உ திரு ஜே.கே அவர்கட்கு, 06.11.2013 அவுஸ்திரேலியா. அன்புத் தம்பிக்கு, நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். நலமே நாடு சேர்ந்தோம். மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது. அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது. மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர். கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர். நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு, நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது. ஆற்றல் கண்டு அதிசயித்தேன். பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள். எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது. சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும். கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு. விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள், மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை. நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம். இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள். வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும். மற்றை இனத்தார் தமது தகுதிகளை, அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர். ஈழ