Skip to main content

Posts

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

  அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட! கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர். கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர். இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர். உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

ஆண்கள் இல்லாத வீடு

முற்றத்து வேம்பு விளக்குமாறால் கூட்டித்தள்ளியும் சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள் மரத்தடி நிழலில் நாற்காலி என் ராங்கிகார அம்மா, கால்கள் மெல்லமாய் தாளம்போட ஏதோ ஒரு பாட்டு நாளை இந்த வேளையோ?  இது நல்ல வேளையோ? எப்படிச்சொல்வேன் நான்? என்னை விட்டு போய்விட்டான் என்றா? அதிர்வாளா? அழுவாளா? யாருக்காக அழுவாள்? ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு. பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன். என்னடா? சொன்னேன். என்னடி சொல்லுறாய்? திரும்பவும் சொன்னேன். போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா? அரற்றினாள் விடம்மா.. போனால் போறான். அம்மாளாச்சி … போயிட்டாரா .. அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ அழுதாள். அரட்டினாள். அதிர்ந்து போனேன் நான். அம்மா நீ வந்து…  உடம்பில் ஏதோ ஊர்வது போல அவனை காதலித்தேனா? அறிந்தேனா புரிந்தேனா? என்ன கருமாந்திரம் செய்தேன் நான்? நான் நினைத்தது தான் அவன் என்றேனோ? அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ? அறியவும் முயலாமல் முனிந்தேனோ? அம்மாவை பார்த்தேன். கண்களால் கோதிவிட்டாள். இந்த அன்பு அவங்கள் இல்லாதவிடத்தில்  அம்மாவின் அன்பு அவளுக்கு என் அன்பு நடக்கும் என்று பயந்தது தான் நடந்த

கள்ளக்காயச்சல்

காலமை வெள்ளன ஏழரை ஆகியும் காந்தனை எழும்பென பெத்தவ கத்தியும் கட்டில விட்டவன் எட்டலை கண்டனை – பெட்ஷீட்டை பட்டென இழுத்தனள். பொட்டென கிடந்தனை. அம்மாவின் அழைப்பு ஆகுதியில் கரைந்தது. அண்ணலின் நடிப்போ மகாநதியானது. அணலை தொட்டதும் தணலாய் கொதித்தது - ஒத்திய புனலின் ஈரத்தில் களவு வெளுத்தது. வெள்ளம் முட்டினாலும் பள்ளிக்கு போகோணும் கள்ளம் நெடிப்பெல்லாம் சல்லிக்கு பெயராது – எள்ளி நகையாடிய அன்னைக்கு வயிற்றில் ஆப்பு வைத்தான் வசை மொழிந்து ஈற்றில் இயக்கம் போவேன் என்றான். இடி விழுந்த மலையானாள் வடு சொன்ன சுடு சொல்லில் மடி கொடுத்த தலைமகளால் பொடி தாங்க முடியுமோ?- கொத்த மல்லி இலை அவித்து சீனி போட்டு கொடுத்தாள் பள்ளிக்கு கள்ளமடித்த காய்ச்சல்கார ..ஆஆஆஆ! நாளும் பொழுதும் நனைவிடை தோய்ந்தால் நாளைய தலைமுறைக்கு விடுவது எதுவோ? – மேகலா நாக்கை அறுப்பது போல நாலு கேள்வியை முறுக்கினாள். வாக்கை கொடுக்கும் வரை ஆளு காதினை திருகினாள்!

சாலையோர தேநீர் கடை

சாலையோர தேநீர் கடை கோடை மழை நாசி நெடி தாவாரத்தில் இரண்டு கதிரை நானிருக்க இழுத்துப்போட்டான் ஏ ஆர் ரகுமான் பிடிக்கும் என்றான்.  ராஜா என்றான் சுஜாதா என்றான். ரசல் பீட்டர் டோம் ஹான்ஸ் என்றான் ராஜபக்ஸ ஒரு ஷிட் என்றான். ராஸ்பெரி கொஃபி இரண்டு நாக்கு புரள ஓர்டர் செய்தான். “70 பர்சன்ட் பொருத்தமாம்” "இந்த பேரண்ட்ஸ் ஆர் சோ சில்லி”  என்று சொல்லி சிரித்தான். “நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்”  - என்று மழையை பார்த்து கவிதை சொன்னான். “Enough is enough. “ “வா போய் நனைவோம்” என்றேன். “சட்டை நனைஞ்சு சளி பிடிக்கும், லேட்டர்” என்றான் “போடா புளுகு மூட்டை”

அவளேகினான்.

மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன. இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல் அவதாரங்களுக்கு தயாராகின்றனர். சூரியன் தீக்குளித்தவன் போல வெப்பம் மேலேறி அலறுகிறான். தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி பதுங்குகுழிகள் தேடுகின்றார்கள். அவள் வருகிறாள். சித்தார்த்தர்கள் போதிமரத்து குயிலிசையில் மயங்குகிறார்கள். ராஜாவின் வீட்டுக்கு ரகுமான் விரைகிறார். வரவேற்பரையிலோ வைரமுத்து. எறும்புக்கும் கவிதை வருகிறது. அவனிடம் வருகிறாள்.

போயின … போயின … துன்பங்கள்!

  “நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req);     லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.

எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

  அவை வணக்கம். தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி. கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே ஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே கேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும் மாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே. தமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே ஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது காலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து என்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.  

எளிய நாய்!

  நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம். அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க.  “Manisha Sur”ஆ வருதா? ஒரு பொம்பிளை படம் இருக்கா? கொஞ்சம் நிறம் குறைஞ்ச பிள்ளை. தலையை ஸ்ட்ரெய்ட் பண்ணி, கண்ணெல்லாம் பெயின்ட் அடிச்சு அரியண்டம் பண்ணியிருக்கும். கடும் நாவல் கலர்ல லிப்ஸ்டிக் அடிச்சிருக்கும்.

And the mountains echoed

நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன  வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா? கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.

நான் … வருவேன்.

  “சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…” “சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …” “நிரு” “ஆ?” “கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்” “ஓ … அப்ப சுரேன் ஓகேயா?” “பெயரை கேட்கிறீங்களா? இல்ல .. ஆளையே ..”