Skip to main content

Posts

தீண்டாய் மெய் தீண்டாய் : உயிரேந்தும் கற்றாளை

  கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும்  நன்றுமன் வாழி தோழி. உன் கண் நீரொடு ஓராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. - கபிலர் கொஞ்சம் எங்கட தமிழாக்குவோம்.

குட் ஷொட்

  “எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?” வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி நின்றார். கையில் இருந்த கிளாஸில் கொக்கோகோலாவோடு கொஞ்சம் சஷிவாஸ்; அடிக்கடி ஒரு உறிஞ்சி உறிஞ்சினார். “ஆய்க்” என்று காறியபடியே “டொக்” என்று மேசையில் கிளாசை வைப்பார். சற்றுத்தள்ளி சவுண்ட் சிஸ்டத்தில் டீ.ஆர் “ஒஸ்தீ” என்று கதற, சிலர் பிதுக்கி பிதுக்கி ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் டான்ஸில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜூஆர் அடிக்கடி வந்துபோனார். இன்னொருவர் ஆடும்போது அவரின் பொன்ட்ஸ் அண்டர் வெயார் கங்காரு குட்டி போல எட்டிப்பார்த்தது. ஒருவரின் தோளில் இருந்த இரண்டுவயதுக் குழந்தை கைகளால் தாளம் போட்டு சிரித்துக்கொண்டிருந்தது. ஒரு சின்னப்பெடியன் அறையின் லைட்டை ஒன் பண்ணி ஒப் பண்ணிக்கொண்டிருந்தான்.

குளிர்காலம் வந்துவிட்டது

வெள்ளி அதிகாலை. காதுகளில் இலையுதிர் பருவத்து கூதல். கூடவே ஸ்டீபன் ஹோக்கிங்கும் இளையராஜாவும். ரயில் பயணத்தில் யன்னலோரமாய் நான். நீயும் இருந்து பாரேன். நிச்சயம் பிடிக்கும். யன்னலோரத்தையும் பிடித்துவிடுவாய். வரிகள் மாறுகிறது. யன்னலோரமாய் நீ. இயர்போனில் எனக்கு ஒரு காது. உனக்கு மறு காது. "இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே" யூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து? திரும்பிப் பாரேன் என்னை. கருந்துளை விழிகளால் கவர்ந்திழுக்கிறாய். விழுந்தவன் தொலைந்து போனேன். "உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும். நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்" தான் நாணி நமை வாழ்த்தும் தமிழும் தன் வார்த்தை தொலைத்தது! குறுஞ்செய்தி ஒலி. பக்கத்தில் இருந்தும் எஸ்எம்எஸ் அனுப்பும் வேடிக்கை விநோதக்காரியே. இந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது. அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நான் பாட வேண்டாமா?" சுணங்காமல் வந்துவிடு- இங்கே குளிர்காலம் வந்துவிட்டது.

MH 370

சுப்புரத்தினம், கிராம சேவையாளர் கி/255 வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும்.  கடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ...  விதானையாரின் வாசற்படி வந்துவிட்டது.

ஏ ஆர் ரகுமான் - பாகம் 2

  முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக. “அல்லா ராக்கா ரகுமான்” இந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.