Skip to main content

Posts

தமிழும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையும்

    ஒரு சின்ன சந்தேகம். தமிழை ஏன் நம் குழந்தைகள் கற்கவேண்டும்? இந்த நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம்? தமிழ் படிப்பதால் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது? லத்தீன் மொழி படித்தால்கூட மருத்துவப்படிப்பு வார்த்தைகளை புரிந்துகொள்வது இலகுவாகவிருக்கும். மாண்டரின் படித்தால் எதிர்காலத்தில் உத்தியோகங்களுக்கு பயன்படலாம். பிரெஞ்சு ஸ்பானிஷ் படித்தால்கூட வேறு நாடுகளுக்குச் செல்லும்போது சமாளிக்கலாம். தமிழை எதற்காகப் படிக்கவேண்டும்? பெற்றோர்களின் மொழி தமிழ் என்பதற்காக குழந்தைகளும் படிக்கவேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதால் படிக்கவேண்டுமா? வள்ளுவனும் பாரதியும் கம்பனும் தமிழில் இருப்பதால் தமிழைப் படிக்கவேண்டுமா? அற்புதமான இலக்கியங்கள் இருப்பதால் படிக்கவேண்டுமா? எந்த மொழியில்தான் இலக்கியங்கள் இல்லை? சமகாலத்தில் தமிழில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? யோசியுங்கள். பாரதிக்குப்பிறகு பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறமாதிரி எந்த அறிஞனுமே உருவாகாத, உருவானாலும் அப்படியான அறிஞர்களை பாடத்திடடங்களில் உள்வாங்காத, பழைமையிலே குளிர்காயும் ஒரு மொழியை எதற்கு எம் பிள்ளைகள் மெனக்கெட்டுப் படிக்கவேண்டும்? திருக்கு

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

  கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும். அருகில் இருந்த எலுமிச்சையின் கிளைகளில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை பதியங்களில் தண்ணீர் எந்நேரமும் வடிந்தபடியே இருக்கும். வாழைமரத்தண்டுகளில் எல்லாம் சிறிய சிறிய பொந்துகள் அடித்து அதில் ரோசாச்செடிகள் நட்டு வளர்த்திருப்பார். வாழைக் குலை போட்டிருக்கும். அரையில் ரோசா பூத்திதிருக்கும். ஒரு வாழை பூராக மஞ்சள் கோன்பூ பூத்துக்கிடந்தது. ஒரு பக்கம் அரை அடியில் பிலாமரம் காய்த்திருந்தது. எல்லாவற்றுக்குமேலாக வாசலில் இரண்டு நீளமான தென்னை மரங்கள் எதிரெதிரே வ

தூங்கா வனம்

    தூங்காவனம் உலகத்தரம். அதிலும் அலமேலு மாமி. அசத்திட்டேள் போங்கோ!

ஊரோச்சம் : வட்டக்கச்சி 2

  முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும் இரண்டு முதியவர்கள்.  மணல் அளையும் சிறுவர்கள்.  ஒருபுறம் செவ்வரத்தைகள். ஜாம்பழ மரம். தூர்ந்த மணற்கிணறு ஒன்று. ஒரு வைக்கோல் கும்பி.  தனியாய் தரித்து நிற்கும் டிரக்டர் பெட்டி. மாட்டுவண்டில். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகள். குறுக்கும் நெடுக்குமாக கேறிக்கொண்டிருக்கும் கோழிக்கூட்டம். பிறவுன் கலரில் ராமு. வீடு சிறியது. ஒரு படுக்கையறை. ஒரு குட்டி ஹோல். UNHCR தறப்பாள்போட்டு பெரிதாக்கப்பட்ட திண்ணை. தனியாகக் குசினிக்கு புகைக்கூண்டோடு ஒரு சின்னக் கொட்டில். அவ்வளவும்தான் வீடு.   சிவிக் சென்டர் என்பது அறுபதுகளில் படித்த வாலிபர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வீடும் காணியும் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு வரவழைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. சிவிக்சென்டரின் குடும்பங்கள் அத்தனையுமே விவசாயம் செய்பவை. எல்லோருமே இரு ப

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" - ஒரு வருடம்.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்டது. இந்த நூல் நிறைய வாசகர்களையும் சில நண்பர்களையும் கொண்டுவந்து சேர்த்தது. வெள்ளி, அமுதவாயன் போன்ற நாவல்களை எழுதும் தைரியத்தையும் கொடுத்தது. தொடர்ந்து எழுத்தாகிக்கிடக்க ஊக்கம் தந்தது. அவ்வப்போது என்னத்துக்கு எழுதுவான் என்று தோன்றுகின்ற எண்ணங்களையும் வரவேற்பறையில் சிரித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் அட்டைப்படச்சிறுவன் அடித்துத் துரத்திவிடுவான். என்னளவில் கொல்லைப்புறத்துக் காதலிகள் அடிக்கடி "மரணம் மீளும் ஜனனம்". இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

ஊரோச்சம் : வட்டக்கச்சி 1

நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை.   அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது.   படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் சைக்கிள்களும் சில ம

வரலாறு என்கின்ற பசப்புக்காரி

அவள் மரணித்தபோது வரலாற்றுக் கிடங்கை கிளறி அவளை வெளியே தூக்கிப்போட்டார்கள். உடல் துடித்தது. வெளிச்சம் பாய்ச்சினார்கள். அவள் நிர்வாணம் கூசியது. குறிப்பெடுத்தார்கள். ஒலி பரப்பினார்கள். ஒளி பரப்பினார்கள். சொல் பரப்பினார்கள்.

வேலியே பயிரை மேய்ந்த கதை

  இது அறுபதுகளில் இடம்பெறும் கதை. ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள். அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம். ஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார். ஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன

ஊரோச்சம் 3 : பஸ்

  காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம்.  வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே இறங்கினேன்.  ஒரே சத்தமாகவிருந்தது. எந்தநேரமும் பேரூந்துகள் புழுதியைக் கிளப்பியவாறு வந்துபோய்க்கொண்டிருந்தன. நிலையத்தில் அவ்வப்போது இடம்பெறும் தமிழ் அறிவிப்புகளை வாகன ஹோர்ன்கள் அடக்கிக்கொண்டிருந்தன. பின் வீதியில் மினிபஸ்காரர்கள் குரல்வளை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள். நிறைய மோட்டார் சைக்கிள்கள். லொறிகள். அவ்வப்போது கார்கள். ஒரு பி.எம்.டபிள்யூகூட ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றது . சைக்கிள்களை காண்பது அரிதாக இருந்தது. தூரத்தே விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்று பாடிக்கொண்டிருந்தார். காந்தி சிலைக்கு மேல் நின்ற காகமும் விடாமல் கரைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் யாரேனும் எவரோடேனும் பேசிக்கொண்டேயிருந்தனர். யாருமே அருகில் இல்லை என்றால் போனோடு சாய்ந்தனர். சத்தம் எல்லாவிடமும் வியாபித்திருந்தது. பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கூட பஸ் ஸ்டாண்ட் குந்திலே படுத்து குறட்டைச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த்தார்.   துப்ப

ஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி

  தீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது.  எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில் ஆட்டிறைச்சி வாங்கியே தீரவேண்டும்.  அதுவும் கோண்டாவில் ஆட்டிறைச்சி. "உடுப்பு ஒண்டும் வேண்டாம், காசைத்தாங்கோ, கோண்டாவிலில பங்கொண்டு எடுப்பம்" என்று தீபாவளி புது உடுப்பை தியாகம் செய்யுமளவுக்கு கோண்டாவில் ஆட்டிறைச்சி மீதான காதல் அதிகம். தீபாவளி வருகிறதென்றாலே வாயில் பொரியல் துண்டு கடிபட்டு, மல்லி மிளகாய்க்காரத்தோடு சுரக்கும் அந்த இறைச்சிக்குழம்பு நாக்கில் புரளத்தோடங்கிவிடும். அப்படியொரு ஐட்டம் அது. ஆட்டிறைச்சிக்கறி என்பது வெறும் சுப்பனோ குப்பனோ கிடையாது.