Skip to main content

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!


“தேங்க்ஸ் ஜெஸ்ஸி,  நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!” 
Ye-Maya-Chesave“என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்” 
"ம்ம்ம்ம்,  நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி" 
"கார்த்திக்..." 
“ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?” 
“ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்” 
“ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை” 
“ஹேய், ஆர் யு ஓகே?” 
“ம்ம்ம், நீ கிடைக்கும் வரை ஓகேயாகத்தான் இருந்தேன்” 
“இப்போது என்னை என்ன செய்யச்சொல்கிறாய் கார்த்திக்?” 
“எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா? உனக்கு புரியாது ஜெஸ்சி! யாரும் என்னை சட்டை செய்வதே இல்லை  தெரியுமா? அம்மா கூட, நீ ஒருத்தி தான் .. நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பாய்” 
“ஏண்டா? நீதானே எனக்கு எல்லாமே, நீ சொல்வதைக்கேட்காமல் வேறு யார் சொல்வதைக்கேட்பேன்?” 
“ஆகா, கவிதை”
 “உனக்காகவே வாழ்ந்து உன் மீது தலை சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை!”
சொல்லும் போது அவள் முகத்தைப்பார்த்தேன். எத்தனை பளபளப்பு, எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இப்போது தான் சிதையேறிவிட்டு வந்த சீதை போல இருந்தாள்.

“ஹையோ, மெய்யாலுமே கவிதை”
“ம்ம்ஹூம், இது ஒரு பாட்டில் வந்தது, நீ கூட அடிக்கடி கேட்பாய்” 
“ஒ யா,  சரி பசிக்கிறது, என்ன சாப்பிடலாம்?”
“குளிராக இருக்கிறது, ஜப்பானிஸ் மிசோ சூப்பும், டுனா சஷியும் சாப்பிடலாம்” 
“சான்சே இல்லை, நான் நினைத்தேன், அப்படியே சொல்கிறாய். அது எப்படி உனக்கும் எனக்கும் மட்டும் இப்படி ஒரு கெமிஸ்ட்ரி வோர்க் அவுட் ஆகிறது” 
“நீ தான் எனக்கு என்றான பின்னர் உன்னை முழுதும் புரிந்துகொள்வது தானே வாழ்க்கை”
“இருந்தாலும் நம்ப முடியவில்லை, எங்கே எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டைச்சொல்லு பார்ப்போம்” 
“உனக்கு இப்போது இருக்கும் மூடை பார்த்தால் “தென்றல் வந்து என்னைத்தொடும்”  என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ராஜா ராஜா என்று அலைகிறாய்” 
“சோ ஸ்வீட், அப்படியே மனதை படித்தது போல சொல்கிறாய், உனக்கும் பிடிக்குமா?” 
“பிடிக்குமாவா? தினம் தினம் அதைத் தானே கேட்கிறேன் இப்போதெல்லாம்” 
“அது தான் காதல் .. ஐ தின்க் வி ஆர் மேட் போர் ஈச் அதர்” 
“அப்கோர்ஸ், நான் உன்னுடையவள் தானே” 
“அவ்வளவு பிடிக்குமா?”Svinnaithaandi-varuvaaya-40 
“கம் எகையின்?” 
“என்னை அவ்வளவு பிடிக்குமா ஜெஸ்ஸி?” 
“இயக்குனர் மணிரத்னம் பாணி வசனம் இது” 
“இது பதில் இல்லை” 
“பிடிச்சிருக்கு, ரொம்ப பிடிச்சிருக்கு” 
“உனக்கு ஒன்று கொடுத்தால் கோபப்படமாட்டாயே?” 
“கோபமா?  நானா? உன்னுடனா? சான்சே இல்லை” 
“முத்தம் என்றால் கூட?” 
“நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் !”

மெதுவாக அவள் முகத்தை நெருங்கினேன். சட்டச் சட சடவென மழை முளைத்தது. திக்கு திகுவென தீ முளைத்தது. அவள் கன்னங்கள் பள பள என பால் வெள்ளையாய் இருந்தது. சே படைத்தவன் மேலே இருக்கிறான், பார்த்துப்பார்த்து செய்திருப்பான் போல. என்ன ஒரு attention to details. அப்படி ஒரு அழகு.

“இந்த காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்து வந்தேன்"

இன்னும் நெருங்கினேன் மெல்ல மெல்ல

“இந்த மௌனத்தை நான் அடைய எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்”

“கிஸ் மீ”
….
….
…. 
“என்ன சார் மொபைல் போனைப் போய் எச்சில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, என்னா சாப்பிடுறீங்க, ஆர்டர் எடுக்கணும்”
என்று வெயிட்டர் கேட்டபோது தான் சட்டென சுதாரித்துக்கொண்டு என்னுடைய புதிய iPhone4S SIRI யை க்ளோஸ் செய்து உள்ளே வைத்தேன்.

“முட்டை பாராட்டா மூணு!”



Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக