Skip to main content

Posts

Showing posts with the label நூல் விமர்சனம்

என் மக்களின் கனவு

“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாக்கப்படுகின்றன.” “My People’s Dreaming”. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி இயற்கையோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு சேர்த்து விளக்கும் புத்தகம் இது. யூலின் தேசத்துப் பழங்குடியின் மூத்தவரான மக்ஸ் டுலுமன்முன் என்பவரோடான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூலாகும். புத்தகம் முழுதும் அங்கிள் மக்ஸ் பழங்குடி மனிதர்களின் நிலத்தினுடனான உறவை விரிவாக விளக்குகிறார்.

மழையின் கதை

நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது? முதல் வரியினூடாகத்தான். “We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling. In Faha, County Clare, everyone is a long story” இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

"பதாகை" இணைய இதழில் பொண்டிங் சிறுகதை பற்றி வெளிவந்திருக்கும் விமர்சனம். ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு பொண்டிங் சிறுகதைக்கான சுட்டி பொண்டிங் நன்றி.

மருதூர்க்கொத்தன் கதைகள்

“மரையாம் மொக்கு”. ஒரு கடலோரக் கிராமத்தில் வாழும் வறுமை மீனவரான காத்தமுத்துவின் கதை.  “முன்னங்கை பருமனனான நேரான வரசங்குத்திய சாணளவு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒரு பாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில விட்டு இறுக்கி அடிச்சி இணைக்கிறதுதாண்டா மரையாம் மொக்கு”  என்று கிழவர் ஆதம்பாவா “மரையாம் மொக்கு”வுக்கு விளக்கம் கொடுப்பார். மரையாம் மொக்கு என்பது வாவியில் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணம். சில்லி வலையை நீர்ப்பரப்பினுள் வளைத்துக்கட்டி நீரடியில் ஒளிந்துகிடக்கும் மீன்களை வெருட்டி வெளிக்கொணர்வதற்காக, நீரைத் தாம்தூம் என்று அடித்துக் கலக்குவதற்கு மரையாம் மொக்கு பயன்படும்.  காதர் பக்கென்று கேட்பான். “மரையாம் மொக்கைத் தூக்கிப்பிடித்தா தூரத்திலிருந்து பார்ப்பவனுக்கு ரொக்கட் லோஞ்சர் மாதிரிதானே தெரியும்?”

சதைகள்

  “அழகியல் சார்ந்தும் அதன் அமைப்பு வடிவம் சார்ந்தும் நவீனத் தமிழ் இலக்கியப் பிரதிகளின் நீட்சியாகவே அனோஜன் பாலகிருஷ்ணனின் பிரதிகளைப் பார்க்கமுடிகிறது” என்ற பதிப்பாளர் குறிப்போடு ஆரம்பிக்கிறது “சதைகள்” சிறுகதைத்தொகுப்பு. மொத்தமாகப் பத்து சிறுகதைகள். அநேகமானவை சமூகக்கதைகள். சிலது பாலியலைப் பற்றிச் சொல்லுகின்றன. சில நம் சமூகத்தின் உள்ளீடாக புரையோடிப்போயிருக்கும் சாதியச்சிக்கல்களைப் பேசுகின்றன. சிலது புலம்பெயர்ந்தவர் வருகையினை எதிர்கொள்ளும் உள்ளூர்க்காரர்களின் உணர்வுகளைப்பேசுகிறது. சிலது காதல். சிலது முன்னைய காதல். ஆங்காங்கே இயல்பான அரசியல். இப்படிப் பத்துக்கதைகளும் சுற்றுகின்றன.

ஞானம் சஞ்சிகையின் "ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்"

அனைவருக்கும் வணக்கம். சிறுகதைகள். சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.

ஆதிரை

      ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “ நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை …” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “ அண்ணை வெளிக்கிடுங்கோ …” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “ என்னை விடு. நீ போ ” “ ஷெல்லடி கூடுதண்ண … வாங்க போவம் ” “ டேய் … நாயே … ஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே …. நீ போ … நான் வரேல்ல ” அத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. “ குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா … என்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே …” அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். “ என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே …” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின. மறுநாள் காலை , இயக்கத்தின் தமிழர் ‘ புனர்வாழ்வு ’ கழகத்தைச் சேர்ந்த

BOX கதைப்புத்தகம்

    கார்த்திகை என்ற அந்தச் சிறுவன் தனது கண்களில் நீர் படரப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் தனது கைகளை உயர்த்தியவாறு “ ப ப ப ப ப ” எனக் கத்திக் குழறியவாறே அந்த விளையாட்டை நிறுத்துமாறு சிறுவர்களிடம் சைகைகளால் மன்றாடினான். ஆனால் சிறுவர்கள் விளையாட்டை இலேசில் நிறுத்துவதாகயில்லை. அவர்கள் உண்மையிலேயே இராணுவமாகவும் புலிகளாகவும் சனங்களாகவும் காயம் பட்டவர்களாகவும் செத்தவர்களாகவும் உடல்களாகவும் இரத்தமாகவும் தசையாகவும் அந்தப் பெட்டிக்குள் சந்நதத்தில் இயங்கிக்கொண்டிருந்தனர். -- BOX கதைப் புத்தகம்

நாச்சார் வீடு

நாச்சார் வீடுகள். நடுவிலே செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து, சுற்றிவரத்' திண்ணை அமைத்துப் பின்னர் அதனைச் சுற்றி அறைகளை அமைத்திருப்பார்கள். திண்ணையின் உள்புற சுவர்கள் பூராக ரயில் டிக்கட் எடுத்தவர்களின் படங்கள் தோற்றம் மறைவோடு உக்கிப்போய் காட்சியளிக்கும். திண்ணை மாடங்களில் உக்கிய நிலையில் ஒரு கந்தபுராணம், அந்திரட்டிக் கல்வெட்டு, பழைய பஞ்சாங்கங்கள் என அடுக்கியிருக்கும். பஞ்சாங்கத்தின் உள்ளே ஒரு பக்கத்தில் குட்டி குட்டிப் கட்டங்களால் நிரம்பிய பக்கம் ஒன்று இருப்பதுண்டு. ஒவ்வொரு கட்டத்துள்ளும் ஒரு இலக்கம் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு சுட்டுவிரலை ஒரு கட்டத்தின்மேலே வைத்துப் பின்னர் அந்தப் கட்டத்தின் இலக்கத்துக்குரிய பலனை அடுத்த பக்கத்தில் அறிந்துகொள்ளலாம். “பணம் வரவு”, “வீண் அலைச்சல்”, “காரியம் சித்தம்” என்று ஏதோ ஒன்று இருக்கும். நாற்சார் வீடுகள் யாழ்ப்பாணம் முழுதுமே பரவலாக இருப்பினும் மானிப்பாய், மருதனார்மடம் உட்பட்ட வலி மேற்கு, வலி வடக்கு பகுதிகளிலேயே அதிகம் என்று ஒரு அநுமானம். கோட்டைப் பிரச்சனை மூட்டம் நாம் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மானிப்பாய் வீடும் ஒரு நாச்சார் வீடுதான். சிறு

கறுத்தக் கொழும்பான்

  எங்கள் ஊரிலே கொழும்பர் மாமி என்கின்ற ஒரு ஆச்சி இருக்கிறார். இப்போது அவரின் வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கலாம். கலியாணம் கட்டி சில மாதங்களிலேயே "கொழும்பர்" இறந்துவிட, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக கொழும்பரை பெயரில் தாங்கியவாறு மாமி தனிக்கட்டையாக வாழ்ந்துவருகிறார். கொழும்பர் மாமி இத்தனையாண்டுகளில் உறவுக்காரர்களின் அத்தனை பிள்ளைகளையும் தூக்கி வளர்த்தவர். என் அம்மாவைத் தூக்கி வளர்த்தவர். என் அண்ணாவை. என் அக்காவை. என்னை. இப்படி சொந்தக்காரர்கள் பலரின் பிள்ளைகளை எல்லாம் தூக்கி வளர்த்தவர். அவரின் வீடு இருப்பது என்னவோ நயினாதீவில். ஆனால் அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா முடிய அவரும் எம்மோடு யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடுவார். மாதத்துக்கு ஒரு வீடு என்று யாழ்ப்பாணத்து உறவுக்காரர்களின் வீட்டில் மாறி மாறித் தங்குவார். எவர் வீட்டிலாவது பிள்ளைப்பேறு, சாமத்தியச் சடங்கு, கலியாணம், செத்தவீடு, ஆட்டத்துவசம் என்றால் முதலில் அழைத்துவருவது கொழும்பர் மாமியைத்தான். மாமி வீட்டில் நின்றாலே போதும். வேலைகள் எல்லாமே தன்னாலே நடைபெறும். வீட்டு வாசல்கட்டில் இருந்து வெத்திலை போட்டபடியே முழு நிகழ்வையும் நெறிப்ப

வேலியே பயிரை மேய்ந்த கதை

  இது அறுபதுகளில் இடம்பெறும் கதை. ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள். அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம். ஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார். ஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன

Go, Set A Watchman

இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set  A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான "To Kill A Mocking Bird" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா?

உனையே மயல் கொண்டு

  சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா,  மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டு, புகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே  குழந்தை.குழந்தைப்பேற்றோடு  ஷோபாவின் தாயும் தந்தையும்  வந்திணைகிறார்கள். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில் ஏற்படும் மாற்றம் புரிகிறது. தன்மீதான கழிவிரக்கம், கோபம் மேலும் அதிகரிக்கிறது.   இந்தச்சமயத்தில் சந்திரன் ஜூலியா என்கின்ற நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்கிறான்.  உதவி செய்கிறான். உறவு ஆரம்பிக்கிறது. ஜூலியா மூன்று முறை திருமணம் செய்து இப்போது தனித்திருப்பவள். இரண்டு பிள்ளைகள். இருவருமே பெரியவர்கள்.வயதுக்கு வந்த மகன் வீட்டில் இருக்கத்தக்கதாகவே ஜூலியா சந்திரனோடு உறவு கொள்கிறாள். சந்திர‌ன் ஷோபா, ஜூலியா என்ற இரு உறவுகளாலும

நெடுங்குருதி

  மழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன.  திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு  ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டு ஒரு புழு எட்டிப்பார்த்தது. அவன் அதோடு பேச விரும்பியவனைப்போல கேட்டான். “மண்ணு ருசியாவா இருக்கு. அதைப்போயி திங்குறே?” மண்புழு சப்தமில்லாமல் ஊர்ந்து திரும்பியது. அவன் தன விரல்களால் மண்புழுவை தொட்டுப் பார்த்தான். அது உடலை நெளித்தது. “உன் வீடு எங்கேயிருக்கிறது … அங்கே மழை பெஞ்சதா?” மண்புழு மண்ணை உமிழ்ந்தபடி சுருண்டது. அவன் ஆத்திரத்துடன் சொன்னான். “பதில் சொல்றயா … இல்லை மண்டையைத் திருகிப் போடணுமா?” மண்புழு எதையும் பொருட்படுத்தாதது போல ஊர்ந்து போகத்துவங்கியது. ஆத்திரத்துடன் மண் புழுவைக் கையில் எடுத்துக்கொண்டுபோய் கோவில் கிணற்றில் போட்டுவிட்டு வந்தான். அதே இடத்தில் இன்னொரு மண்புழு ஊர்ந்துகொண்டிருந்தது. பயத்துடன் அதினிடம் கேட்டான். “உனக்கு நீஞ்சத்  தெரியுமா? எப்படி மேலே ஏறி வந்தே?”

Jaffna Boy - Story of a failed Jaffna Boy

Ladies and Gentlemen. First of all, those who are wondering about, what's this guy doing out here, tell you the truth; I am a gatecrasher! Well. It's a nervous time for me. My hands are bit shaky, as I am trying to put up a brave show here. Let me tell you one thing. In the past ten or fifteen years, I spoke in numerous occasions, presented  number of software designs, convinced strangers to pay their hard earned money for the few thousands lines of software crap. Trust me; in the end they were sold. But never ever, ever never in my life, I was this nervous.

சொல்ல மறந்த கதைகள்

அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்

அசோகனின் வைத்தியசாலை.

  அனைவருக்கும் வணக்கம். நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது; நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது, மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது. இந்த நாவலின் முதல் ஒருசில பக்கங்களை, தோல்வியடைந்த வாசகனாகவே அணுகினேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு. பின்னர் நாவலுக்குள் இழுத்துச்சென்று, என்னையும் ஒரு பாத்திரமாக்கியதன் மூலம் நடேசன் எழுத்தாளராக வெற்றியடைகிறார். என் உடைந்த மூக்கு, உடைந்த மூக்குதான்.

மரணத்தின் பின் வாழ்வு.

  “டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில்.  ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில். உதயன் இறந்துவிட்டான்.

கதாவிலாசம்

ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.

1984

  “சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது” வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன். கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.