கும்!

ஜோர்ஜ் ஒர்வல்

என் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். எனக்கென்று இல்லை. இவரில்லாமல் ஆங்கில இலக்கியம் இல்லை. இவரை வாசிக்காத ஆங்கில வாசகர்களும் இல்லை. இரண்டே நாவல்கள். ஒன்று Animal Farm. மற்றையது 1984. இரண்டுமே உலகத்தை புரட்டிப்போட்ட புத்தகங்கள். இரண்டுமே சர்வாதிகாரத்தையும், இடதுசாரித்துவம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்களையும் போட்டு தாளித்த நூல்கள். ஸ்டாலினின் சோவியத் ஒன்றியத்தின் அநியாயங்களை, முறைகேடுகளை சொல்லிய நூல் தான் Animal Farm. ஸ்டாலின், ஹிட்லர் போன்றவர்கள் என்ன தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால், அதே போல கொடுங்கோல் ஆட்சியை அழியாமல் தொடர்ந்திருக்கலாம், மக்களை ஒடுக்கியிருக்கலாம் என்று கூறி எம்மை மிரட்டும் நூல் தான் 1984. தலைவர் இந்த இரண்டு நூலையும் எழுதியது நாற்பதுகளில். உலகப்போருக்கு பின்னர், பிரிட்டன் சனநாயகம் சர்வாதிகாரத்துக்குள் நுழைந்துவிடும் என்று அவர் நினைத்தார். சோவியத் யூனியனை கண்டு பயந்தார். ஸ்டாலின் தான் அந்த Big Brother. Animal Farm இல் அவர் நெப்போலியன்.
images
ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டபத்திரிக்கை ஒன்றில் 2+2 = 5 என்று ஒரு சுலோகம் இருக்கும். ஐந்தாண்டு திட்டத்தை நான்காண்டுகளில் முடிப்போம் என்று சொல்லும் அர்த்தத்தில் உருவானது அதை. ஒர்வல் அதை செம தாக்கு தாக்கியிருப்பார்.
In the end the Party would announce that two and two made five, and you would have to believe it. It was inevitable that they should make that claim sooner or later: the logic of their position demanded it. Not merely the validity of experience, but the very existence of external reality, was tacitly denied by their philosophy. The heresy of heresies was common sense. And what was terrifying was not that they would kill you for thinking otherwise, but that they might be right. For, after all, how do we know that two and two make four? Or that the force of gravity works? Or that the past is unchangeable? If both the past and the external world exist only in the mind, and if the mind itself is controllable—what then? 
1984 வாசித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் காலத்தில் நடந்த நடக்கின்ற பல விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதை என் மனதுக்கு எப்படி தோன்றியதோ அதே நேர்மையுடன் எழுத விளைகிறேன்.

எட்வேர்ட் ஸ்நோடௌன்

ஒரு பொது எதிரியைக்காட்டி மிரட்டிக்கொண்டே மக்களின் மனித உரிமையை மீறும் செயல். அவர்களை தீவிரமாக கண்காணிப்பது. இப்போது ஸ்நோடௌன் மூலம் தெரியவந்திருகிறது. இந்தோனேஷியா அதிபர், மனைவி, பிள்ளைகளின் டெலிபோனை கூட ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். … அப்படியே 1984.
நாவலில் இந்த கண்காணிப்பு மூலை முடுக்கெல்லாம் இருக்கும். ஒரு டெலிஸ்கிரீன் எல்லா இடமும் இருக்கும். வீட்டில் கூட இருக்கும். காட்டுக்குள் போனால் கூட ஆங்காங்கே மைக்ரோபோன் இருக்கும். வீட்டுக்கு வெளியே எப்போதுமே ஹெலிகப்டர் சுற்றிக்கொண்டிருக்கும்.
orwell_snowden_obama
2011ம் ஆண்டு ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கையையும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க வாரண்ட் தேவையில்லை என்ற சட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டது. நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
“இந்த சட்டத்தை கொண்டுவந்தால், ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளையும் 24மணிநேரமும் கண்காணிக்க உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடுமே, இது கிட்டத்தட்ட 1984 நாவலில் உள்ள நாடு போலவே அமைந்துவிடுமே?”

மகிந்த - பெரிய அண்ணர்

நாடு முழுக்க கொளுத்த மீசையுடன் பெரிய அண்ணரின் படம் இருக்கும்போது மகிந்த நினைவு வந்தே தீரும். இல்லாத எதிரியை இருக்கு என்று பூச்சாண்டி காட்டியும், வெளிநாடுகளை சாட்டு சொல்லியும், மக்களை மீது தேசப்பற்று என்ற ஆயுதத்தால் கட்டிப்போட்டிருக்கும் தந்திரோபாயம் 1984 இல் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும்.  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் எல்லா சுகங்களையும் அனுபவிக்க, கொஞ்சம் படித்த மத்தியதர வர்க்கத்தை இவர்கள் மனமாற்றி வைத்திருக்க, அடித்தட்டு எண்பது வீதமான மக்கள் இந்த சர்வாதிகாரம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் கிரிக்கட், சினிமா, பைலா, சுற்றுலா என்று இருக்கும் நிலையும், அடிக்கடி மேலைத்தேய நாடுகளையும், புலிகளையும் சகட்டு மேனிக்கு திட்டுவதும் … அப்படியே 1984.
commonwealth.jpg.size.xxlarge.letterbox
ஓப்ரையன் சொல்லுகின்ற ஒவ்வொரு வசனங்களும் கோத்தா சொல்லுவது போல இருக்கும்.
எஸ். எம். சந்திரசேனா காபினட் அமைச்சராக இருக்கிறார். வடமத்திய மாகாண தேர்தல் வருகிறது. அதிலே அவருடைய தம்பி எஸ்.எம்.ரஞ்சித் முதலமைச்சராக வேண்டும். ஆனால் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் முக்கிய பொறுப்பில் இருக்கமுடியாது என்று மகிந்த சொல்கிறார்! ஆமாம் மகிந்த தான் சொல்கிறார். ஆக சந்திரசேனா அமைச்சு பொறுப்பில் இருந்து விலக, ரஞ்சித் முதலமைச்சர் ஆகிறார். மக்கள் என்னே ஆட்சி என்கிறார்கள். ஒருவருடம் கழிகிறது. இப்போது அதே ரஞ்சித் முதலமைச்சர் ஆகஇருக்கும்போதே சந்திரசேனவுக்கு மீண்டும் காபினட் அமைச்சு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. எவனும் கேள்வி கேட்கவில்லை. மக்கள் இப்போதும் என்னே ஆட்சி என்கிறார்கள். மனதார வாழ்த்துகிறார்கள். ஆ ஊ என்றால் புலிகளை ஒழித்தவர்கள், நன்றே செய்வார்கள் என்கிறார்கள்.  அப்படியே 1984.
மகாவம்சத்தில் தமிழ் அமைச்சர்கள் பற்றி கதை இல்லை. ஈழத்தில் தமிழர்கள் வந்தேறிகள். சிங்களவர் பூர்வீகர். ஈழப்பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் தமிழரே. இன்னும் ஒரு இருபதாண்டில் யாழ் நூலகம் எரித்தது தமிழர் ஆகலாம். 83 கலவரத்திலும் சிங்களவரே அதிகம் இறந்து படலாம்.
“He who controls the past controls the future. He who controls the present controls the past.”

மாத்தையா -  சரத் பொன்சேகா - முள்ளிவாய்க்கால் வைத்தியர்கள்

அடெல் பாலசிங்கம் எழுதிய “சுதந்திர வேட்கையில்” மாத்தையா சம்பவத்தை பூடகமாக குறிப்பிட்டிருப்பார்.  மாத்தையாவை கைது செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தபின்னர், அவர் ஓடிவந்து அன்ரன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம். தன்னை இப்படி கைது செய்வது நியாயம் இல்லை என்று சொன்னாராம். ஆனால் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு றோவோடு தொடர்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் மாத்தையா அப்போதும் உயிருடன் விட்டுவைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஒரு நாள் அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி காண சந்தித்தபோது மாத்தையாவை பார்க்கவேண்டும் என்றிருக்கிறார். மாத்தையாவை காட்டினார்கள். உடல் மெலிந்து, மனம் நொடிந்து மெலிதாக இருந்த மாத்தையாவை அனிதாவுக்கு காட்டுகிறார்கள். “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது “நன்றாக இருக்கிறேன்” என்கிறார் மாத்தையா. … அப்படியே 1984.
நாவலிலும் புரட்சியை ஏற்படுத்திய ஆரம்ப தலைவர்கள் பின்னர் துரோகிகளாக இனம்காண படுகிறார்கள். தம் பிழைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் கடந்த கால தீரச்செயலை வின்சன் துரோகசெயலாக கோப்புகளில் மாற்றி அமைக்கிறான். அந்த தலைவர்கள் இறுதியில் ஒரு தேனீர் கடையில் அழுதபடியே சோர்ந்து போய் இருக்கிறார்கள். கொஞ்ச காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.
images (2)
முள்ளிவாய்க்கால் வைத்தியர்கள் நிலைமையும் இத்தைகையதே. அரசாங்கம் அவர்களை பொய்யை உண்மை என்று சொல்ல வைத்தது. ஆனால் சொன்ன அதே வைத்தியர் அமேரிக்கா போய் வேறுவிதமாக சொன்னார்கள். பொன்சேகா மீதும் போலி குற்றச்சாட்டு. கொஞ்சநாள் உள்ளே. இப்போது ஆள் செத்த பாம்பு.
1984 நாவலில் இல் இந்த வகை கொடுமைகள் அடுத்த லெவலில் இருக்கும். சொல்லுபவர்களை மனதார சொல்ல வைப்பார்கள். அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். உண்மை என்று நம்பியே சொல்லுவார்கள். அப்படி சலவை செய்யப்படுவார்கள். இந்த இடத்தை பாருங்கள்.
The Russians persecuted heresy more cruelly than the Inquisition had done. And they imagined that they had learned from the mistakes of the past; they knew, at any rate, that one must not make martyrs. Before they exposed their victims to public trial, they deliberately set themselves to destroy their dignity. They wore them down by torture and solitude until they were despicable, cringing wretches, confessing whatever was put into their mouths, covering themselves with abuse, accusing in sheltering behind one another, whimpering for mercy. And yet after only a few years the same thing happened over again. The dead men had become martyrs and a degradation was forgotten. Once again, why was it? In the first place, because the confessions that they had made were obviously extorted and untrue. We do not make mistakes of that kind. All the confessions that are ordered here are true. We make them true. And, above all, we do not allow the dead to rise up against us. You must stop imagining that posterity will vindicate you, Winston. Posterity will never hear of you. You will be lifted clean out from the stream of history. We shall turn you into gas and poor you into the stratosphere. Nothing will remain of you: not a name in a register, not a memory in a living brain. You will be annihilated in the past as well as in the future. You will never have existed."

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் போகும் இடமெல்லாம் கமரா இருக்கும். அல்லது போலிஸ் நடமாட்டம் இருக்கும். ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட மக்கள் ஒருவித பயத்திலேயே இருப்பார்கள். கண்காணிக்கப்படுகிறோமோ என்ற அச்சத்திலேயே தவறு செய்யமாட்டார்கள். எதிர்க்கட்சி செயலிழந்து விட்டது. ஒருமுறை ஒரு எதிர்க்கட்சி தலைவர், இலங்கை வம்சாவழி, ஓரளவுக்கு புகழ் பெற்றுக்கொண்டு வந்தார். அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு. முறைகேட்டு குற்றச்சாட்டு. உள்ளே போனார். ஜட்டிவரை சொத்தை இழந்தார். அரசியலில் காணாமல் போனார். அப்படியே 1984. எதிர்க்கட்சி பலம்பெருவதை நாம் விரும்பவில்லை என்பார் லீ சியாங் யுங். எதிர்கட்சிகள் வென்ற ஓரிரு சீட்டுகளிலும் அபிவிருத்தி கொஞ்சம் குறையும். … அப்படியே 1984.
surveillance-cameras
We know that no one ever seizes power with the intention of relinquishing it. Power is not a means; it is an end. One does not establish a dictatorship in order to safeguard a revolution; one makes the revolution in order to establish the dictatorship. The object of persecution is persecution. The object of torture is torture. The object of power is power. Now do you begin to understand me?

1984 திரைப்படம்.

இந்த நாவல் திரைப்படமாக 1954 இலும் பின்னர் 1984 இலும் வந்தது. நாவலை வாசிக்காமல் பார்த்தால் ஒரு மண்ணும் விளங்காது. Vendetta போன்ற படங்களில் இந்த நாவலின் தாக்கம் அதிகம் இருக்கும்.
படத்தை பார்க்கமுதல் நாவலை வாசியுங்கள். முன்முடிபுகள் இல்லாமல் வாசியுங்கள். நாமிருக்கும் உலகத்தை ஓரளவுக்கு புரிய உதவும். திடீரென்று வின்சன் போன்று உணர்வீர்கள்.

இந்த வார நகைச்சுவை கவிதை.

எ எச் எம் அஸ்வர், இலங்கை அரசாங்கத்தின் தேசியப்பட்டியல் எம்பி. இவர் பாராளுமன்றத்தின் மகிந்த பட்ஜட் தாக்கல் செய்தபின்னர் வாழ்த்தி எழுதிய கவிதையின் சில பகுதிகள். (நன்றி வீரகேசரி)
தலைவரே நீடுழி வாழ்க!
photo-6இது முன்னர் வாசித்த
பட்ஜெட் அல்ல
ஒரு மன்னர் வாசித்த
பட்ஜெட்
ஒரு ‘வின்னர்’ (Winner)
வாசித்த பட்ஜெட்
செலவை
அரசு ஏற்றுக்கொண்டு
வரவை
பொதுமக்களுக்கு தந்த
வரவு –செலவுத்திட்டம்
உலக அரங்கிலே
இமாலய உச்சியைவிட
உயர்ந்த இடத்தில்
அதிமேதகு
ஜனாதிபதியே நீங்கள்
இந்த
பொன்மண் ஈன்ற
பொன்மனச்செம்மலே
நாட்டு மக்களை
எல்லா விதத்திலும்
தன்னிறைவு காண வைக்கும்
பட்ஜெட்
தந்தவரே
எங்கள்
இலங்கை தாய்த்திரு மண்ணின்
இடங்களை எல்லாம் பாருங்கள்
நாடு, நகர வனப்பினை
நவின்றிட -
அதன் புகழ் பாடிட
ஓரிருநாள் போதுமா
இலங்கையர்கள் நாங்கள்
பெருமையால் பூரித்துப்போயுள்ளம்
எங்கள் நாட்டு மன்னரே – வின்னரே
பொதுநலவாயத்தின் சக்கரவர்த்தியே – நீங்கள்
வாழ்க - நீடூழி வாழ்க.

பார்சன் என்கின்ற ஒருவர் பெரிய அண்ணரை பார்த்து பரவசப்பட்டு பேசுவதை நாவலில் வாசித்தபோது அஸ்வரின் இந்த கவிதை ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
அப்படியே 1984.
&&&&&&&&&&&&&&
படங்கள் : இணையத்தில் சுட்டது.


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக