Skip to main content

படலை 2017

செய்யும் தொழில் எனக்குப் பிடித்தமாதிரி அமையவேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருப்பதுண்டு. கடந்த பதினைந்து வருடங்களாக அப்படியே அது அமைந்தும்விட்டமை வெறும் தற்செயல் என்று கருத இடமில்லை. நடப்பு வேலையினுடைய நேர்முகத்தேர்வின்போது நிர்வாக இயக்குனருக்குக் கூறியது ஞாபகம் இருக்கிறது.
“Programming is my passion. So long as you let me do what I love to do, I will deliver what you need, not what you ask, but what you need”
இந்தப் புள்ளியில் நான் எப்போதுமே கவனமாக இருப்பதுண்டு. அலுலகத்தின் அன்றாட சில்லறைப்பிரச்சனைகள் என்னை அண்ட ஒருபோதும் விட்டதில்லை. அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்கும் டிசைன்களையோ தீர்வுகளையோ கொடுப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னை நாடி வராதபோதும் தேடிச்சென்று தடை போடுவதுண்டு.

இந்தவருடம் நான் என்னுடைய சக புரோகிராமர்களோடு அதிகம் செலவிடவேண்டிவந்தது. இரண்டு விடயங்களை அவர்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தேன். முதலாவது “Telling a story via programming”. இரண்டாவது, “Slow Programming”. இவ்விரண்டு விடயங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

யோசித்துப்பார்த்தால் இந்த வருடம் எழுத்திலும் “Slow Writing” என்பதைக் கடைப்பிடித்திருக்கிறேன். இந்தப்புள்ளிக்கு வர கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. “நகுலனின் இரவு” எழுதிமுடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. விளமீன் அப்படியே. விரைவிலேயே அவற்றை எழுதி முடித்திருக்கலாம். சிறுகதையை எழுதிமுடித்தால் அத்தோடு அது கொடுத்த அனுபவமும் முடிந்துவிடுகிறது. அதற்காகவே அவற்றை முடிக்காமல் மெதுவாக எழுதுகிறேனோ தெரியவில்லை.

அடுத்தவருடம் அட்டை நத்தையாகலாம்.

இவ்வருடம் படலையில் எழுதியது.

சிறுகதைகள்

  1. சந்திரா என்றொருத்தி இருந்தாள் (ஆக்காட்டி)
  2. விளமீன் (புதிய சொல்)
  3. நகுலனின் இரவு

கட்டுரைகள்

  1. வழிகாட்டிகளைத் தொலைத்தல் (உவங்கள்)
  2. புனைவுக்கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும் (சொல்வனம்)
  3. வெற்றுமுரசு (நடு)
  4. ஜல்லிக்கட்டு
  5. ஊக்கி
  6. கொட்டக்கொட்ட விழித்திருத்தல்
  7. ஜெயக்குமரன் என்கின்ற
  8. கள்ள மௌனம்
  9. பால் சமத்துவத் திருமணங்கள்

பதிவுகள்

  1. ஸ்டூடியோமாமா
  2. மடுல்கிரிய
  3. வட்டக்கச்சி மகாவித்தியாலயம்
  4. நாம் தமிழர்
  5. பாழ்மனம்
  6. ஓய்வு
  7. மாலைப்பொழுதிலொரு மேடை
  8. மச்சாங்
  9. எம்.ஜி.சுரேஷ்
  10. ஆனந்தம் அண்ணை

இக்கரைகளும் பச்சை

  1. பருப்புக்கறி வாங்கிய பெண்
  2. பஹன
  3. மினோஸா
  4. கொண்டாட்டங்களின் நகரம்
  5. நாயகிகள்
  6. அங்காடிப்பெண்

நூல்/திரைப்பட அனுபவங்கள்

  1. மழையின் கதை
  2. என் மக்களின் கனவு
  3. சொல்லவேண்டிய கதைகள்
  4. காற்று வெளியிடை

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக