Skip to main content

Posts

"வெள்ளி" நாவல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன். ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை  அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர்.  எனினும்  ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும்,  அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - 1. பங்கர்

வி லாட்டு மாமரம் பட்டுப்போக ஆரம்பித்திருந்தது . மரத்தடிக்குக் கீழே இருந்த குப்பைக்கிடங்கு எரிக்கப்பட்டதால் , கரி மரத்தடி முழுதும் படர்ந்து கொப்புகளுக்கும் எட்டியிருந்தது . குப்பையை மெதுவாகக் கிளறிப்பார்த்தேன் . ஏதோ ஒரு சத்தம் . என்னடா இது ? அருகில் இருந்த அலவாங்கை எடுத்துக் கொஞ்சம் நன்றாகக் கிளற , ஒரு குரல் . தெளிவாகக் கேட்டது . மீண்டும் அலவாங்கு போட்டேன் . அட .. இது அந்தக் கிழவியின் குரல் அல்லவா . இரைக்க இரைக்கக் கவனுத்துடன் கிளறினேன் . கிழவி இன்னமும் உள்ளேயேதான் இருக்கிறதா ? குரல் இப்போது தெளிவாக கேட்டது .   “ அப்பனே .. முருகா .. பிள்ளையாரப்பா .”

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - முதல் பிரசவம்

அன்றைக்கு ‘ ஸ்ரீ லங்கா பிரஸ் ’ முதலாளியின் வீட்டுவாசலில் நானும் நான்கு நண்பர்களும் நின்றது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது . கதவை அரைவாசி திறந்துவைத்தபடி ‘ என்ன தம்பி , டிக்கட் விக்க வந்திருக்கிறீங்களா ?’ என்று கேட்ட முதலாளியிடம் தயக்கமாகச் சொல்கிறோம் . “ ஒரு புத்தகம் அடிக்கோணும் அங்கிள் ” அப்போது பன்னிரண்டு வயசு . அம்மா காற்றடிக்கவும் அவ்வப்போது கிழங்கு ரொட்டி வாங்குவதற்கும் தந்த பணத்தை மிச்சம் பிடித்து ஒரு நூறு ரூபா சேர்த்து வைத்திருந்தேன் . பிரேம்நாத் , கொஞ்சம் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவன் , ஐந்நூறு ரூபாய் சுளையாக வீட்டிலிருந்து கொண்டுவந்தான் . ரங்கன் அவன் பங்குக்கு ஒரு நூறோ , இருநூறோ . வாயைக்கட்டி வயித்தத்கட்டி கையில் எண்ணூறு ரூபாய்களும் கொஞ்ச சில்லறைகளும் சேர்த்துவிட்டோம் . புத்தகம் பதிப்பிட .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - படலையில் மறுபடியும்

குவாண்டம் விஞ்ஞானத்தில் 'Super Position' என்றொரு வஸ்து இருக்கிறது. ஷிரோடிங்கரின் பூனையை சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒரு மூடிய கறுப்புப் பெட்டிக்குள் இருக்கின்ற பூனையின் நிலை அது. அது உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா, காது குடைகிறதா, காலிடுக்கை சொறிகிறதா என்று வெளியிலிருக்கும் எவருக்கும் தெரியாது. பெட்டி மூடிக்கிடக்கையில் உள்ளே அது எல்லாமுமாக இருக்கிறது. எல்லாவற்றையும் செய்கிறது. எல்லாவற்றையும் செய்யாமலும் இருக்கிறது. அதனைத்தான் 'Super Position' என்பார்கள். நாம் பெட்டியைத் திறந்து அதனைப் பார்க்கும் கணத்தில் அதன் நிலை ஒருப்படுகிறது. நான் அதனைப் பார்ப்பதாலேயே அதனுடைய 'Super Position' நிலை மாறி 'Solid State' நிலையை அடைகிறது. நடைமுறை யதார்த்தத்தில் பெட்டிக்குள் பூனையை அடைத்துவைத்தால் மூச்சுக்காற்று இன்றி அது இறந்துவிடும் என்பீர்களானால், fine, move on. வெள்ளி நாவல் வெளியீட்டோடு ஒரு முடிவை எடுத்திருந்தேன். இனிமேல் ஒரு அன்றாடங்காய்ச்சியாட்டம் முகநூலில் எழுதுவதில்லை என்று. தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் சமகால நாவல் ஒன்று ஒரு வருட காலமாக இழுபடுகிறது. அத

லாஹிரியைச் சந்தித்தல்

ஜூம்பா லாகிரியை நேரிலே பார்க்கப்போகிறேன் என்ற பரவசம் காலையிலேயே ஆரம்பித்துவிட்டது .  

‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா

பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார்.

தீண்டாய் மெய் தீண்டாய் : மயிலான்

“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ. முந்திரி முத்தொளி சிந்திக்கோ, மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே. தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே. தங்க கொலுசல்லே குருகும் குயிலல்லே மாறன மயிலல்லே”